உலகம்

250 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை!

  • April 9, 2026
  • 0 Comments

இஸ்ரேல் நேற்று (08) லெபனான் மீது நடத்திய மிகக்கடுமையான தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவுடன் நிரந்தர அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது “நியாயமற்றது” என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம்

“இஸ்ரேலிய – அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்குவோம்”

  • March 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பிராந்தியத்திலுள்ள அத்தகைய அனைத்துப் பல்கலைக்கழகங்களும் சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர். மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் அனைத்துப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அந்த இடங்களை […]

உலகம் செய்தி

இஸ்ரேல் விடுத்த அவசர உத்தரவு

  • March 22, 2026
  • 0 Comments

தெற்கு இஸ்ரேலின் ஆராட் (Arad) மற்றும் டிமோனா (Dimona) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இஸ்ரேல் முழுவதும் இன்று மற்றும் நாளை நேரடி வகுப்புகளை இரத்து செய்வதாக அந்த நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆராட் மற்றும் டிமோனா பகுதிகளில் நடத்தப்பட்ட 2 ஏவுகணைத் தாக்குதல்களில் சுமார் 100 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் நேரடியாக சமூகமளித்து […]

இலங்கை

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • March 18, 2026
  • 0 Comments

விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலிலிருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். அதன்படி, பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் காலாவதியான அல்லது காலாவதியாகவுள்ள மீள்- நுழைவு விசாக்கள் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்படவுள்ளது. இதேவேளை, இதற்காகத் தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

உலகம்

டுபாய் சொகுசு விருந்தகம் மீது தாக்குதல்

  • March 1, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் பாரிய இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, டுபாயின் புகழ்பெற்ற ‘பாம் ஜுமேரா’ (Palm Jumeirah) பகுதியில் உள்ள ‘ஃபேர்மாண்ட் தி பாம்’ (Fairmont The Palm) ஐந்து நட்சத்திர விருந்தகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்கியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது நால்வர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, பஹ்ரைன் மனாமா நகரில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவு (Fifth Fleet) தலைமையகத்திற்கு […]

இலங்கை உலகம்

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்

  • February 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள் சவூதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பி விடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து […]

உலகம்

சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள ஹமாஸ் – அமெரிக்காவின் அறிக்கையால் பரபரப்பு!

  • October 19, 2025
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது. இந்நிலையில் காசாவில் (Gaza) வாழும் பாலஸ்தீன மக்கள் மீது உடனடி தாக்குதல்களை நடத்த ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று அமெரிக்கா வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாலஸ்தீனியர்களுக்கு (Palestinians) எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறும் செயல் என்றும், மத்தியஸ்த முயற்சிகள் மூலம் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

அமைதி ஒப்பந்தம் அமுல் – மீண்டும் காஸாவுக்குத் திரும்பும் பாலஸ்தீனர்கள்

  • October 11, 2025
  • 0 Comments

காசாவில் போர் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீனர்கள் மீண்டும் அங்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். போரினால் இருப்பிடத்தை இழந்த ஆயிரக்கணக்கான மக்களே இவ்வாறு தமது சொந்த இடங்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தின் முதற்கட்ட உடன்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது. அது பல பாலஸ்தீனர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கிறது. அதே சமயம் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சமும் உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலும் ஹமாஸும் அமைதி உடன்பாட்டை எட்டியிருப்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே […]

உலகம்

இஸ்ரேலுக்கான விசா வழங்குவதை நிறுத்திய இந்தோனேசியா!

  • October 10, 2025
  • 0 Comments

இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுள்ளன. இருப்பினும் இஸ்ரேலுக்கான விசா வழங்குவதை இந்தோனேசியா தொடர்ந்து மறுத்து வருகின்றது. இந்தோனேசியாவில் இந்த மாதம் ஜிம்னாஸ்டிக் (gymnasts) உலக  சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்துகிறது.  இதில் கலந்துகொள்ள இஸ்ரேலியர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக  இந்தோனேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர் இட்டா ஜூலியாட்டி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மையை கொண்ட இந்தோனேசியா பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. பாலஸ்தீன அரசை […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ட்ரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – நெதன்யாகு வெளியிட்ட அறிவிப்பு

  • October 10, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை சமாதான உடன்படிக்கைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சமாதான உடன்படிக்கைக்கு இணங்க வேண்டும் என ஹமாஸ் அமைப்புக்கு டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் இறுதி எச்சரிக்கையை விடுத்திருந்தார். இவ்வாறான நிலையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் சமாதான உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இணக்கப்பாட்டுக்கு அமைய எதிர்வரும் திங்கள் […]