செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 29ஆம் நாள் அகழ்வு பணி நேற்று இடம்பெற்றது. இலங்கை செய்தி

செம்மணியில் 370 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு

  • June 20, 2026
  • 0 Comments

செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் 03 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 29ஆம் நாள் அகழ்வு பணி நேற்று இடம்பெற்றது. இந்த அகழ்வின் போது, 3 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 394 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 370 எலும்புக் கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

போட்டிக்குப் பிறகு மொராக்கோவின் இஸ்மாயில் சைபாரி கொண்டாடுகிறார். செய்தி விளையாட்டு

ஸ்காட்லாந்து அணிக்கு ஏமாற்றத்தை தந்த போட்டி

  • June 20, 2026
  • 0 Comments

2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோ அணி , ஸ்காட்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு (Knockout Round) முன்னேறும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் 64,000-க்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டியில், ஆட்டம் தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள்ளேயே மொராக்கோ அணி முன்னிலை பெற்றது. ரியல் மாட்ரிட் நட்சத்திரம் பிராஹிம் டயஸ் (Brahim Diaz) தூக்கிக் கொடுத்த பந்தை, 25 வயதான இஸ்மாயில் சைபாரி மிக நேர்த்தியாகக் கட்டுப்படுத்தி […]

2026 உலகக் கோப்பை குரூப் C கால்பந்துப் போட்டியின் போது பிரேசிலின் முன்கள வீரர் மேதியஸ் குன்ஹா தனது அணியின் இரண்டாவது கோலை அடித்ததைக் கொண்டாடுகிறார் செய்தி விளையாட்டு

பிரேசில் அபார வெற்றி – வெளியேறியது ஹைட்டி

  • June 20, 2026
  • 0 Comments

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைட்டியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திரமான மேதியூ குன்ஹா இரண்டு கோல்களை அடித்து தனது திறமையை நிரூபித்ததோடு, வினிசியஸ் ஜூனியர் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்தத் தோல்வியின் மூலம் ஹைட்டி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது. பிலடெல்பியா மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாகத் தங்கள் அணிகளை ஆதரித்த நிலையில், […]

ஆப்பிரிக்கர்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கடந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் தென்னாப்பிரிக்காவின் சிரில் ரமபோசாவை நேருக்கு நேர் சந்தித்தார். aappirikkargal thunpuruththappaduvathaagak koorappatta உலகம் செய்தி

தென்னாபிரிக்காவுக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா

  • June 20, 2026
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் HIV பரவலைத் தடுப்பதற்காக வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலகிலேயே மிக அதிகமாக, சுமார் 80 லட்சத்திற்கும் (8 Million) அதிகமான எச்.ஐ.வி HIV பாதிப்புள்ள மக்கள் வாழும் நாடு தென்னாப்பிரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவில் வாழும் சிறுபான்மை வெள்ளை இனத்தவரான ‘ஆப்பிரிக்கானர்’ (Afrikaner) சமூகத்தினரைப் பாதுகாக்க அந்நாட்டு அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டின் பின்னணியிலேயே, நிதி நிறுத்த முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த […]

ஆயமநசகநைடன இடைத்தேர்தலில் Andy Burnham அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமரின் தலைமைப் பதவிக்கு கட்சிக்குள் பலத்த சவால் எழுந்துள்ளது. ஐரோப்பா கல்வி மத்திய கிழக்கு

பிரித்தானிய பிரதமரின் ‘தலை’ குறிவைப்பு

  • June 20, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் Sir Keir Starmer பதவி விலகுவதற்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என கட்சிக்குள்ளேயே கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளன. Makerfield இடைத்தேர்தலில் Andy Burnham அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த வெற்றி, லேபர் கட்சிக்குள் (Labour Party) புதிய தலைமைக்கான போட்டியை உக்கிரமடைய வைத்துள்ளது. குழப்பம், பிளவு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், ஆண்டி பர்ன்ஹாமிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான திட்டங்களை பிரதமர் அறிவிக்க வேண்டும் என லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் […]

மோதல் நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், குறைந்தபட்சம் ஒரு பெட்டியாவது தண்டவாளத்திலிருந்து விலகிச் சென்றிருப்பதைக் காட்டுவதாகத் தெரிகிறது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

Bedford பகுதியில் கோர விபத்து: ரயில் சாரதி பலி – 88 பேர் காயம்

  • June 20, 2026
  • 0 Comments

Bedford பகுதியில் இரு ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில், ரயில் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 89 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தை காவல்துறை ‘பேரிடர் சம்பவமாக’ (Major Incident) அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 11 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்றும், 22 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்றும் East of England ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை மதியம், லண்டன் செயின்ட் பான்க்ராஸ் (London St Pancras) நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு ‘ஈஸ்ட் […]

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் ஜெய் ஷாவுக்கும் (Jay Shah) இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. செய்தி விளையாட்டு

ஜனாதிபதியை சந்தித்தார் ICC தலைவர்

  • June 19, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர் ஜெய் ஷாவுக்கும் (Jay Shah) இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை கிரிக்கெட் சபையை நிர்வகிக்க அரசு தற்காலிகக் குழுவை நியமித்திருப்பது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி ஏற்கனவே தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதோடு, காலதாமதமின்றி ஜனநாயக முறையில் தேர்தல்களை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பு […]

இலங்கை செய்தி

காணி விடுவிப்பு: யாழில் இன்றும் போராட்டம்

  • June 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமையும் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது பாரம்பரியக் குடியிருப்புகளையும் வாழ்வாதாரக் காணிகளையும் தமக்கு உடனே திருப்பித் தர வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இன்றைய போராட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டு, மக்களின் கோரிக்கைகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையில் இன்று கரை ஒதுங்கிய யாழ்.மீனவரின் சடலம் இலங்கை செய்தி

காணாமல்போன யாழ்.மீனவர் தமிழகத்தில் சடலமாக மீட்பு

  • June 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற போது கடலில் தவறி விழுந்து காணாமல்போன இலங்கை மீனவரின் சடலம், தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையில் இன்று (19) சடலமாகக் கரை ஒதுங்கியுள்ளது. நெடுந்தீவுப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி கடலுக்குச் சென்ற சமயம், எதிர்பாராதவிதமாகக் கடலில் தவறி விழுந்து காணாமல்போனார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இலங்கை […]

செம்மணியில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்றனர். இலங்கை செய்தி

நீதிகோரி செம்மணியில் மாபெரும் போராட்டம்

  • June 19, 2026
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ – 9 பிரதான வீதியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பிரதானிகள் ஆகியோர், செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதிக்கு இன்று மாலை நேரில் வருகை தரவுள்ளனர். அமைச்சரின் […]