ரஷ்யாவில் களமிறங்கும் வடகொரிய ஏவுகணைப் படை: உக்ரைன் அதிர்ச்சி
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் ஆறு ஏவுகணை ஏவுதளங்களுடன் கூடிய வடகொரிய ஏவுகணைப் படைப்பிரிவு ஒன்று மேற்கு ரஷ்யாவில் களமிறக்கப்பட்டு வருவதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைனிடம் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனையும் ரஷ்யா, சுட்டு வீழ்த்துவதற்கு மிகவும் கடினமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகிறது. 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ரஷ்யா […]













