செய்தி பொழுதுபோக்கு

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74.

கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த இவர், பிவாண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

பிரதீப் ராவத்தின் மேனேஜர் சித்தார்த் திவாரி இந்த துயரமான செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பிரதீப் ராவத் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

ஆனால், சில மாதங்களுக்கு முன் அவருக்கு மீண்டும் புற்றுநோய் தீவிரமடைந்தது.

இதனால்,கடந்த சில மாதங்களாகவே அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு தினங்களுக்கு முன் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று ( 5-) நடைபெறும் என கண்ணீருடன் தெரிவித்தார்.

மகாபாரதம் டூ கஜினி வரை

நடிகர் பிரதீப் ராவத், பி.ஆர்.சோப்ராவின் ‘மகாபாரதம்’ தொடரில் அஸ்வத்தாமனாக நடித்து தன் கலைப்பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட லகான் படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் கவனத்தை ஈர்த்தார்.

தமிழில் இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கஜினி’ படத்தில் இரட்டை வேடத்தில் வந்து மிரட்டினார். அதே கதாபாத்திரத்தில் அமீர் கான் நடித்த இந்தி ரீமேக்கிலும் நடித்து பாலிவுட்டிலும் புகழ்பெற்றார். மேலும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி, போஜ்புரி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

பிரதீப் ராவத்தின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி