இலங்கை செய்தி

தமிழர் தாயகத்தில் காணி ஆக்கிரமிப்பு: ஐரோப்பாவில் முறைப்பாடு!

  • June 12, 2026
  • 0 Comments

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரியிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் நேரில் முறையிட்டுள்ளார். ஐரோப்பிய வெளிநாட்டு நடவடிக்கை சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவரான சார்ல்ஸ் வைட்லியை, பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் சொல்லிசைப் பாடகரான கணேஷ்குமார் சங்கீத்ஷன் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து […]

இலங்கை செய்தி

தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்: பதறவைக்கும் செம்மணி!

  • June 12, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது ஒரு சிறுவரின் எலும்புக்கூட்டுத் தொகுதி உட்பட 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 341ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 22ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. நேற்றைய அகழ்வின் போது புதிதாக 2 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. […]

உலகம் செய்தி

உலகப் பொருளாதாரத்தை மிரட்டும் மத்திய கிழக்கு போர்!

  • June 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை உலக வங்கி குறைத்துள்ளது. எரிசக்தி விநியோகத்தில் கடுமையான தடைகள் ஏற்பட்டால், இந்த வளர்ச்சி விகிதம் 1.3 சதவீதமாகக் குறையக்கூடும் என்றும் உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, போரின் தாக்கத்தால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈராக் போன்ற எரிசக்தி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. ஜனவரி மாதக் கணிப்புகளுடன் ஒப்பிடுகையில், தற்போது மூன்றில் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் பிரதமர் சர்வாதிகாரி: துருக்கி ஜனாதிபதி சாட்டையடி!

  • June 11, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் ஒரு சர்வாதிகாரி என்று துருக்கி ஜனாதிபதி Recep Tayyip Erdogan சொற்கணை தொடுத்துள்ளார். இதற்கு பதிலடியாக எர்டோகனை யூத விரோதி என நெதன்யாகு விமர்சித்துள்ளார். லெபனான் மற்றும் சிரியாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகள் தனது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று துருக்கி கருதுகிறது. இருப்பினும், தனது நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்காக எங்கு வேண்டுமானாலும் இராணுவத் தாக்குதல் நடத்தத் தயார் என இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாகத் தொடரும் இந்த […]

இலங்கை செய்தி

யாழ். கலாசார மையம் குறித்து மாநகரசபையில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றம்!

  • June 11, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் கலாசார மையத்தை யாழ்ப்பாணம் மாநகர சபையின் முழுமையான பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையை விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்று யாழ். மாநகர சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று மேயர் வி.மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் கலாசார மையத்தின் தற்போதைய பராமரிப்பு விவகாரங்கள் குறித்துக் கடுமையான விவாதங்கள் இடம்பெற்ற நிலையிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. மாநகர சபையால் நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “கடந்த 2014 ஆம் […]

இலங்கை செய்தி

விஜய் ஈழத்து மருமகன்: வடக்கு மீனவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை!

  • June 11, 2026
  • 0 Comments

“தமிழக முதலமைச்சராக தற்போது பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யிடம் ஈழத்து மீனவர்களாகிய நாம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம். அவர் ஒரு ‘ஈழத்து மருமகன்’ என்ற ரீதியில், எமது வாழ்வாதாரப் பிரச்சினைக்கான தீர்வை அவரிடம் கேட்பதற்கு எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கின்றது.” – இவ்வாறு அகில இலங்கை மீனவர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு […]

இலங்கை செய்தி

காணிகளை விடுவிக்கக் கோரி 15 ஆம் திகதி யாழில் போராட்டம்!

  • June 11, 2026
  • 0 Comments

வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்த கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், உயர் பாதுகாப்பு வலயங்களாக முடக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டம் குறித்து மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் ஊடகங்கள் மூலம் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர். அந்த அறிவித்தலில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி எமது சொந்த […]

இந்தியா உலகம் செய்தி

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் பலி!

  • June 11, 2026
  • 0 Comments

Palau நாட்டுக் கொடியுடன் பயணித்த Settebello கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் Sarbananda Sonowal  இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணை கடல்வழிப் பாதையில் விதிக்கப்பட்டுள்ள முற்றுகையை மீறியதாகக் குற்றம் சாட்டி, புதன்கிழமையன்று அந்த எண்ணெய் கப்பலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடக்கத்தில் மூன்று இந்திய மாலுமிகளைக் காணவில்லை என்றும், 21 இந்தியப் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் […]

இலங்கை செய்தி

எல்-நினோ காலநிலையால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆராய்வு!

  • June 11, 2026
  • 0 Comments

எல்-நினோ காலநிலையால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மகாவலி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மின்சார உற்பத்தி லங்கா தனியார் நிறுவனம் மற்றும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு தனியார் நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் […]

ஐரோப்பா செய்தி

ஈரான்மீது புதிய தடைகளை EU விதிக்க வேண்டும்: இத்தாலி வலியுறுத்து!

  • June 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க ஈரான் ஒத்துழைக்க மறுத்தால், அந்த நாட்டின் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டுமென இத்தாலி வலியுறுத்தியுள்ளது. ஈரான் தனது தவறான போக்கைத் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என இத்தாலியப் பிரதமர் Giorgia Meloni, நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். G& உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இத்தாலியின் வெளியுறவுக் கொள்கை குறித்த நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். மேலும், இஸ்ரேலிய அமைச்சர் ஒருவரின் […]