இலங்கை ஐரோப்பா செய்தி

கல்வி ரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இலங்கை, பிரிட்டன் ஆராய்வு!

  • May 21, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரிட்டன் கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சனைச் ( Bridget Phillipson) சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இதன்போது, நிறுவன ரீதியான கூட்டுறவைப் பேணுதல், உயர்கல்வியின் தரத்தை உறுதிசெய்தல், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தரப்பினரும் அவதானம் செலுத்தினர். அத்தோடு, இலங்கைக்கும் பிரிட்டனுக்கும் இடையில் கல்வித் துறையில் நிலவும் நீண்டகால, வரலாற்று ரீதியான ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி, மாணவர் பரிமாற்றம் (Student mobility), […]

இலங்கை செய்தி

சீதனக் கொடுமை: யாழில் இளம் பெண் உயிர்மாய்ப்பு!

  • May 21, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சீதனக் கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த பெண், இளைஞர் ஒருவரை இரண்டு வருடங்களாகக் காதலித்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டார். எனினும், இவர்களது திருமணத்தைக் கணவனின் தாயார் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. திருமணத்தின் பின்னர், 25 பவுண் […]

இலங்கை செய்தி

யாழில் ஹெரோயினுடன் கைதான பெண்ணுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறை!

  • May 21, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணொருவருக்கு 7 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. யாழ்ப்பாணம் – பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தண்டனைக்குள்ளானவராவார். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாத பகுதியில், மேற்படி பெண் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார். அதன்போது அவரது உடைமையிலிருந்து 1 கிராம் 475 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு […]

இலங்கை ஐரோப்பா செய்தி

இலங்கையின் நல்லிணக்க முயற்சி குறித்து பிரிட்டனுக்கு பிரதமர் விளக்கம்!

  • May 21, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய , அந்நாட்டு வெளிவிவகாரச் செயலாளர் Yvette Cooper ஐ சந்தித்து இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, டித்வா சூறாவளியினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் பின்னர், மீள்கட்டுமான மற்றும் மீட்சிப் பணிகளுக்காக பிரிட்டன் வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புகளுக்குப் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கைக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்பையும் பிரதமர் பாராட்டினார். இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி, […]

செய்தி விளையாட்டு

பங்களாதேஷின் சாதனை வெற்றியால் இந்தியாவுக்கு பின்னடைவு!

  • May 21, 2026
  • 0 Comments

2025-27 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி 6 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி, டெஸ்ட் சாம்பியன் தரவரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மண்கவ்விய பாகிஸ்தான் அணி 8ஆவ இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மேற்படி தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 87.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றது. இலங்கை அணி 6 ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியா செய்தி

ஹார்முஸ் நீரிணை: புது வியூகம் வகுக்கிறது இந்தியா!

  • May 21, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை பகுதியை இந்திய டேங்கர் கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து செல்வதற்குரிய திட்டங்களை இந்தியா வகுத்து வருகின்றது என தெரியவருகின்றது. இதற்கமைய இந்திய டேங்கர் கப்பல்கள், ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும்போது இந்திய போர்க்கப்பல்கள் அவற்றுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் ஏற்பாடுகள் இடம் பெறவுள்ளன. இதற்குரிய திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு இறுதி ஒப்புதல் அளித்தவுடன் இந்திய டேங்கர் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை பகுதிக்கு செல்லும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு!

  • May 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான வேலையின்மை விகிதம் (Unemployment Rate) எதிர்பாராத விதமாக 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. சந்தை வல்லுநர்கள் இந்த விகிதம் மாற்றமின்றி நிலையாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், இந்த திடீர் உயர்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் காரணமாக நிறுவனங்கள் புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதால், மத்திய வங்கி வட்டி விகிதங்களை மேலும் உயர்த்துவதைத் தவிர்க்கும் என […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

23 அமைச்சர்கள் பதவியேற்பு: 5 சதாப்தங்களுக்கு பிறகு காங்கிரசுக்கு அதிஷ்டம்!

  • May 21, 2026
  • 0 Comments

தமிழ் நாட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களாக இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டு பதவியேற்பு விழா ஆரம்பமானது. விஜய் முதல்வராக பதவியேற்றபோதும் கூட முதலில் வந்தே மாதரம் பின்னர் தேசிய கீதம் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து என்று இசைக்கப்பட்டு அதற்கு கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியிலும் முதலில் வந்தே […]

இலங்கை செய்தி

வடக்குக்கான திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு!

  • May 21, 2026
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் (யு.என்.டி.பி.) எமது மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் உண்மையான தாக்கங்களையும் அதன் அடைவுகளையும் துல்லியமாக மதிப்பீடு செய்வது, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை இன்னும் வினைத்திறனான முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப் பெருமளவில் உதவும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் சுயாதீன மதிப்பீட்டகத்தின் பிராந்திய மதிப்பீட்டு ஆலோசகர் டேவிட் சிலட்டரி மற்றும் மதிப்பீட்டு ஆய்வாளர் கெட்டலினா சலசார் ஆகியோருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான […]

உலகம் செய்தி

ஈரானில் அசுர வேகத்தில் மரண தண்டனை நிறைவேற்றம்!

  • May 21, 2026
  • 0 Comments

ஈரானில் மேலும் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரும் பயங்கரவாத அமைப்பை உருவாக்கி, கிளர்ச்சியில் ஈடுபட்டதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் மீது குற்றவியல் குழுக்களை அமைத்தல், துப்பாக்கிச் சூடு நடத்துதல் மற்றும் படுகொலை முயற்சிகளை முன்னெடுத்தல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான தஸ்னிம், இந்த நபர்கள் அரசாங்கத்திற்கு எதிராக திட்டமிட்டுச் செயல்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, […]

error: Content is protected !!