இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
“ நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. தேசிய பாதுகாப்பு என்பது உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த நாள் முதலே தேசிய பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றது. அந்த வகையில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் பாதுகாப்பு தொடர்பில் கடந்த காலங்களில் சிற்சில சம்பவங்கள் இடம்பெற்றன. அவையும் தற்போது தீர்க்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் தேசிய பாதுகாப்பு உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார் பாதுகாப்பு பிரதி அமைச்சர்.




