சிறைச்சாலை கலவரம்: உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தலா 20 லட்சம் ரூபாவுக்கு மேல் இழப்பீடு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேற்படி மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மோதலில் காயமடைந்த அதிகாரிகளுள் எழுவர் இன்னும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது தடிகள், கூரிய ஆயுதங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.
கலவர தினத்தன்று சமயல் அறைக்குள் புகுந்து அங்கிருந்த கத்திகள் மற்றும் ஏனைய பொருட்களை எடுத்து கைதிகள் ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர். அதிகாரிகள்மீது வீசுவதற்கு தேய்காய் உள்ளிட்டவற்றையும் எடுத்துள்ளனர் என தெரியவந்துள்ளது.




