செய்தி விளையாட்டு

முதலிடத்துடன் அடுத்த சுற்றுக்குள் நுழையுமா RCB?

  • May 22, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் 67 ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru (RCB), Sunrisers Hyderabad ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். RCB அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகளை குவித்து முதல் அணியாக play-off சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ஆட்டங்களில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் […]

செய்தி விளையாட்டு

படுதோல்வியுடன் வெளியேறியது CSK அணி!

  • May 22, 2026
  • 0 Comments

2026 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றோடு Chennai Super Kings (CSK) அணி வெளியேறி உள்ளது. Gujarat Titans உடனான கடைசி லீக் ஆட்டத்தில் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் CSK அணி படுதோல்வி அடைந்தது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற CSK அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களைப் […]

இலங்கை செய்தி

பிள்ளையானை சிறையில் சந்தித்தது உண்மைதான்: ஒப்புக்கொண்டார் நாமல்!

  • May 22, 2026
  • 0 Comments

“போரை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்தான் பிள்ளையான். எனவே, அவர் அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டால் நாம் அவருக்காக முன்னிலையாவோம். நாம் பிள்ளையானை திருட்டுதனமாக சந்திக்கவில்லை.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் நேற்று மேலும் கூறியவை வருமாறு , “பிள்ளையானைச் சந்திப்பதற்காக நாம் சுவர் ஏறி குதித்து சிறைச்சாலைக்குள் செல்லவில்லை. சட்டப்பூர்வமாகவே அவரை சந்தித்திருந்தோம். பிள்ளையானை சந்திக்கும்போது சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் அருகில் இருந்தார். சிறைச்சாலைக்குள் இரகசிய […]

அரசியல் இலங்கை செய்தி

” வடக்கு, கிழக்கு எல்லைகளை காத்த காவலர்களே மலையக மக்கள்”

  • May 22, 2026
  • 0 Comments

“லயன் வாழ்க்கையை ஒழிக்க வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “ மலையக மக்களை நாம் தேசிய இனமாக அங்கீகரித்துள்ளோம். மலையக மக்களின் உரிமைக்காக எமது கட்சி எல்லா விதத்திலும் குரல் கொடுத்து வந்துள்ளது. மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு […]

ஆஸ்திரேலியா செய்தி

இஸ்ரேல் படைகள் கொடுமைப்படுத்தின: நாடு கடத்தப்பட்ட தன்னார்வலர்கள் குற்றச்சாட்டு!

  • May 22, 2026
  • 0 Comments

இஸ்ரேலால் காவலில் வைக்கப்பட்டிருந்த Global Sumud Flotilla குழுவைச் சேர்ந்த 11 ஆஸ்திரேலிய ஆர்வலர்கள் தற்போது துருக்கியை சென்றடைந்துள்ளனர். தனது படைகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 422 வெளிநாட்டு ஆர்வலர்களையும் நாடு கடத்திவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர்களில் முதல் குழுவினர் துருக்கியை வந்தடைந்துள்ளனர். இதில் 11 ஆஸ்திரேலியர்கள் உள்ளடங்கியுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் தங்களை இஸ்ரேலியப் படைகள் மிகவும் மோசமாக நடத்தியதாகவும், தாக்கியதாகவும் விடுவிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இஸ்ரேலிய அமைச்சரின் முறையற்ற நடத்தையை அந்நாட்டுப் பிரதமரே கண்டித்துள்ள நிலையில், […]

இலங்கை செய்தி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்து!

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கை மீண்டுமொரு பயங்கரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான அவசரகால தேசிய தீர்வுகளை வகுப்பதற்காக உடனடியாகச் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எதிர்க்கட்சிகள் கூட்டாக அவசர கோரிக்கை விடுத்துள்ளன. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான விசேட கூட்டத்தின் பின்னரே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் […]

அரசியல் இலங்கை செய்தி

பிரபாகரனின் சடலம் எங்கே? 17 வருடங்களுக்கு பிறகு பொன்சேகா வெளியிட்ட பகீர் தகவல்!

  • May 22, 2026
  • 0 Comments

” பிரபாகரனின் சடலத்துக்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும். அது பற்றி பகிரங்கமாக கூறமுடியாது. அவ்வாறு கூறினால் அந்த இடத்துக்கு சென்று சிலர் நினைவேந்தல் நடத்தக்கூடும். நினைவகம் அமைக்க முற்படக்கூடும்.” இவ்வாறு இலங்கையில் இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே பொன்சேகா மேற்படி பரபரப்பு தகவலை வெளியிட்டார். “போர் தொடர்பில் நீங்கள் இன்றளவிலும் மனதுக்குள் நீங்கள் இரகசியமொன்றை மறைத்து வைத்துள்ளீர்கள். எனக்குகூட அதை பற்றி […]

இலங்கை செய்தி வணிகம்

ஆட்டம் காணும் இலங்கை ரூபா: எகிறும் டொலர் பெறுமதி!

  • May 21, 2026
  • 0 Comments

அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 354 ரூபாவைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவின் மதிப்பு கடந்த சில நாட்களாக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் என எதிரணிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் இன்று அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 354.03 ரூபாவாகவும், கொள்வனவு விலை 342.63 ரூபாவாகவும் உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி நேற்று […]

இலங்கை செய்தி

“இஸ்ரேல் பிடியில் சிக்கியுள்ள இலங்கை பெண்ணை மீட்கவும்”

  • May 21, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய படைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சமீரா மஹ்பூப்டீனின் எதிர்காலத்தில் கூடுதல் கவனமெடுத்து, அவரை விடுவிப்பதற்கான ராஜதந்திர நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார் வௌிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டு வந்துள்ள அவர், இது குறித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளதாவது: காசாவுக்கான மனிதாபிமான உதவிகளுடன் துருக்கியிலிருந்து புறப்பட்ட படகுகளை இஸ்ரேல் கைப்பற்றி, சர்வதேச […]

இலங்கை செய்தி

“போராட்டம் வெடிக்க முன் மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கவும்” திகா எம்.பி. வலியுறுத்து

  • May 21, 2026
  • 0 Comments

“மலையக மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு முன்னர் காணி உரிமையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் வலியுறுத்தினார். மலையக மக்களுக்கான காணி உரிமையின் அவசியத்துவத்தை வலியுறுத்தி ராதாகிருஷ்ணன் எம்.பியால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே திகாம்பரம் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் திகாம்பரம் எம்.பி. கூறியவை வருமாறு , “மலையக மக்களின் காணி பிரச்சினையென்பது நெடுநாள் […]

error: Content is protected !!