செய்தி

அலி கமேனியின் இறுதி பிரார்த்தனையின் போது முகமூடி அணிந்து காணப்பட்ட மர்ம நபர் யார்?

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி பிரார்த்தனையின் போது காணப்பட்ட மர்மமான முகமூடி அணிந்த நபரின் அடையாளம் குறித்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி பிரார்த்தனையின் போது காணப்பட்ட மர்மமான முகமூடி அணிந்த நபரின் அடையாளம் குறித்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

ஈரானிய ஊடக அறிக்கைகளின்படி, முகமூடி அணிந்த அந்த நபர், அலி கமேனியின் மூத்த மகனான முஸ்தபா கமேனியின் மகனும், அவரது கொள்ளுப் பேரனுமான முகமது ஜாவத் கமேனி ஆவார்.

பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் அலி கமேனி வீரமரணம் அடைந்தார்.

அந்தத் தாக்குதல்களில் முகமது ஜாவத் கமேனியும் படுகாயம் அடைந்து, அவரது முகத்தில் ஆழமான காயங்களும் தீக்காயங்களும் ஏற்பட்டன என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தக் காயங்கள் காரணமாக, இறுதிச்சடங்கு பிரார்த்தனையின் போது அவர் தனது முகத்தை ஒரு கருப்பு முகமூடியால் மூடிக்கொண்டார்.

முன்னதாக, முகமூடி அணிந்திருந்த அந்த நபர், அலி கமேனியின் மகனும் தற்போதைய உச்ச தலைவருமான மொஜ்தபா கமேனிதான் என்று சமூக ஊடகங்களில் யூகங்கள் பரவி வந்தன.

அறிக்கைகளின்படி, தாக்குதலுக்குப் பிறகு மொஜ்தபா கமெனியின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டன.

தாக்குதல் நடந்த நேரத்தில் அவர் அதே இல்லத்தில் இருந்ததாகவும், ஆனால் வேறொரு அறையில் இருந்ததால் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், அவரது கால்கள், கைகள் மற்றும் புஜங்களில் காயங்கள் ஏற்பட்டன, மேலும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஊடக அறிக்கைகளின்படி, தாக்குதலுக்குப் பிறகு மொஜ்தபா கமேனி பொதுவெளியில் தோன்றவோ அல்லது எந்த உரைகளையும் ஆற்றவோ இல்லை.

அதே சமயம், அவர் ஈரானிய இராணுவத் தலைமை மற்றும் மூத்த மதத் தலைவர்களுடன் கையெழுத்துச் செய்திகள் மூலம் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆறு நாட்கள் துக்க அனுசரிப்புகளுக்குப் பிறகு, அலி கமேனி தனது சொந்த ஊரான மஷ்ஹதில் உள்ள இமாம் ரெஸா (அலை) தர்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய ஊடகங்களின்படி, சுமார் 43 மில்லியன் மக்கள் துக்க நிகழ்வுகளில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி