இலங்கை செய்தி

மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற STF அதிகாரி நீரில் மூழ்கி பலி

கிண்ணியாவில் இருந்து மகாவலி ஆற்றை கடந்து , மணல் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக சென்ற விசேட பொலிஸ் அதிரடிப்படை சார்ஜன் , நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (13) மீட்கப்பட்டுள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியாவில் இருந்து மகாவலி ஆற்றை கடந்து , மணல் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக சென்ற விசேட பொலிஸ் அதிரடிப்படை சார்ஜன் , நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (13) மீட்கப்பட்டுள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் விசேட பொலிஸ் அதிரடிப்படை கந்தளாய் சூரியபுர முகாமில் கடமையாற்றி வரும் 67763 சாந்த கிஹான் ரணசிங்க (39வயது) என அடையாளம் காணப் பட்டுள்ளார்.

பத்தரமுல்ல ஜெயவதன கமவை சேர்ந்த இந்த பொலிஸ் சார்ஜன் அடங்கிய குழு ஒன்று நேற்று (12) பிற்பகல் சோதனைக்கு சென்றதாகவும் அப்போது அவர் நீர் மூழ்கி காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து கடற்படையினர் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய தேடுதலின் போது அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சேறுநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை