அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் நடக்குமா?

  • June 11, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருக்கும் எந்தவொரு முடிவையும் அரசாங்கம் எடுக்கவில்லை. அதேபோல ஜனநாயகம் என்ற போர்வையில் சட்டத்துக்கு புறம்பாகவும் செயல்பட முடியாது என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறியவை வருமாறு , “நடத்தப்பட வேண்டிய தேர்தல்கள் எல்லாம் சட்டத்தின் பிரகாரம் நிச்சயம் நடக்கும். எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் […]

அரசியல் இலங்கை செய்தி

60 நாட்களுக்குள் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்!

  • June 11, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இரத்துச் செய்யப்பட்டு, புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று எதிரணிகளால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக, பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவு முன்மொழியப்பட்டுள்ளது. அது ஆபத்தான பல பிரிவுகளை உள்ளடக்கியிருப்பதாக சட்ட நிபுணர்கள், மனித உரிமை அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

உலகம் செய்தி

மிரட்டல்களுக்கு அடிபணியோம்: ட்ரம்புக்கு ஈரான் பதிலடி!

  • June 10, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் அடிபணியோம் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இவ்வாறு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்ட ஈரான் ராணுவ செய்தி தொடர்பாளர் Abolfazl Shekarchi , அமெரிக்காவின் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வலிமை தங்களுக்கு இருப்பதாக சூளுரைத்தார். ஈரானின் இறையாண்மைக்கு எதிராக விடுக்கப்படும் […]

உலகம் செய்தி

கடுமையான விலையை கொடுக்க நேரிடும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

  • June 10, 2026
  • 0 Comments

ஈரான் தனது செயல்களுக்குக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். “ஈரான் அமைதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைக்குப் போதிய கால அவகாசம் எடுத்தும் உடன்படவில்லை. தற்போது அவர்கள் இதற்குரிய விலையைத் தந்துதான் ஆக வேண்டும். ஈரானிய ராணுவம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. அவர்களின் கடற்படை மற்றும் விமானப்படையின் பெரும்பகுதி இப்போது இல்லவே இல்லை; அவர்கள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். ஈரான் வெறும் பேச்சோடு சரி, செயலில் ஒன்றும் இல்லை” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். […]

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 12 எலும்புக்கூடுகள் அடையாளம்!

  • June 10, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மேலும் 12 மனித என்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்பட்டது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 21ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று புதன்கிழமை (10) இடம்பெற்றன. இன்றைய அகழ்வின் போது 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 4 சிறுவர்களுடைய என்புக்கூடும் , 2 சிசுக்களின் என்புக்கூடுகள் உட்பட்ட 7 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. அதனடிப்படையில் செம்மணி மனித […]

அரசியல் இலங்கை செய்தி

படையினருக்காக நாம் களமிறங்குவோம்: நாமல் சூளுரை!

  • June 10, 2026
  • 0 Comments

” நாம் படையினருக்காக முன்னிலையாவோம். இதனை எவராலும் தடுக்க முடியாது. சுரேஷ் சலே தொடர்பான விசாரணையை அரசியல் மயப்படுத்த வேண்டாம்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு, “ பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் இங்கு கதைக்கப்பட்டது. உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடலே, தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார மேடையில் ஒலிக்கப்பட்டது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முகநூலில் அதனை […]

இந்தியா செய்தி

காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

  • June 10, 2026
  • 0 Comments

காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து தமிழக முதல்வர் விஜய் பேச்சு நடத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் விஜய், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று டெல்லிக்கு புறப்பட்டார். முதலமைச்சர் விஜய் டெல்லி சென்றடைந்ததும் , காங்கிரசின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் […]

அரசியல் செய்தி

முடிவுக்கு வந்தது எதிரணியின் சத்தியாக்கிரகம்!

  • June 10, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்காக முன்னெடுக்கப்பட்டுவந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார் எனச் சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், சுரேஷ் சலேவுக்கு நீதி கோரியும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பமானது. முன்னாள் அமைச்சர்களான விமல்வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர, டிரான் அலஸ் மற்றும் சிங்கள தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் போராட்டத்தை […]

அரசியல் இலங்கை செய்தி

தகவல்களை மறைக்கும் சுரேஷ் சலே: கோட்டாவுக்கு எதிரான தடையால் குழப்பத்தில்!

  • June 10, 2026
  • 0 Comments

” சத்தியாக்கிரகப் போராட்டங்களுக்கு அடிபணியப்போவதில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடரும்.” – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். அரசாங்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தடுப்பு காவலில் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார் என வெளியாகும் தகவல்களையும் அவர் அடியோடு நிராகரித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியவை வருமாறு , “தடுப்பு காவலில் இருக்கும் சந்தேக நபரொருவருக்கு வழங்கப்படும் அத்தனை உரிமைகளும் […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் அட்டூழியம்: 13 பேர் பலி!

  • June 10, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானின் Tyre மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 13 பேர் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். Tirdaba , Deir Qanoun மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புப் பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒன்பது வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட Tyre நகரத்தில் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் திர்தாபா நகரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் […]