மலையகத்தில் ஆட்டோ விபத்து: இருவர் பலி – மூவர் படுகாயம்
நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல நீர் வீழ்ச்சி பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இரு வயோதிபர்களே இவ்வாறு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இரு பாடசாலை மாணவர்களும், ஆட்டோ சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இரு சிறுவர்களும், ஆட்டோ ஓட்டுநரும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். வீதியை விட்டு விலகி ஆட்டோ பள்ளத்தில் வீழ்ந்ததிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.




