உலகம் செய்தி முக்கிய செய்திகள்

முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் ஜனாதிபதி அழைப்பு

  • August 27, 2026
  • 0 Comments

இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அதிகளவிலான ஒற்றுமையும் கூட்டுறவும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், பிராந்தியத்தின் பாதுகாப்பை அனைத்து முஸ்லிம் நாடுகளும் இணைந்து கூட்டுப் பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பிற நாடுகளின் தலையீட்டிற்கு இடம் தராமல், தமது பகிரப்பட்ட நலன்களை அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம் நாடுகள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். டெஹ்ரானில் நடைபெற்ற 40-வது சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே […]

நீதித்துறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும், இந்த விடயத்தில் மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பக்கமே நிற்கின்றார்கள் என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

நீதித்துறை மறுசீரமைப்பு தொடரும்: அரசு திட்டவட்டம்

  • August 27, 2026
  • 0 Comments

நீதித்துறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும், இந்த விடயத்தில் மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பக்கமே நிற்கின்றார்கள் என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதித்துறை மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை முன்னெடுப்பதற்காகவே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் தங்களின் ஆணையை வழங்கினார்கள். அதன் ஒரு அங்கமாகவே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு எவ்வாறு அச்சுறுத்தலாக அமையும் என்பது புரியவில்லை. நீதித்துறையை […]

நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் வரை இன்னமும் மாயமாகியுள்ளனர். இப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலகம் செய்தி

மீட்பு பணி தீவிரம்: 5,000 இற்கு மேற்பட்ட படையினர் களமிறக்கம்

  • August 27, 2026
  • 0 Comments

நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் வரை இன்னமும் மாயமாகியுள்ளனர். இப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவர்களில் சுமார் 700 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலைப் பகுதிகள் நிறைந்த இந்த எல்லை மண்டலம், மலையேற்றப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் அதிகம் நடமாடும் பகுதியாகும். பாதிக்கப்பட்ட கரடுமுரடான மலைப் […]

நடிகர் ரஜினி நடித்துவரும் 'தர்மன்' திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயாவும் நடிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவாஜி படத்துக்கு பிறகு தற்போதே அவர் ரஜினியுடன் நடிக்கின்றார். செய்தி பொழுதுபோக்கு

19 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் ஸ்ரேயா

  • August 27, 2026
  • 0 Comments

நடிகர் ரஜினி நடித்துவரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயாவும் நடிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவாஜி படத்துக்கு பிறகு தற்போதே அவர் ரஜினியுடன் நடிக்கின்றார். திலீப்​கு​மார் இயக்​கத்​தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெ​யிலர் 2’ திரைப்படம் அக்​டோபர் மாதம் வெளி​யாக இருக்​கிறது. இந்தப்படத்​தின் முதல் பாடல் சமீபத்​தில் வெளியாகி வரவேற்பைப் பெற்​றது. அதில் நடிகை பூர்ணா நடனம் ஆடியிருந்தார். இப்​படத்​துக்கு பிறகு அஸ்​வத் மாரி​முத்து இயக்​கும் ‘தர்மன்’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதன் 3-ம் கட்ட படப்பிடிப்பு ஹைத​ரா​பாத்​தில் […]

ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத் தீயால் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்பிரிக்கா உலகம் செய்தி

அல்ஜீரியாவில் காட்டுத் தீ: 12 பேர் பலி – 54 பேர் காயம்

  • August 27, 2026
  • 0 Comments

ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவின் வடகிழக்கு பகுதிகளில் தீவிரமாகப் பரவி வரும் காட்டுத் தீயால் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 54 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ மிகக் கடுமையாகப் பரவி வரும் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இவ்விபத்து குறித்து உள்நாட்டு விவகாரங்கள் துறை அமைச்சர் சயீத் சயவுத் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், ஜிஜேல் (Jijel) மாகாணத்தில் 5 பேரும், பெஜாயா (Bejaia) மாகாணத்தில் 4 பேரும், டிசி உஸு (Tizi […]

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபுசார் ஏவுகணைகளைத் தயாரிக்கத் தனியார் துறைக்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியா செய்தி

இந்திய பாதுகாப்பு துறையில் புரட்சி: நவீன ஏவுகணைகளைத் தயாரிக்க இந்தியா திட்டம்

  • August 27, 2026
  • 0 Comments

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபுசார் ஏவுகணைகளைத் தயாரிக்கத் தனியார் துறைக்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, 1,000 முதல் 1,500 கி.மீ. தொலைவு வரையிலுள்ள இலக்குகளைத் தாக்கும் ‘நீண்டதூரத் தரைவழித் தாக்குதல் க்ரூஸ் ஏவுகணை’ (LRLACM) மற்றும் 150 முதல் 500 கி.மீ. இலக்கைத் தாக்கும் ‘பிரளய்’ (Pralay) ஏவுகணைகளைத் தயாரிப்பதற்காக முன்னணித் தனியார் நிறுவனங்களை அடையாளம் காணும் பணியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான […]

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் 10 தொன் நிவாரணப் பொருட்களையும், மருந்துகளையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்தியா செய்தி

நேபாளத்துக்கு நிவாரணப் பொருட்கள், மருந்துகளை அனுப்பியது இந்தியா

  • August 27, 2026
  • 0 Comments

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் 37.5 தொன் நிவாரணப் பொருட்களையும், மருந்துகளையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. முதற்கட்டமாக நேற்று 10 தொன்எடையுள்ள நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து இந்திய விமானப்படை தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, இந்திய வான்படை விரைந்து செயல்பட்டு ‘சி-130ஜே’ (C-130J) விமானம் மூலம் 10 டன் நிவாரண மற்றும் […]

இமயமலைப் பகுதியில் பாறைகளும் சேறும் நிறைந்த பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து உருவான பேரழிவுத் திடீர் வெள்ளப்பெருக்கால், நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் பகுதிகளில் 800 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 1,500 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாளத்தில் 800 வெளிநாட்டவர்கள் உட்பட 1500 பேர் மாயம்

  • August 27, 2026
  • 0 Comments

இமயமலைப் பகுதியில் பாறைகளும் சேறும் நிறைந்த பாரிய நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றில் விழுந்ததைத் தொடர்ந்து உருவான பேரழிவுத் திடீர் வெள்ளப்பெருக்கால், நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் பகுதிகளில் 800 வெளிநாட்டவர்கள் உட்பட சுமார் 1,500 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். லாசாவையும் (Lhasa) காத்மாண்டையும் இணைக்கும் மலையேற்றப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் அதிகம் நடமாடும் மலைப் பகுதியில் புதன்கிழமை இப்பேரழிவு ஏற்பட்டது. துண்டிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் அவசர உதவிகள் […]

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாகவுள்ளது என்றும், இந்தச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இலங்கை செய்தி

“பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கம்”

  • August 27, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாகவுள்ளது என்றும், இந்தச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீக்கம் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “கடந்த 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றளவும் அமுலில் உள்ளது. […]

ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் போது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும் ரயில்வே செயற்பாடுகள் தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்வதற்கும் தடை விதித்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் கடமை நேரத்தில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

  • August 27, 2026
  • 0 Comments

ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் போது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும் ரயில்வே செயற்பாடுகள் தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்வதற்கும் தடை விதித்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சில ஊழியர்கள் கடமை நேரங்களில் சமூக ஊடகங்கள் மூலம் முக்கிய தகவல்களை பொதுவெளியில் வெளியிடும் நிலை அவதானிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றறிக்கைக்கு அமைய ரயில்வே கட்டுப்பாட்டு அறைகள், எஞ்சின் கட்டுப்பாட்டு அறைகள், வேலைத்தளம் அல்லது எந்தவொரு வளாகத்திலுமிருந்து எந்த அதிகாரியும் அல்லது ஊழியரும் ரயில்வே […]