இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு, சுற்றுலா உட்பட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்தியா செய்தி

இந்தியா, நியூசிலாந்துக்கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • July 11, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு, சுற்றுலா உட்பட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோர் முன்னிலையில் இதற்குரிய நிகழ்வு இடம்பெற்றது. நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லக்சன் இடையே தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதையடுத்து, பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், சுற்றுலா, விளையாட்டு, பேரிடர் மேலாண்மை ஆகிய ஐந்து துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தோ […]

நேட்டோ உச்சிமாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இராணுவக் கூட்டணிகளை வலுப்படுத்துவதாகவும், ஆயுதப் பெருக்கத்தை தீவிரப்படுத்துவதாகவும் வடகொரியா சனிக்கிழமை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேட்டோ நாடுகளுக்கு வடகொரியா நேரடி எச்சரிக்கை

  • July 11, 2026
  • 0 Comments

நேட்டோ உச்சிமாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இராணுவக் கூட்டணிகளை வலுப்படுத்துவதாகவும், ஆயுதப் பெருக்கத்தை தீவிரப்படுத்துவதாகவும் வடகொரியா சனிக்கிழமை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது. வடகொரியாவின் நியாயமான இறையாண்மை உரிமைகளை நேட்டோ தலைவர்கள் ஒரு அச்சுறுத்தலாக சித்தரிப்பதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வடகொரியாவின் உத்தியோகபூர்வ அரச ஊடகமான KCNA-வில் வெளியாகியுள்ளது. ஆயுதங்களுக்கான செலவினங்களை அதிகரிப்பதன் மூலமும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பை மேற்கொள்வதன் […]

மாகாண சபை தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, டித்வா பேரிடர் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலுக்குரிய நிதி நிவாரணத்துக்காக பயன்படுத்தப்பட்டதா?

  • July 11, 2026
  • 0 Comments

மாகாண சபை தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, டித்வா பேரிடர் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மறுசீரமைப்பதற்காக கொடையாளர்களால் வழங்கப்பட்ட நிதி தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்படவில்லை. சட்டவிரோதமான கணக்கிலும் வைப்பிலிடப்படவில்லை. அனைத்து நிதி உதவிகளும், திறைசேரியின் பிரதிச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் பராமரிக்கப்படும் ஒரு சிறப்பு கணக்கு ஊடாகவே கையாளப்படும். எனவே, […]

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை இலங்கை செய்தி

சிறைச்சாலை வன்முறை: உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு

  • July 11, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற தடுப்புக்காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. 31 உயிர்களை பலியெடுத்த சிறை வன்முறையின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையிலிருந்து உயிர்பிழைத்த கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வெலிக்கடை சிறைக்குள் […]

தான் படுகொலை செய்யப்படும் பட்சத்தில், ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களைத் தான் விட்டுச் சென்றுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள மரண வாக்குமூல எச்சரிக்கை

  • July 11, 2026
  • 0 Comments

தான் படுகொலை செய்யப்படும் பட்சத்தில், ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களைத் தான் விட்டுச் சென்றுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தன்னைக் கொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டி வருவதாக இஸ்ரேல் தன்னிடம் எச்சரித்ததாக வெளியான செய்திகளுக்குப் பிறகு, ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியின் போதே டிரம்ப் இதனைத் தெரிவித்தார். “நான் நீண்ட காலமாகவே அவர்களின் இலக்குப்பட்டியலில் இருந்து வருகிறேன்,” என்று டிரம்ப் கூறினார். “ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், […]

திருகோணமலை வைத்தியசாலையில் பெண் ஊழியர் ஹொரோயின் போதைப் பொருளுடன் கைது இலங்கை செய்தி

திருகோணமலை வைத்தியசாலையில் பெண் ஊழியர் ஹொரோயின் போதைப் பொருளுடன் கைது

  • July 11, 2026
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த சுத்திகரிப்பு பெண் ஊழியரொருவர் ஹொரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சுத்திகரிப்பு பிரிவில் கடமையாற்றி வந்த ஊழியரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து 36 கிரேம் 180 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. திருகோணமலை என்சி வீதியில் வசித்து வந்த குறித்த […]

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து கொலம்பியா அணி வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் வீரர் ஜமிண்டன் காம்பாஸிற்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்து, இந்த மிரட்டல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. செய்தி விளையாட்டு

உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றம்: கொலம்பியா வீரருக்கு மரண அச்சுறுத்தல்

  • July 11, 2026
  • 0 Comments

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து கொலம்பியா அணி வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் வீரர் ஜமிண்டன் காம்பாஸிற்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்து, இந்த மிரட்டல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “விளையாட்டு அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எந்தவொரு வீரரோ அல்லது அவர்களது நெருங்கிய வட்டத்தில் உள்ள எவருமே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படக் கூடாது,” என்று கொலம்பியா கால்பந்து கூட்டமைப்பு (FCF தெரிவித்துள்ளது. 16-வது சுற்று ஆட்டத்தில் (round of 16) சுவிட்சர்லாந்திடம் பெனால்டி ஷூட்-அவுட் […]

ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது. செய்தி விளையாட்டு

பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின்

  • July 11, 2026
  • 0 Comments

ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது. போட்டியின் 88-வது நிமிடத்தில், பெல்ஜியம் அணியின் மாற்று இலக்குக் காவலர் (goalkeeper) சென்னே லாம்மென்ஸ் தடுத்தாடிய பந்தை மீட்டு, மைக்கேல் மெரினோ ஸ்பெயினின் வெற்றி கோலை அடித்தார். ஸ்பெயின் அணிக்காகத் தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் மெரினோ கடைசி நேர நாயகனாக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், டல்லாஸில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், இந்தத் தொடரின் விருப்பமான அணியாகக் கருதப்படும் பிரான்ஸை […]

மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனி தெஹ்ரானுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள தான் விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப புதன்கிழமை (ஜூலை 08) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

பேச்சுகளை தொடருமாறு ஈரான் கோரிக்கை: ட்ரம்ப் தகவல்

  • July 10, 2026
  • 0 Comments

ஈரான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக 60 நாட்கள் போரை நிறுத்த இரு தரப்புகளும் இணங்கியிருந்தன. இந்நிலையிலேயே, அமெரிக்கா கடந்த 7ஆம்திகதி ஈரான் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. இவ்வாறானதொரு பின்னணியில்தான், […]

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா செய்தி

40 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து சென்ற ‘இந்திய பிரதமர்’: வரலாறுகாணாத வரவேற்பு

  • July 10, 2026
  • 0 Comments

இரு நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நியூசிலாந்து சென்றடைந்தார். ஆக்லாந்து விமான நிலையத்தில் அவரை, அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆரத்தழுவி வரவேற்றார். இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். கடந்த 40 […]