உலகம் செய்தி

லாவோஸில் குகைக்குள் சிக்கிய ஏழு பேரில் ஐவர் உயிருடன் மீட்பு!

  • May 27, 2026
  • 0 Comments

லாவோஸில் (Laos) பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து குகையொன்றுக்குள் கடந்த ஒரு வாரமாகச் சிக்கியிருந்த 7 பேரில் ஐவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். லாவோஸின் மத்திய பகுதியில் Xaisomboun மாகாணத்தில் உள்ள குகை ஒன்றிற்குள், கடந்த மே 20 ஆம் திகதி 7 பேர் சென்றுள்ளனர். அப்போது பெய்த கனமழையால் குகையின் நுழைவாயிலில் நிலச்சரிவு ஏற்பட்டு அவர்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டு தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர் கால்பந்து […]

உலகம் செய்தி

எதிரிகளின் கலப்பு போர்முறை குறித்து ஈரான் உளவுத்துறை எச்சரிக்கை!

  • May 27, 2026
  • 0 Comments

நேரடி ராணுவ மோதல்களில் தோல்வியடைந்த எதிரிகள் தற்போது கலப்புப் போர் (hybrid warfare) முறைகளைக் கையாள்கின்றனர் என்று ஈரான் உளவுத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதாரத் தடைகள், சைபர் தாக்குதல்கள் மற்றும் தவறான ஊடகப் பிரச்சாரங்கள் மூலம் மக்களின் சிந்தனையை மாற்ற எதிரணிகள் முயற்சிக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ” சமூகத் தூண்டுதல்கள் மற்றும் உளவியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலம் நாட்டை நிலைநடுங்கச் செய்ய எதிரிகள் திட்டமிடுகின்றனர். பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது உளவு வேலைகளில் ஈடுபடும் எவருக்கும் எதிராக […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

ஒன்றிணைந்தது அதிமுக! சட்டமன்றத் தலைவரானார் பழனிசாமி!!

  • May 27, 2026
  • 0 Comments

அதிமுகவில் உள்ளக மோதல் உக்கிரமடைந்ததையடுத்து தனியாக செயல்பட்ட வேலுமணி அணி, பழனிசாமி அணியுடன் மீண்டும் சங்கமித்துள்ளது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக்க நியமிக்குமாறுகோரி, சபாநாயகரிடம் கடிதம் கையளித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். 22 எம்எல்ஏ.க்கள் பழனிசாமிக்கு ஆதரவளித்தனர். அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக வேலுமணியை நியமிக்க 25 எம்எல்ஏ.க்களும், பழனிசாமியை நியமிக்க 22 எம்எல்ஏ.க்களும் தனித்தனியாக […]

செய்தி

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்மீது தாக்குதல்: ஈரான் தூதுவருக்கு தென்கொரியா அழைப்பாணை!

  • May 27, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் HMM Namu என்ற சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானிய தயாரிப்பு ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சு நடத்திய தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் தாக்குதலுக்கும் ஈரானுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் மற்றும் அதன் வெடிபொருட்களின் நிறத்தை வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க வருமாறு ஈரானியத் தூதருக்கு தென்கொரிய அரசு சம்மன் அனுப்பத் திட்டமிட்டுள்ளது. சர்வதேச […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டனில் மீண்டும் உயர்கிறது எரிசக்தி கட்டணம்!

  • May 27, 2026
  • 0 Comments

சர்வதேச அளவில் எரிவாயுவின் மொத்த விற்பனை விலை அதிகரித்துள்ளதால் பிரிட்டனில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள் 13 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளன. பிரிட்டனின் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையமான Ofgem , ஆண்டுக்கான சராசரி கட்டண வரம்பை £1,862 ஆக நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தை விட £221 அதிகமாகும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மக்களுக்கு இந்த விலை உயர்வு கூடுதல் பொருளாதார நெருக்கடியை […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் புதிய ராணுவத் தளபதி பலி!

  • May 27, 2026
  • 0 Comments

காசாவிலுள்ள குடியிருப்பொன்றின்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய ராணுவப் பிரிவுத் தளபதியான Mohammed Odeh கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 தாக்குதலுக்குத் திட்டமிட்டவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவரை, பல மாத கால உளவுத் தகவல்களின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் இலக்கு வைத்துத் தாக்கியுள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலில், Odehவுடன் சேர்த்து மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர் . மேலும் பலர் காயமடைந்தனர். […]

இலங்கை செய்தி

யாழில் காணி விடுவிப்பில் இழுத்தடிப்பு?

  • May 27, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று அழுத்தம் வழங்கப்பட்ட போதிலும், கணிசமான கோரிக்கைகளை இராணுவம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள். காணி விடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரச அதிகாரிகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஏனைய […]

செய்தி விளையாட்டு

ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்!

  • May 27, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் இப்போட்டி ஆரம்பமாகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி லீக் சுற்றில் 14 ஆட்டங்களில் 8 வெற்றி, 6 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று கடைசி அணியாக play-off சுற்றில் கால்பதித்து இருந்தது. அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 வெற்றி, 5 தோல்விகளுடன் 18 புள்ளிகளை குவித்து 3-வது இடம் […]

உலகம் செய்தி

புடினின் அடுத்த கட்டப் போர் வியூகம்!

  • May 27, 2026
  • 0 Comments

உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள பெரும் உயிரிழப்புகளை ஈடுகட்ட, ரஷ்ய ஜனாதிபதி Vladimir Putin புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். போர்க்களத்தில் குறைந்து வரும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, புதியதாக இராணுவத்தில் சேருபவர்களுக்குப் பெரும் தொகையிலான கடன் தள்ளுபடி மற்றும் நிதிச் சலுகைகளை ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இதனுடன், மோல்டோவாவிலிருந்து பிரிந்த டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியத்தில் வசிப்பவர்கள் எளிதாக ரஷ்யக் குடியுரிமை பெறுவதற்கான புதிய சட்டதிட்டங்களையும் Vladimir Putin நடைமுறைப்படுத்தியுள்ளார். இந்த வியூகங்கள் அனைத்தும் ரஷ்யாவின் பொருளாதார மந்தநிலைக்கு […]

அரசியல் இலங்கை செய்தி

கட்சி தாவினால் எம்.பி. பதவி பறிப்பு: விரைவில் அதிரடி சட்டம்!

  • May 27, 2026
  • 0 Comments

“மக்கள் ஆணைக்கு எதிராக செயல்படமாட்டோம். எதிரணி உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்ளும் எந்தவொரு திட்டமும் இல்லை.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “புதியதொரு அரசியல் கலாசாரத்துக்காகவே மக்கள் எமக்கு வாக்களித்தனர். சிலருக்கு விருப்பம் இருக்கலாம். ஆனால் எதிரணி உறுப்பினர்களை அரசாங்கத்துடன் […]

error: Content is protected !!