சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை செய்தி

அடுத்த வாரம் கொழும்பு வருகிறது IMF குழு

  • August 28, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட ஆய்வுக்கான பயணமாகவே, அனைத்துலக நாணய இக்குழு கொழும்பு வரவுள்ளது. இந்த வருகையின் போது, ​​அவர்கள் ஏழாவது ஆய்வை நடத்துவதோடு, எட்டாவது கடன் தவணையை விடுவிப்பது குறித்தும் பரிசீலிக்கவுள்ளனர். இந்த ஆய்வில் திருப்தியடைந்தால், இலங்கைக்கு சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சர்வதேச நாணய நிதியம் விடுவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மத்திய ராணுவ ஆணைக்குழு (Central Military Commission) பதவிகளிலிருந்து சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளான ஜாங் யோக்சியா (Zhang Youxia) மற்றும் லியூ ஜென்லி (Liu Zhenli) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். உலகம் செய்தி

சீனாவின் முக்கிய இரு பிரமுகர்கள் பதவிகளில் இருந்து நீக்கம்

  • August 28, 2026
  • 0 Comments

சீனாவின் மத்திய ராணுவ ஆணைக்குழு (Central Military Commission) பதவிகளிலிருந்து சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளான ஜாங் யோக்சியா (Zhang Youxia) மற்றும் லியூ ஜென்லி (Liu Zhenli) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அரச ஊடகமான சின்ஹுவா (Xinhua) வெள்ளிக்கிழமை இன்று வெள்ளிக்கிழமை மேற்படி செய்தியை வெளியிட்டுள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாக, மத்திய இராணுவ ஆணைக்குழுவின் துணைத் தலைவராகவும், சீனாவின் சக்திவாய்ந்த அரசியல் பீடத்தின் உறுப்பினராகவும் இருந்த ஜாங் […]

சிரியாவில் கலைக்கப்பட்ட குர்திஷ் தலைமையிலான படைப்பிரிவின் முன்னாள் தளபதியை, நாட்டின் புதிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா (Ahmed al-Sharaa) தனது ஆலோசகராக வெள்ளிக்கிழமை நியமித்துள்ளார். உலகம் செய்தி பொழுதுபோக்கு

நீண்டகாலப் பகைமைக்கு முடிவு: குர்திஷ் தளபதிக்கு சிரிய அரசில் முக்கிய பொறுப்பு

  • August 28, 2026
  • 0 Comments

சிரியாவில் கலைக்கப்பட்ட குர்திஷ் தலைமையிலான படைப்பிரிவின் முன்னாள் தளபதியை, நாட்டின் புதிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா (Ahmed al-Sharaa) தனது ஆலோசகராக வெள்ளிக்கிழமை நியமித்துள்ளார். பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரில் எதிரிகளாக இருந்த இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள இணக்கத்தை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது. தசாப்தத்திற்கும் மேலாக, மஸ்லூம் அப்தி (Mazloum Abdi) குர்திஷ் தலைமையிலான “சிரிய ஜனநாயகப் படைகளை” (SDF) வழிநடத்தினார். உள்நாட்டுப் போரின் போது, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராட அமெரிக்காவுடன் இணைந்த இந்தப் […]

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வர்த் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

தமிழ் மக்களின் பிரச்சினை குறித்து ஆஸ்திரேலியா விசேட கவனம்

  • August 28, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வர்த் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு – கிழக்கில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள், அரச மற்றும் தனியார் காணி அபகரிப்பு குற்றச்சாட்டுகள், இராணுவமயமாக்கல் மற்றும் வாழ்வாதாரச் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் நிலைமை, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. தமிழ் மக்களின் […]

நோர்வேயின் மறைந்த மன்னருக்கு ஐரோப்பிய தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பா செய்தி

மறைந்தாலும் மனங்களில் வாழும் நோர்வே மன்னர்: ஐரோப்பிய தலைவர்கள் புகழஞ்சலி

  • August 28, 2026
  • 0 Comments

நோர்வேயின் மறைந்த மன்னருக்கு ஐரோப்பிய தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ” நாடு முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. நோர்வே நாட்டிற்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தமைக்காக அந்நாட்டு மக்கள் அவருக்கு ஆழ்ந்த நன்றியுணர்வுடன் உள்ளனர்” என்று நோர்வே பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மன்னராக இருந்த ஹரால்ட், நோர்வே மக்கள் மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். நம்மிடமும், நமக்கு இடையிலும் உள்ள சிறந்த பண்புகளைக் கண்டறிய அவர் நமக்கு உதவினார்” என்றும் அவர் […]

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை வெறுமனே ஒரு வர்த்தகக் கண்காட்சியாக நான் பார்க்கவில்லை. இது வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சித் திறனை வெளிப்படுத்தும் மேடையாகவும், எமது உற்பத்திகளைச் சந்தையுடன் இணைக்கும் பாலமாகவும், முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்துக்கு அழைக்கும் வாயிலாகவும் அமைகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கை செய்தி

வடக்கு பொருளாதார ரீதியில் வலுவடைய வேண்டும்: ஆளுநர்

  • August 28, 2026
  • 0 Comments

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை வெறுமனே ஒரு வர்த்தகக் கண்காட்சியாக நான் பார்க்கவில்லை. இது வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சித் திறனை வெளிப்படுத்தும் மேடையாகவும், எமது உற்பத்திகளைச் சந்தையுடன் இணைக்கும் பாலமாகவும், முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்துக்கு அழைக்கும் வாயிலாகவும் அமைகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026 இன்று (28.08.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில், வடக்கு கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. […]

இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதை வலியுறுத்தி, வடக்கு - கிழக்கின் 7 மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டுக் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் காணி மீட்பு சமர்: யாழில் விசேட கலந்துரையாடல்

  • August 28, 2026
  • 0 Comments

இராணுவம் மற்றும் அரச திணைக்களங்களால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதை வலியுறுத்தி, வடக்கு – கிழக்கின் 7 மாவட்டங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டுக் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. உயர் பாதுகாப்பு வலயம், வனவள மற்றும் தொல்பொருள் திணைக்களங்களின் நடவடிக்கைகள் ஊடாகத் தமது பூர்வீகக் காணிகளை இழந்துள்ள மக்கள், “ஒன்றுபட்ட அமைப்பு” என்ற பொதுவான அமைப்பின் ஊடாகக் கைகோர்த்துச் செயற்படும் நோக்கில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் […]

இமயமலையில் ஏற்பட்ட மண்சரிவினால் 90,000 க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

இமயமலை பேரனர்த்தம்: 93,000 பேர் பாதிப்பு

  • August 28, 2026
  • 0 Comments

இமயமலையில் ஏற்பட்ட மண்சரிவினால் 90,000 க்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அதேவேளை, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நிவாரணப் பணி அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். “குறைந்தது 93,000 மக்கள் பாதிக்கப்பட்டு, பெரும் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். இரண்டாம் கட்ட வெள்ளப்பெருக்கு குறித்து நாங்கள் மிகுந்த கவலையடைந்துள்ளோம்” என நேபாளத்திற்கான சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் பிரதிநிதிகளின் […]

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியின் தாக்கம் போதுமானதாக இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இலங்கை செய்தி

எதிரணி வலுவாகவே உள்ளது: சஜித் சூளுரை

  • August 28, 2026
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியின் தாக்கம் போதுமானதாக இல்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பண்டாரவளையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு , ” கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அஞ்சியவர்களே, எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் குறித்து தவறான கருத்துகளை பரப்புகின்றனர். மேலும் ஆளுங்கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலேயே சில அரசியல் முகவர்கள் இப்படியான கருத்துகளை முன்வைக்கின்றனர். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி மிகவும் […]

நோர்வே மன்னர் 5ஆம் ஹாரால்ட் (King Harald V), தனது 89ஆவது வயதில் காலமானார். ஐரோப்பா செய்தி

நோர்வே மன்னர் King Harald V காலமானார்

  • August 28, 2026
  • 0 Comments

நோர்வே மன்னர் 5ஆம் ஹாரால்ட் (King Harald V), தனது 89ஆவது வயதில் காலமானார். ஒஸ்லோவில் உள்ள தேசிய வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 06:35 மணிக்கு அவர் அமைதியான முறையில் உயிர்நீத்ததாக ஒஸ்லோவிலுள்ள அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரண்மனை கூரையில் பறந்த அரசக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மன்னரின் மறைவுக்கு முந்தைய 24 மணிநேரத்தில், ராஜ குடும்ப உறுப்பினர்கள் அவரைச் நேரில் சென்று பார்த்ததுடன், பெருந்திரளான மக்கள் அரண்மனைக்கு வெளியே மலர்களை […]