இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , அந்த நாட்டிற்கு எதிராக மேலும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என சபதம் செய்துள்ளார். உலகம் செய்தி

ஈரான்மீது சக்திவாய்ந்த தாக்குதல்: ட்ரம்ப் சபதம்

  • July 13, 2026
  • 0 Comments

இடைக்கால ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , அந்த நாட்டிற்கு எதிராக மேலும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என சபதம் செய்துள்ளார். “அது ஒரு முடிவுற்ற ஒப்பந்தமாக (Done deal) இருந்தது, ஆனால் அவர்கள் அதனை முறித்துக் கொண்டனர். அவர்கள் எப்போதும் அதைத்தான் செய்கிறார்கள். இந்த மக்களுடன் நாங்கள் 10 ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம் – எனவே, நாங்கள் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம்” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்: உயிரிழந்த அதிகாரிகளுக்கு இழப்பீடு

  • July 13, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தலா 20 லட்சம் ரூபாவுக்கு மேல் இழப்பீடு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்று சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேற்படி மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மோதலில் காயமடைந்த அதிகாரிகளுள் எழுவர் இன்னும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். அதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது தடிகள், கூரிய ஆயுதங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. கலவர தினத்தன்று சமயல் அறைக்குள் புகுந்து அங்கிருந்த […]

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில் அணிதிரண்டுள்ளன. அரசியல் இலங்கை செய்தி

3 முக்கிய விடயங்களுக்காகவே தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைவு

  • July 13, 2026
  • 0 Comments

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில் அணிதிரண்டுள்ளன. இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை ஆறு கட்சிகளினதும் தலைவர்கள் இன்று மதியம் கொழும்பு – பம்பலப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஒரே மேசையிலிருந்து வெளியிட்டனர். இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பி., அமீர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் […]

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்திற்கு முன்பாக இன்று (13) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. செய்தி

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பை மீளாய்வு செய்யக்கோரி போராட்டம்

  • July 13, 2026
  • 0 Comments

சுகாதாரப் பணி உதவியாளர் ஆட்சேர்ப்பு நடைமுறையை மீளாய்வு செய்யக்கோரி கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்திற்கு முன்பாக இன்று (13) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. “நியாயமான ஆட்சேர்ப்பு வேண்டும்”, “தகுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பு வேண்டும்”, “அநுர ஆட்சியில் அநீதியா?” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்கவைத் (HEMWG Dissanayake) தொடர்பு கொண்டு கேட்டபோது: “குறித்த நியமன விவகாரமானது […]

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி பிரார்த்தனையின் போது காணப்பட்ட மர்மமான முகமூடி அணிந்த நபரின் அடையாளம் குறித்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன. செய்தி

அலி கமேனியின் இறுதி பிரார்த்தனையின் போது முகமூடி அணிந்து காணப்பட்ட மர்ம நபர் யார்?

  • July 13, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி பிரார்த்தனையின் போது காணப்பட்ட மர்மமான முகமூடி அணிந்த நபரின் அடையாளம் குறித்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன. ஈரானிய ஊடக அறிக்கைகளின்படி, முகமூடி அணிந்த அந்த நபர், அலி கமேனியின் மூத்த மகனான முஸ்தபா கமேனியின் மகனும், அவரது கொள்ளுப் பேரனுமான முகமது ஜாவத் கமேனி ஆவார். பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் அலி கமேனி வீரமரணம் அடைந்தார். அந்தத் தாக்குதல்களில் […]

கிண்ணியாவில் இருந்து மகாவலி ஆற்றை கடந்து , மணல் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக சென்ற விசேட பொலிஸ் அதிரடிப்படை சார்ஜன் , நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (13) மீட்கப்பட்டுள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை செய்தி

மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற STF அதிகாரி நீரில் மூழ்கி பலி

  • July 13, 2026
  • 0 Comments

கிண்ணியாவில் இருந்து மகாவலி ஆற்றை கடந்து , மணல் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக சென்ற விசேட பொலிஸ் அதிரடிப்படை சார்ஜன் , நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று (13) மீட்கப்பட்டுள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் விசேட பொலிஸ் அதிரடிப்படை கந்தளாய் சூரியபுர முகாமில் கடமையாற்றி வரும் 67763 சாந்த கிஹான் ரணசிங்க (39வயது) என அடையாளம் காணப் பட்டுள்ளார். பத்தரமுல்ல ஜெயவதன கமவை சேர்ந்த இந்த பொலிஸ் சார்ஜன் அடங்கிய குழு […]

ஜனாதிபதி அநுரவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைப்பு இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுரவின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைப்பு

  • July 13, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பிரான்ஸ் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜூலை 16 ஆம் திகதி பிரான்சுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார். எனினும் இந்தப் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அதற்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. முன்னதாக இந்தப் பயணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டு, பின்னர் பிற்போடப்பட்டிருந்தது.    

ஓமான் நாட்டுடன் இணைந்து ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஒரு பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்க ஈரான் மேற்கொள்ளும் முயற்சிகளை அமெரிக்கா தடுத்து வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: பாதுகாப்பு பொறிமுறையை குழப்பும் அமெரிக்கா

  • July 13, 2026
  • 0 Comments

ஓமான் நாட்டுடன் இணைந்து ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஒரு பாதுகாப்பு பொறிமுறையை உருவாக்க ஈரான் மேற்கொள்ளும் முயற்சிகளை அமெரிக்கா தடுத்து வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த உடன்படிக்கையை எட்டுவதில் சிக்கல்கள் நீடிப்பதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Esmaeil Baghaeiதெரிவித்தார். அத்துடன், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத வரை, இடைக்கால ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைத் தாங்கள் பின்பற்றப்போவதில்லை என்றும் Esmaeil Baghaei எச்சரித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த […]

'மை பிரில்லியன்ட் கரியர்' (My Brilliant Career) மற்றும் 'ஜுராசிக் பார்க்' (Jurassic Park) ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), தனது 78 ஆவது வயதில் காலமானார். செய்தி பொழுதுபோக்கு

‘ஜுராசிக் பார்க்’ நாயகன் சாம் நெய்ல் காலமானார்

  • July 13, 2026
  • 0 Comments

‘மை பிரில்லியன்ட் கரியர்’ (My Brilliant Career) மற்றும் ‘ஜுராசிக் பார்க்’ (Jurassic Park) ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), தனது 78 ஆவது வயதில் காலமானார். ஆஸ்திரேலியா, சிட்னியில் வைத்தே அவர் உயிரிழந்துள்ளார். நெய்ல் முதன்முதலில் 1977 ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்லீப்பிங் டாக்ஸ்’ (Sleeping Dogs) திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து மை பிரில்லியன்ட் கரியர், ஜுராசிக் பார்க், தி பியானோ (The Piano), தி […]

“ நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. தேசிய பாதுகாப்பு என்பது உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர தெரிவித்தார். செய்தி

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

  • July 13, 2026
  • 0 Comments

“ நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. தேசிய பாதுகாப்பு என்பது உச்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த நாள் முதலே தேசிய பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றது. அந்த வகையில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு தொடர்பில் கடந்த காலங்களில் சிற்சில சம்பவங்கள் இடம்பெற்றன. […]