மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவில் தீவிரமடைந்து வரும் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக ஆஸ்திரியாவில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேவேளை ஹங்கேரியில் மக்கள் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டுள்ளனர். ஐரோப்பா செய்தி

ஆஸ்திரியாவிலும் தீவிரமடையும் வெப்ப அலை

  • August 6, 2026
  • 0 Comments

மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவில் தீவிரமடைந்து வரும் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக ஆஸ்திரியாவில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேவேளை ஹங்கேரியில் மக்கள் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டுள்ளனர். உலகின் மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமான ஐரோப்பா, இந்த கோடைகாலம் முழுவதும் சாதனை அளவிலான வெப்பத்தாலும் அழிவுகரமான காட்டுத்தீகளாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்களில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது […]

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் 1,354 புள்ளிகளுடன், இலங்கையின் ரமேஷ் தரங்க (Rumesh Tharanga) உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். செய்தி விளையாட்டு

வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க: ஈட்டி எறிதலில் உலகின் முதன்மை வீரர்

  • August 6, 2026
  • 0 Comments

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் 1,354 புள்ளிகளுடன், இலங்கையின் ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் (Commonwealth Games) தங்கம் வென்றதன் மூலம் அவர் இந்த முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கை தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைருமேஷ் தரங்க படைத்துள்ளார்.

திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் 30 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

குளவிக் கொட்டு: திருகோணமலையில் 30 மாணவர்கள் பாதிப்பு

  • August 6, 2026
  • 0 Comments

திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் 30 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது புதிய தாக்குதல் ஏதேனும் நடத்தும் பட்சத்தில், அது வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது கடுமையான பதிலடித் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வளைகுடா எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல்: அமெரிக்காவிற்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

  • August 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது புதிய தாக்குதல் ஏதேனும் நடத்தும் பட்சத்தில், அது வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது கடுமையான பதிலடித் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாஷிங்டனின் மிக நெருங்கிய பிராந்திய நட்பு நாடுகளை அச்சுறுத்துவதன் மூலம், ராணுவ நடவடிக்கையின் விளைவுகளை அமெரிக்காவிற்கு உணர்த்த ஈரான் முற்படுகின்றது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஜூலை 28 அன்று, ஈரானின் எரிசக்தி வலையமைப்பு மற்றும் உள்கட்டமைப்புகளைத் […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனை தொடர்பில் தமது கட்சியின் உறுப்பினர் லால் விஜேநாயக்க மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், இறுதியில் அவர் கட்சியின் பொது நிலைப்பாட்டிற்குத் தலைவணங்குவார் என நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும்: நீதி அமைச்சர் உறுதி

  • August 6, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனை தொடர்பில் தமது கட்சியின் உறுப்பினர் லால் விஜேநாயக்க மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், இறுதியில் அவர் கட்சியின் பொது நிலைப்பாட்டிற்குத் தலைவணங்குவார் என நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: “எமது அரசாங்கத்திற்குள் உள்ளவர்களுக்கு இடையே வெவ்வேறான கருத்துகள் இருந்தாலும், இறுதியில் அனைவரும் பொதுவான ஒரு நிலைப்பாட்டையே ஏற்போம். இதுவே உண்மையான ஜனநாயகப் பண்பாடாகும். […]

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பைச் சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் சிலையையும், அங்கு கொல்லப்பட்ட 53 பேருக்கான நினைவுத் தூபியையும் நிறுவுவதற்குப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நேற்று புதன்கிழமையுடன் நீக்கப்படுகின்றது என்று நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இலங்கை செய்தி

குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் சிலை அமைப்புக்கான தடை நீக்கம்

  • August 6, 2026
  • 0 Comments

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பைச் சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் சிலையையும், அங்கு கொல்லப்பட்ட 53 பேருக்கான நினைவுத் தூபியையும் நிறுவுவதற்குப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நேற்று புதன்கிழமையுடன் நீக்கப்படுகின்றது என்று நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. கடந்த ஜூலை 25 அன்று தியாகிகள் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது 43ஆவது நினைவு நாளில் சிலை நிறுவுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கிடையில், கடந்த ஜூலை 22 அன்று வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப […]

செம்மணி மனித புதைகுழியில் இன்று (05) மேலும் 08 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்: இன்றும் 08 அடையாளம்

  • August 5, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் இன்று (05) மேலும் 08 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44 ஆவது நாளான இன்று அகழ்வுப் பணி இடம்பெற்றது. இதன்போது 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இதற்கமைய செம்மணி புதைகுழியில் இதுவரை மொத்தமாக 491 என்பு […]

கிழக்கு மாகாணத்தின் கடற்பழங்குடியினர் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தையும் மரபுகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் கடற்பழங்குடியினரின் பாரம்பரிய விழா, இன்று (2026.08.05) முத்தூர் நல்லூர் பகுதியில் நடைபெற்றது. இலங்கை செய்தி

கடல் பழங்குடியினர் பாரம்பரிய விழா: கிழக்கு ஆளுநர் பங்கேற்பு

  • August 5, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாணத்தின் கடல் பழங்குடியினர் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தையும் மரபுகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் கடற்பழங்குடியினரின் பாரம்பரிய விழா, இன்று (2026.08.05) முத்தூர் நல்லூர் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கடல் பழங்குடியினர் சமூகத்தின் கலாச்சார அடையாளம், பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் மூதாதையர் அறிவைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியின் போது, ​​பாரம்பரிய மத சடங்குகள், கலாச்சார கூறுகள், சமூகத் தலைவர்களின் ஆசிகள் […]

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்றது. இலங்கை செய்தி

‘போதைப் பொருள் ஒழிப்பு’ – இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவு

  • August 5, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான மற்றும் நீண்டகால உறவுகள் குறித்து நீண்ட கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன. 2022/2023 ஆம் ஆண்டுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவு, டித்வா அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் […]

இலங்கை செய்தி

இயற்கை சீற்றம்: இலங்கையில் 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

  • August 5, 2026
  • 0 Comments

நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4,151 குடும்பங்களைச் சேர்ந்த 16,345 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். மேலும், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஒரு வீடு முழுமையாகவும், 581 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 682 குடும்பங்களைச் சேர்ந்த 2,504 பேர் 43 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 7,288 பேரும், […]