உலகம் செய்தி

எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: IEA தலைவர் எச்சரிக்கை!

  • April 23, 2026
  • 0 Comments

உலகளாவிய எரிசக்தி பாதுகாப்புக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச எரிசக்தி முகமையின் International Energy Agency (IEA) தலைவர் Fatih Birol எச்சரிக்கை விடுத்துள்ளார். போர்ச்சூழ்நிலையால் நாளாந்தம் சுமார் 13 மில்லியன் பெரல் எண்ணெய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் விளைவாக எரிபொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட தாக்கங்கள் ஏற்படக்கூடும். இந்த நெருக்கடியைச் சமாளிக்க உலக நாடுகள் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் எனவும் IEA தலைவர் எதிர்வுகூறியுள்ளார். […]

உலகம் செய்தி

ஈரான் வசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்பதில் ட்ரம்ப் உறுதி!

  • April 23, 2026
  • 0 Comments

  ஈரான் வசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியாக உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதேபோல ஒரு தரமான மற்றும் நிரந்தரமான ஒப்பந்தத்தை எட்டுவதே ட்ரம்பின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் தரப்பிலிருந்து உறுதியான பதில் வராத காரணத்தினாலேயே போர் நிறுத்த காலக்கெடுவை நீட்டிக்க டிரம்ப் முடிவு செய்தார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதேவேளை, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் 2ஆம் கட்ட அமைதி பேச்சை ஆரம்பித்து […]

இலங்கை

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

  • April 23, 2026
  • 0 Comments

இந்தியாவின் ‘கிரிஷ்’நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவகாரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை மே மாதம் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் இந்த வழக்கு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக எனக் கூறி, இந்திய கிரிஷ் நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாயைப் […]

இந்தியா செய்தி

பலமடைந்துள்ள இந்திய ராணுவ வலிமை!

  • April 23, 2026
  • 0 Comments

“ இந்தியாவின் ராணுவ வலிமை முன்னெப்போதையும் விட பன் மடங்கு வலுப்பெற்றுள்ளது.” – என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சூளுரைத்துள்ளார். ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இது தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நமது ராணுவம் என்ன சாதித்துள்ளது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நமது ராணுவ வலிமை வலுப்பெற்றுள்ளது. இந்தியா உலகிலுள்ள […]

இலங்கை செய்தி

இலங்கை சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலை என்ன?

  • April 23, 2026
  • 0 Comments

இலங்கைக்கு கடந்த 19 நாட்களுக்குள் மாத்திரம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 211 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஏப்ரல் 1 முதல் 19 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 25 ஆயிரத்து 634 பேரும், பிரிட்டனில் இருந்து 7 ஆயிரத்து 672 பேரும், ஆஸ்திரேலியாவில் 7 ஆயிரத்து 351 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர். […]

உலகம் கல்வி

லெபனான், இஸ்ரேலுக்கிடையில் 2ஆம் கட்ட அமைதி பேச்சு!

  • April 23, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கிடையில் 2ஆம் கட்ட அமைதி பேச்சு வாஷிங்டனில் நடைபெறவுள்ளது. தற்போது அமுலில் உள்ள 10 நாள் தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் எனக் கூறப்படுகின்றது. லெபனான் எல்லைகளில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறுதல் மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவித்தல் போன்ற கோரிக்கைகளை லெபனான் ஜனாதிபதி முன்வைத்துள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் பலனாகவே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் ஊடகவியலாளர் பலி: லெபனான் கடும் சீற்றம்!

  • April 23, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஊடகவியலாளர் அமல் கலீல் Amal Khalil கொல்லப்பட்டதை லெபனான் அரசு வன்மையாகக் கண்டித்துள்ளது. மேற்படி தாக்குதலில் மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார். இஸ்ரேல் வேண்டுமென்றே ஊடகவியலாளர்களையும், சுகாதார சேவையாளர்களையும் குறிவைத்ததாக லெபனான் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதலில் பலியான ஊடகவியலாளர் அல்-அக்பார் என்ற செய்தி நிறுவனத்திற்காகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ஊடகவியலாளர்மீது தாக்கங் தாக்குதல் நடத்தவில்லை என எனவும், மீட்புப் பணிகளைத் தடுக்கவில்லை என்றும் இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பற்ற சூழலுக்கு அமெரிக்கா, இஸ்ரேலே காரணம்!

  • April 23, 2026
  • 0 Comments

வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே முக்கியக் காரணம் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi குற்றஞ்சாட்டியுள்ளார். தெஹ்ரானில் தென்கொரிய தூதுவருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே, மேற்படி ஆக்கிரமிப்பு தாக்குதல்களை உலக நாடுகள் உறுதியுடன் கண்டிக்க வேண்டும். தனது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச சட்டங்களின்படி ஈரான் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வளைகுடாப் பகுதியில் […]

இலங்கை செய்தி

சுரேஷ் சாலேமீதான தடுப்பு காவல் உத்தரவு நீடிப்பு!

  • April 23, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மீதான தடுப்புக் காவல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமரா இது தொடர்பான உத்தரவை நேற்று பிறப்பித்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவு , மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டவாளர் அசித் சிறிவர்தன, […]

இலங்கை செய்தி

சைபர் கும்பலிடம் சிக்கிய 2.5 மில்லியன் டொலர் திறைசேரி பணம்! விசாரணை தீவிரம்!

  • April 23, 2026
  • 0 Comments

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் பிரவேசித்து, முன்னெடுத்த நிதித் திருட்டு தொடர்பாக சட்ட அமுலாக்க நிறுவனங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னான்டோ தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிலையத்திற்கும் திறைசேரிக்கும் இடையிலான நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது, மின்னஞ்சல் மூலம் பரிமாறப்பட்ட தகவல்களை இணைய ஊடுருவிகள் இடைமறித்து மாற்றியமைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டிய ஒரு கொடுப்பனவு தொடர்பாகவும், இதேபோன்ற […]