சுரேஷ் சலேவுக்கு சித்திரவதை: அரசு மறுப்பு!
சிஐடி தடுப்பு காவலின்கீழ் சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுகின்றார் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் அடியோடு நிராகரித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார் என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சரிடம் கேள்விகள் எழுப்பட்டன.
இவற்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் , அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்தார்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் சந்தேக நபரொருவர், நடத்தப்படவேண்டிய நடைமுறைகளுக்கு அமையவே சுரேஷ் சலே நடத்தப்படுகின்றார்.
விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கிலேயே சிலர் அரசியல் நாடகங்களை அரங்கேற்றிவருகின்றன. விசாரணை சரியான திசையில் நடைபெறுகின்றது என்பதையே அவர்களின் பதற்றம் வெளிப்படுத்துகின்றது எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.





