இலங்கை

வித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனை உறுதி

  • May 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சூம் தொழில்நுட்பம் ஊடாக உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட […]

உலகம் செய்தி

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: தெற்கு லெபனானில் கோரத் தாக்குதல்!

  • May 6, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தற்போது தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 24 மணிநேரத்துக்குள் மாத்திரம் 25 இலக்குகள் தகர்க்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லெபனானின் பல நகரங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் இராணுவ கட்டமைப்புகளுக்கு அருகில் இருப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவுறுத்தியுள்ளார். லெபனான் தேசிய செய்தி நிறுவனம் […]

அரசியல் இலங்கை செய்தி

“மலையகத்துக்கு கூலிப்படை வேண்டாம்”: சபையில் மனோ காட்டம்

  • May 6, 2026
  • 0 Comments

‘நாம் நீலகாமம்’ பிரகடனத்தை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று (06) சபையில் சமர்ப்பித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மனோ கணேசன் இவ்வாறு சமர்ப்பித்தார். நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறைச் சம்பவத்துக்கு நீதி கோரியும், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குமாறு வலியுறுத்தியும் கொழும்பு, ஐந்துலாம்பு சந்தியில் நேற்று அறவழி போராட்டம் நடைபெற்ற நிலையிலேயே இன்று பிரகடனம் அதிஉயர் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தில் இருந்து விலகியவர்களைக் கொண்டு பெருந்தோட்டப் […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இலங்கை, பாகிஸ்தான் அவதானம்!

  • May 6, 2026
  • 0 Comments

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நஸீர் (Nayyar Naseer), இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின்போது, இலங்கையில் அவரது தூதரகப் பதவிக்காலத்தை ஆரம்பிப்பது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை, குறிப்பாகப் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் மேலும் வலுப்படுத்துவது குறித்துக் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

முதுகில் குத்திவிட்டது காங்கிரஸ்: திமுக சீற்றம்!

  • May 6, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவளிப்பது என்ற காங்கிரஸின் முடிவு திமுகவின் முதுகில் குத்தும் செயல் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை விமர்சித்துள்ளார். ‘தவெகவுக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு மிகவும் குறுகிய பார்வை கொண்டது. தொலைநோக்குப் பார்வை அற்றது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்காக அவர்கள் வருந்த நேரிடும்.’ எனவும் அண்ணாதுரை சுட்டிக்காட்டியுள்ளார். காங்கிரஸின் இந்த முடிவால் தேசிய மட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு!

  • May 6, 2026
  • 0 Comments

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு தவெகவுக்கு ஆதரவளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த ஆதரவு வழங்கப்படுகின்றது.” என காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய் அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தவெகவின் பலம் 107 ஆக குறையும். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க […]

இலங்கை செய்தி

” இலங்கை, இந்திய தரைவழிப்பாதை காலத்தின் கட்டாயத் தேவை”

  • May 6, 2026
  • 0 Comments

“இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைப்பது, அவசியமானது மட்டுமல்ல அவசரமானது” இவ்வாறு இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற உலகளாவிய புத்தாக்க மற்றும் தலைமைத்துவ உச்சிமாநாட்டில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , ” இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தூரம் சுமார் 30 கி.மீ மட்டுமே. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே நேரடிச் சாலை, தொடருந்து இணைப்பு, முறையாகச் செயல்படும் படகு […]

செய்தி

ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!

  • May 6, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 49 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்விகளை சந்திக்காமல் வலம் வந்த பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய 2 ஆட்டங்களிலும் சறுக்கலைச் சந்தித்தது. பாட் […]

ஆஸ்திரேலியா செய்தி

சிரியாவிலிருந்து ஆஸ்திரேலியா வரும் ‘IS பெண்களை’ கைது செய்ய ஏற்பாடு!

  • May 6, 2026
  • 0 Comments

சிரியாவிலுள்ள முகாமில் தங்கியிருந்த ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகள் விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு திரும்ப உள்ளனர். அவர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் அவர்களில் சிலர் கைது செய்யப்படக்கூடும் என்று ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் தெரிவித்துள்னர். மேற்படி குழுவினர் வியாழக்கிழமை இரவு ஆஸ்திரேலியா வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்படி குழுவில் நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது குழந்தைகள் உள்ளனர். வடக்கு சிரியாவில் உள்ள அல்-ரோஜ் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 34 பேர் கொண்ட […]

உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 26 பேர் பலி

  • May 6, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த தாக்குதலில் 80ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.