உலகம் செய்தி

முடிவுக்கு வருகிறது இஸ்லேல் பிரதமரின் அரசியல்: அதிர்ச்சி தரும் கருத்து கணிப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் பயணத்துக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துள்ளது

இஸ்ரேலில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் விரும்புவது தெரியவந்துள்ளது.

சுமார் 59 சதவீத மக்கள் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற கருத்தை முன்வைத்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக 33 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர்.

நெதன்யாகுவிற்குப் பிறகு லிகுட் கட்சியை வழிநடத்தக்கூடிய தலைவர்களாக நிர் பர்கத் மற்றும் யாரிவ் லெவின் போன்ற முக்கிய அமைச்சர்களை மக்கள் கருதுகின்றனர்.

இந்தத் தரவுகள் தற்போதைய அரசியல் தலைமை மீது இஸ்ரேலிய குடிமக்கள் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகின்றன.

இஸ்ரேலின் Channel 12 ஊடகமே மேற்படி கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.

இருப்பினும், இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை அல்லது பிழை வரம்பு குறித்த துல்லியமான தகவல்கள் முழுமையாகக் குறிப்பிடப்படவில்லை.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி