உலகம் செய்தி

மேற்குக் கரையில் இஸ்ரேல் பெரும் தாக்குதல்- ஒருவர் காயம், பலர் கண்ணீர்ப்புகையால் பாதிப்பு

  • May 1, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்ததுடன், பலர் கண்ணீர்ப்புகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரமல்லாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள புர்கா கிராமத்திற்குள் இஸ்ரேலிய படைகள் திடீரென நுழைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் ரப்பர் பூசப்பட்ட உலோகத் தோட்டாக்கள் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் ரப்பர் தோட்டாக்கள் தாக்கியதில் காயமடைந்துள்ளார். மேலும், கிராம மக்கள் பலர் கண்ணீர்ப்புகை […]

உலகம் செய்தி

லெபனானில் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புமைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

  • April 27, 2026
  • 0 Comments

கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கிலும், நாட்டின் தெற்குப் பகுதி முழுவதிலும் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்பு தளங்கள் எனக் கூறப்படும் இடங்களில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள திப்னின் (Tibnin) மற்றும் யேட்டர் (Yater) நகரங்களையும் இலக்குவைத்து இரண்டு தனித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்த போர் நிறுத்தம் நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை என அவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் இன் […]

உலகம் செய்தி

போர் நிறுத்த அமுலிலும் இஸ்ரேலும் ஹெஸ்பொல்லாவும் பரஸ்பர தாக்குதல்

  • April 26, 2026
  • 0 Comments

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இஸ்ரேலும் ஹெஸ்பொல்லா அமைப்பும் பரஸ்பர தாக்குதல் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல், தற்காப்பு நடவடிக்கைகளின் பெயரில் தாம் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக கூறியுள்ளது. இதற்கு பதிலடியாக ஹெஸ்பொல்லா ராக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹெஸ்பொல்லா தாக்குதல்கள் தொடர்ந்தால் லெபனானின் உட்பகுதி வரை தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார். இதனால், போர் நிறுத்தம் நடைமுறையில் பலனின்றி, நிலைமை மேலும் பதற்றமாகி வருகிறது.

இலங்கை செய்தி

சைபர் தாக்குதலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் – ஹர்ஷ குற்றச்சாட்டு

  • April 25, 2026
  • 0 Comments

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி நுணுக்கமான இணையவழி தாக்குதல் அல்ல என்றும், அதிகாரிகளின் அடிப்படை அலட்சியத்தினால் ஏற்பட்ட விளைவு என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார். பாரியளவிலான நிதிப் பரிமாற்றங்களின் போது பின்பற்றப்பட வேண்டிய முறையான நிதித் தணிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மில்லியன் கணக்கான ரூபாய்களைப் பரிமாற்றம் செய்வதற்கு முன்னதாக, அந்த வங்கிக் கணக்கை உறுதிப்படுத்துவதற்காக ஒரு சிறிய தொகையை அனுப்பிச் சரிபார்க்கும் வழக்கமான நடைமுறை […]

உலகம் செய்தி

லெபனானில் காயமடைந்த இந்தோனேசிய அமைதிப்படை வீரர் உயிரிழப்பு

  • April 24, 2026
  • 0 Comments

லெபனானில் பணியாற்றி வந்த  யூனிஃபில் அமைதிப்படையில் சேர்ந்த இந்தோனேசிய வீரர் ஒருவர், கடந்த மாதம் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். யூனிஃபில் வெளியிட்ட தகவலின்படி, Riko Pramudia என்ற கார்ப்பரல் (Corporal), மார்ச் 29ஆம் திகதி இரவு அட்சித் அல் குசைர் பகுதியில் உள்ள தளத்தில் ஏற்பட்ட எறிபொருள் வெடிப்பில் கடுமையாக காயமடைந்தார். இந்த சம்பவத்திற்குப் பின்னர், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தின் கீழ் தங்களின் கடமைகளை கடைப்பிடித்து, ஐ.நா. பணியாளர்கள் […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பலத்த பாதுகாப்புடன் 07 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை

  • April 20, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 07 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை (21) நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாளை அதிகாலை முதல் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடையும் வரை இந்த போக்குவரத்து மாற்றங்கள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு தேவாலயத்தை அண்மித்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய காலை 8:45 […]

ஆஸ்திரேலியா உலகம்

சிட்னி பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஆஷஸ் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

சிட்னி போண்டியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகள் நடக்கும் பகுதிகளில் புலனாய்வாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸட் போட்டி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்டில் இன்று ஆரம்பமானது. இதனைமுன்னிட்டு தெற்கு ஆஸ்திரேலிய பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருந்தனர். ஆயுதம் ஏந்திய பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். போட்டியை பார்வையிட வந்தவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு சமூக அச்சுறுத்தல் எதுவும் இருப்பதாக உளவு […]

error: Content is protected !!