வெள்ளை மாளிகையை தாக்க சதித்திட்டம் : ஐவர் கைது
வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இந்த கைது நடவடிக்கையை FBI இயக்குனர் காஷ் படேல் (Kash Patel) அறிவித்துள்ளார்.
ஜூன் 10 அன்று, ஒரு சாத்தியமான அச்சுறுத்தல் குறித்து FBI முதன்முதலில் அறிந்ததாகவும், நீதித்துறையில் உள்ள கூட்டாளிகளுடன் இணைந்து விரைவாகச் செயல்பட்டதாகவும் படேல் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் வொஷிங்டன், டி.சி.யில் நடைபெறவிருந்த UFC அமெரிக்கா 250 நிகழ்விலேயே இந்த தாக்குதலை முன்னெடுக்க அவர்கள் சதித்திட்டம் தீட்டியிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், அமெரிக்கா 250 நிகழ்விற்கான ஒரு சாத்தியமான அச்சுறுத்தல் குறித்து FBI மற்றும் எங்கள் சட்ட அமலாக்க கூட்டாளிகள் அறிந்தனர்.
FBI, எங்கள் கூட்டாளிகள் மற்றும் நீதித்துறையின் பல-மாநில நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட விரைவான செயலுக்கு நன்றி, பல நபர்கள் இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டன,” என்று தெரிவித்துள்ளார்.





