ICC நீதிமன்றத்தைக் கலைக்கும் முயற்சி – ட்ரம்பிற்கு எதிராக வழக்கு தொடுப்பு
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் கலைப்பதை நோக்கமாகக் கொண்ட ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையானது அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறி, நான்கு முன்னணி அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளன.
அமெரிக்கக் குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாத அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அதிகாரிகளுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch), ஓபன் சொசைட்டி இன்ஸ்டிடியூட் (Open Society Institute), அமெரிக்கன் ஃப்ரெண்ட்ஸ் சர்வீஸ் கமிட்டி ( American Friends Service Committee) மற்றும் சென்டர் ஃபார் கான்ஸ்டிட்யூசிஷனல் ரைட்ஸ் (Center for Constitutional Rights ) ஆகிய அமைப்புகள் நியூயார்க்கில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளன.
வழக்கில் உலகெங்கிலும் நிகழும் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு நீதி தேடுவதற்காக நீதிமன்றத்துடன் இணைந்து பணியாற்றுவதிலிருந்து அந்தத் தடைகள் தங்களைத் தடுக்கின்றன என்று குறித்த அமைப்புகள் வாதிட்டுள்ளன.
“குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை மீறுவதோடு, கருத்துச் சுதந்திரம் மற்றும் மத சுதந்திரம் உள்ளிட்ட சர்வதேச மற்றும் அமெரிக்கச் சட்டங்களையும் மீறும் இந்தத் தடைகளுக்கு முடிவுகட்ட மனுதாரர்கள் கோருகின்றனர்.
அதேநேரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள், இந்தத் தடைகள் தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது தனித்தனியாக வழக்குத் தொடுத்துள்ளனர்.
இதற்கிடையே ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை கலைப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், இந்தப் பிரச்சாரம் தன்னைக் காப்பதற்காக அல்ல, மாறாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பிறரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




