சிறைச்சாலை மோதல்கள் குறித்து விசாரணை தீவிரம்: 2000 இற்கு மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு
நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.
“நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாகச் சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
அத்துடன், இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக 61 பேர் சந்தேக நபர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர். வரும் 21 ஆம் திகதி அவர்களுக்கான அடையாள அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
இதேவேளை, மஹரச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 925 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குருவிட்ட உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலச்சம்பவங்கள் குறித்தும் விசாரணைகள் தொடர்கின்றன.” – எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.




