ஐரோப்பா

பெலாரஸ் எல்லையில் சுரங்கப்பாதை கண்டுப்பிடிப்பு – சட்டவிரோத குடியேறிகள் குறித்து அச்சம்

பெலாரஸுடனான எல்லைக்குக் கீழே ஒரு சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதாக லாட்வியா இன்று தெரிவித்துள்ளது.

குறித்த சுரங்கப்பாதையின் ஊடாக சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ஐரோப்பிய நாடுகளுக்கு நுழையக் கூடும் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சட்டவிரோதமாக எல்லையைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படும் வலையமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டங்களையும் அந்நாடு அறிவித்துள்ளது.

இதற்கமைய எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த அந்நாடு உறுதிப்பூண்டுள்ளதுடன், “எல்லைக் காவல்படை, மாநிலக் காவல்துறை, தேசிய ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கு இடையே நெருங்கிய ஒத்துழைப்பை பேண நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும்  சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை முன்கூட்டியே கண்டறிந்து கைது செய்வதற்காக ட்ரோன்களை அதிக அளவில் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் செவுட்டா எனும் தனித்த பகுதிக்கு பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வருகை தந்துள்ள நிலையில், குடியேற்றம் குறித்து ஐரோப்பிய நாடுகள் கவலைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்