விளையாட்டு

ஸ்கொட்லாந்தின் அதிரடியில் வீழ்ந்தது இத்தாலி!

  • February 9, 2026
  • 0 Comments

T 20 உலக்கிண்ண தொடரில் 7ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி அணியை 73 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது ஸ்கொட்லாந்து அணி. T20 போட்டியில் இன்று (09) நடைபெற்ற 7 ஆவது லீக் ஆட்டத்தில் இத்தாலி Italy மற்றும் ஸ்கொட்லாந்து Scotland அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இத்தாலி அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மட்டும் 207 ஓட்டங்களைப் பெற்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

“உள்வீட்டுப் பிரச்சினை மிகக்கேவலமாக உள்ளது”

  • February 9, 2026
  • 0 Comments

“தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் உள்வீட்டுப் பிரச்சினை மிகக் கேவலமாக உள்ளது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் S. Siritharan தெரிவித்தார். “நாடாளுமன்றக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டதைக்கூட இனிப்பு வழங்கி, பெனர் கட்டி கொண்டாடுகின்றனர். எமது மண்ணில் இதற்கு முன்னர் இப்படி நடந்துள்ளதா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார். “ எனக்கு எதிராக மிகப்பெரிய உளவியல் போர் தொடுக்கப்படுகின்றது. இந்த உளவியல் போரால்தான் கட்சியில் இருந்து பலர் வெளியேறினார்கள். என்.பி.பி.மீது தமிழ் மக்கள் காதல்கொண்டு வாக்களிக்கவில்லை. எமது கட்சிமீது […]

உலகம்

போண்டி துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற கடற்கரையில் இஸ்ரேல் ஜனாதிபதி அஞ்சலி!

  • February 9, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட போண்டி கடற்கரைப் பகுதியில், இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் (Isaac Herzog) இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார். நான்கு நாள் விஜயமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர், போண்டி தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். “ஒரு யூதர் காயமடைந்தால், அனைத்து யூதர்களும் தங்கள் வலியை உணர்கிறார்கள்,” என்று கூறிய அவர், துக்கமடைந்த குடும்பங்களை அரவணைத்து ஆறுதல்படுத்த” அங்கு வருகை தந்ததாக கூறினார். அத்துடன் இந்த விஜயத்தின்போது […]

ஐரோப்பா

ரஷ்ய ஜெனரல் மீதான கொலை முயற்சி – பின்னணியில் போலந்து?

  • February 9, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் உயர்மட்ட  இராணுவ அதிகாரியான விளாடிமிர் அலெக்ஸீவ் (Vladimir Alexeyev) மீதான கொலை முயற்சி சம்பவத்திற்கும் போலந்திற்கும் தொடர்புள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யாவின் FSB உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஆட்சேர்ப்பு செய்வதில் போலந்து உளவுத்துறை ஈடுபட்டதாக எவ்வித ஆதாரத்தையும் முன்வைக்காமல் குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் இந்த கொலை முயற்சியை உக்ரைன் மறுத்துள்ள அதேநேரம் இது தொடர்பில் போலந்து எவ்வித கருத்தும் வெளியிடவில்லை. இதேவேளை இந்த கொலை முயற்சி தொடர்பில், உக்ரைனில்  பிறந்த […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் – தொழிற்சங்கங்கள் கூட்டாக அழைப்பு!

  • February 9, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ( Keir Starmer) பதவி விலக வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான மண்டேல்சனின் உறவு தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு  குறிப்பிடத்தக்க அழுத்தத்தை கொண்டுவந்துள்ளது. மண்டேல்சனை அமெரிக்க தூதராக நியமிக்க ஆலோசனை வழங்கிய மோர்கன் மெக்ஸ்வீனி (Morgan McSweeney)  பதவி விலகியதை தொடர்ந்து தற்போது ஸ்டாமரும் பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீயணைப்பு துறையின் தொழிற்சங்க  சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டீவ் ரைட் (Steve […]

அரசியல் இலங்கை செய்தி

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து விடைபெற தயார்: சிறிதரன் எம்.பி. பகிரங்கம்!

  • February 9, 2026
  • 0 Comments

“அரசியலமைப்பு பேரவை விவகாரம் தொடர்பில் தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு தயார்.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் S. Siridaran தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து சிறிதரன் எம்.பி. தெரிவிக்கப்பட்டுள்ளார். அப்பதவி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே சிறிதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். “அரசியலமைப்பு பேரவையில் இராணுவத்துக்கு ஆதரவாக […]

கருத்து & பகுப்பாய்வு

பெண்களை கருத்தரித்து புதிய மனித இனத்தை உருவாக்கும் இரகசிய கனவு – எப்ஸ்டீனின் உலகம்

  • February 9, 2026
  • 0 Comments

செல்வமும் அதிகாரமும் கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் மரபணு கனவு மற்றும் வெளிப்படாத யோசனைகள் மனித இனத்தை வடிவமைக்கும் மர்மத் திட்டம் பாலியல் குற்றவாளியான அமெரிக்காவின் நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் – செல்வம், அதிகாரம், அறிவியல் வட்டாரங்களின் நெருங்கிய தொடர்புகள் என அனைத்தையும் தன் கைகளில் இணைத்து வைத்திருந்த ஒரு மனிதர். 2019 ஆம் ஆண்டு நியூயோர்க் சிறையில் மர்மமான முறையில் அவர் உயிரிழந்ததும், அவரது வாழ்க்கை விடயங்களும் உலகளாவிய அரசியல், சமூக மற்றும் நீதிச் சூழல்களுக்கு மையமாக […]

இலங்கை செய்தி

திருமலை புத்தர் சிலை விவகாரம்: சந்தேக நபர்களுக்கு மறியல் நீடிப்பு!

  • February 9, 2026
  • 0 Comments

பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்குரிய விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. திருகோணமலை கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது. குறித்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் […]

இலங்கை செய்தி

ஜெனிவா இராஜதந்திர சமர் 23 இல் ஆரம்பம்: விஜித தலைமையில் இலங்கை குழு பங்கேற்பு!

  • February 9, 2026
  • 0 Comments

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் UN Human Rights Council 61 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. ஏப்ரல் 2 ஆம் திகதிவரை அமர்வுகள் நடைபெறும் என்ற போதிலும் பெப்ரவரி 23 முதல் 27 வரையான காலப்பகுதிக்குள்ளேயே உயர்மட்ட சந்திப்பு இடம்பெறும். குறித்த மாநாட்டில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளது. ஜெனிவாவில் முக்கிய சில சந்திப்புகளை நடத்துவதற்கு இலங்கை குழு திட்டமிட்டுள்ளது. […]

உலகம்

லெபனானில் இடிந்து விழுந்த அடிக்குமாடிக் குடியிருப்பு – 09 பேர் பலி!

  • February 9, 2026
  • 0 Comments

லெபனானில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 09 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லெபனானின் வடக்கு நகரமான திரிபோலியில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 08 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் நடவடிக்கை முழுவீச்சில் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய மேலும் 6 பேர் மீட்கப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.