விளையாட்டு

1996 இல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செய்த செயலை சுட்டிக்காட்டி அநுர நன்றி தெரிவிப்பு!

  • February 10, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி திட்டமிட்ட அடிப்படையில் நடப்பது மகிழ்ச்சியளிக்கின்றது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake தெரிவித்தார். போட்டி நடைபெறுவதை உறுதிப்படுத்தியதற்காக பாகிஸ்தான் பிரதமருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐ.சி.சி. முன்னெடுத்த முயற்சிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராட்டு தெரிவித்துள்ளார். 1996 உலகக் கோப்பையின் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஏனைய அணிகள் கொழும்பில் விளையாடாத நேரத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கைக்காக காட்டிய ஒற்றுமையை ஒருபோதும் மறக்கமாட்டோம் […]

விளையாட்டு

பாகிஸ்தான் ‘பல்டி’ – இந்தியாவுடன் மோத முடிவு!

  • February 10, 2026
  • 0 Comments

T -20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் தொடர்பில் தான் எடுத்திருந்த முடிவை பாகிஸ்தான் Pakistan மாற்றியுள்ளது. இதற்கமைய இந்தியாவுடன் இலங்கை ஆடுகளத்தில் விளையாட அந்நாடு சம்மதம் தெரிவித்துள்ளது. T – 20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டி புறக்கணிக்கப்படும் என பாகிஸ்தான் அறிவித்திருந்தது. எனினும், இது தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைPakistan Cricket Board , ICC க்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது.இருந்தது. போட்டியை புறக்கணித்தால் கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படும் என […]

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை இழந்ததற்கான மற்றொரு அறிகுறி – கன்சர்வேடிவ் விசனம்

  • February 9, 2026
  • 0 Comments

டவுனிங் ஸ்ட்ரீட் தகவல் தொடர்பு பணிப்பாளர் டிம் ஆலன் (Tim Allan)  திடீரென பதவி விலகியுள்ள நிலையில் பிரதமர் ஸ்டார்மர் தனது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை இழந்ததற்கான மற்றொரு அறிகுறியென  கன்சர்வேடிவ் தலைவர் கெமி படேனோக் (Kemi Badenoch) விமர்சித்துள்ளார். மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பிலான வெளிப்பாடுகள் பிரித்தானியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரதமர் ஸ்டார்மரின் மிக நெருக்கமான அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் […]

இலங்கை செய்தி

கெஹலியவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • February 9, 2026
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, குறித்த வழக்கின் மேலதிக விசாரணையை மார்ச் மாதம் 14 ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவிட்டார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் […]

இலங்கை

டிட்வா – இலங்கை பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக ஐ.நா தகவல்

  • February 9, 2026
  • 0 Comments

டிட்வா புயல் காரணமாக நாடு தற்போது பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக சேதங்கள் குறித்து வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, கடந்த வருடம் டிசம்பர் மாத்தில் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரியது. இதன் மூலம், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 06 இலட்சத்து 58 ஆயிரம் பேருக்கு உதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை, இந்த திட்டத்தின் கீழ் […]

இலங்கை செய்தி

பாடசாலை போக்குவரத்து சேவையை மேலும் திறமையாக பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம்

  • February 9, 2026
  • 0 Comments

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் “சிசு சரிய” பாடசாலை போக்குவரத்து சேவையை மேலும் திறமையாக பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள வரைவு விதிமுறைகள் குறித்தும், அதில் சேர்க்கப்பட வேண்டிய புதிய […]

உலகம்

மீதமுள்ள எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடுமாறு 08 பெண்கள் கூட்டாக வலியுறுத்தல்!

  • February 9, 2026
  • 0 Comments

சூப்பர் பவுல் எல்எக்ஸ் (Super Bowl LX) நிகழ்ச்சிக்கு முன்னதாக, அமெரிக்க நீதித்துறை மீதமுள்ள எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட வேண்டும் என பாதிக்கப்பட்ட 08 பெண்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். வேர்ல்ட் வித்தவுட் எக்ஸ்ப்ளோயிட்டேஷன் (World Without Exploitation) வெளியிட்ட விளம்பரமொன்றில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் இளம் வயது புகைப்படங்களை வழங்கியுள்ளனர். இருப்பினும் தடுத்து நிறுத்தப்பட்ட கோப்புகள் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தலாம், குழந்தைகளின் ஆபாசப் படங்களைக் கொண்டிருக்கலாம் அல்லது நடந்துகொண்டிருக்கும் கூட்டாட்சி விசாரணைகளில் தலையிடக்கூடும் என்று நீதித்துறை கூறுகிறது. […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய உள்துறை அலுவலகத்தின் புதிய குடியேற்ற திட்டம் – தவிக்கும் குழந்தைகள்!

  • February 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சட்டப்பூர்வ இடம்பெயர்வு விதிகள் குறித்த உள்துறை அலுவலகத்தின் புதிய திட்டங்களால் ஏறக்குறைய  300,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என சிந்தைனைக் குழுவொன்று எச்சரித்துள்ளது. சட்டப்பூர்வ இடம்பெயர்வுதாரர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தானியங்கி தீர்வு நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. புலம்பெயர்ந்தோர் பொதுவாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு அசேலம் கோரி விண்ணப்பிப்பார்கள். அவர்களின் பங்களிப்பை பொறுத்து கால அளவுகள் மாறுப்படும். சிலருக்கு 20 ஆண்டுகள் எடுக்கலாம். இந்த நீடித்த கால இடைவெளியானது, குடும்பங்களுக்கு […]

இலங்கை செய்தி

வாகனம் வாங்க விரும்புவோருக்கான அதிர்ச்சி தகவல்

  • February 9, 2026
  • 0 Comments

வாகன இறக்குமதியின் போது விதிக்கப்படும் 50 வீத மேலதிக வரி நடைமுறையை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்களின் கீழ் இந்த வரி விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நடைமுறை 2026 ஆம் ஆண்டின் இறுதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த 50 வீத […]

இலங்கை செய்தி

மிகப்பெரிய பொருளாதார திட்ட முன்மொழிவுகளை தயாரிக்குமாறு பணிப்பு!

  • February 9, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் அதிகாரிகளுக்கு மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் இன்று திங்கட்கிழமை (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட […]