இலங்கை செய்தி

நாடாளுமன்ற உறுப்பினர் அடித்துக் கொலை: 12 பேருக்கு மரண தண்டனை!

  • February 11, 2026
  • 0 Comments

அரகலய என்றழைக்கப்படும் மக்கள் போராட்டத்தின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கி Amarakeerthi Athukorala கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 12 பேருக்கே கம்பஹா மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மேற்படி தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் 41 பேருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எனினும், 37 பேர்தான் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்கள். மூவரடங்கிய நீதிபதிகள் குழாமில் இருவர் […]

இலங்கை செய்தி

இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்!

  • February 11, 2026
  • 0 Comments

இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய வெளிவிவகாரச் சேவையின் பிரதிநிதிகள் European External Action Service , பிரதமர் பிரதமர் கலாநிதி ஹரிணி Dr. Harini Amarasooriya அமரசூரியவை சந்தித்து பேச்சு நடத்தினர். பிரதமர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது. இலங்கையின் முக்கிய அபிவிருத்தி மற்றும் பொருளாதாரப் பங்காளியாக ஐரோப்பிய ஒன்றியம் விளங்குவதாக இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார். இருதரப்புக்கும் இடையிலான நீண்டகாலப் பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்துவத்தை […]

ஐரோப்பா

நோர்வேயில் கூடுதல் துருப்புக்களை நிலைநிறுத்தும் பிரித்தானியா!

  • February 11, 2026
  • 0 Comments

நோர்வேயில் தனது துருப்புக்களின் எண்ணிக்கையை 1,000 இருந்து 2,000 ஆக அதிகரிக்க பிரித்தானியா உத்தேசித்துள்ளது. பனிப்போருக்குப் பிறகு ஆர்க்டிக் மற்றும் உயர் வடக்கின் பாதுகாப்புக்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி ( John Healey) கூறியதை தொடர்ந்து துருப்புக்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வரும் மார்ச் மாதத்தில், ஆர்க்டிக் சென்ட்ரி பயிற்சியில் இங்கிலாந்து பங்கேற்கும் என்றும், இதற்காக 1500 துருப்புகள் அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில், […]

உலகம்

அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் வந்த எச்சரிக்கை – ஈரான் அடிப்பணிய வேண்டும் என மிரட்டல்!

  • February 11, 2026
  • 0 Comments

அணுசக்தி செறிவூட்டல் முதல் பாலிஸ்டிக் ஏவுகணைகள் வரையிலான பிரச்சினைகள் குறித்த தனது கோரிக்கைகளுக்கு தெஹ்ரான் இணங்கவில்லை என்றால், இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  ஈரானை எச்சரித்துள்ளார். இஸ்ரேலிய ஊடகமான சேனல் 12 வெளியிட்டுள்ள செய்தியில்  ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை என்றால் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து  சூசகமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ட்ரம்ப் நிர்வாகம் மத்திய கிழக்கிற்கு இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்பவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அந்த செய்தியில் […]

ஐரோப்பா

அல்பேனியாவில் அரச எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் – 16 பேர் காயம், பலர் கைது!

  • February 11, 2026
  • 0 Comments

அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் (Tirana)  உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை முன்னெடுத்துள்ளனர். பிரதமர் எடி ராமா (Edi Rama) பதவி விலக வேண்டும் எனக் கோரி மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஊடக அறிக்கைகளின்படி, அல்பேனியாவின் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அருகிலும் மோதல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதில் குறைந்தது 16 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், 13 பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும் […]

அரசியல் இலங்கை செய்தி

வலுவான எதிரணி மலரும்: ஐதேக நம்பிக்கை

  • February 11, 2026
  • 0 Comments

“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்த பின்னர் வலுவானதொரு கூட்டு எதிரணியைக் கட்டியெழுப்ப முடியும்.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன Ruwan Wijewardena தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பேச்சு நடத்தப்பட்டுவருகின்றது. அது சாதகமான திசையை நோக்கி பயணிக்கின்றது. சிறந்த பிரதிபலன் கிடைக்கும் என நம்புகின்றோம். கிராம மட்டங்களில் பிளவுபட்டிருக்கும் கட்சி ஆதரவாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். […]

உலகம் செய்தி

55 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து விபத்து!

  • February 11, 2026
  • 0 Comments

ஏடன் அட்டே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானத்தில் 55 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் இறக்கைகளில் ஒன்று உடைந்து தண்ணீரில் மிதக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக விமானம் உயரத்தை அடைய முடியாமல் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் நடக்காது: ராஜித கருத்து!

  • February 11, 2026
  • 0 Comments

“மாகாணசபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் நடத்தாது.” என அடித்துக் கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “உள்ளாட்சிசபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசுக்குரிய வாக்குவங்கி மேலும் வீழ்ச்சியடையும். எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுமா என்பது சந்தேகமே. தோல்வியென தெரிந்தும் அதனை எதிர்கொள்வதற்கு ஆளுங்கட்சி முன்வராது என்றே தெரிகின்றது. தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்துக்கு பதில் இல்லை. […]

இந்தியா

17 ஆம் திகதி இந்தியா வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி!

  • February 11, 2026
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் Emmanuel Macron மூன்று நாள் பயணமாக எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியா வருகின்றார். டெல்லியில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு AI உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா மற்றும் பிரான்சுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார். இரு தரப்பு வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் […]

அரசியல் இலங்கை செய்தி

“அரசியல் லாபத்துக்காகவே கடந்த காலங்களில் வீதி அபிவிருத்தி”

  • February 11, 2026
  • 0 Comments

“கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர்.” ஆனால், தற்போதைய அரசாங்கமே மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து வீதிகள், பாலங்கள் மற்றும் இறங்குதுறைகளை அபிவிருத்தி செய்து வருகின்றது.” இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ” மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு, இன்று (11.02.2026) காலை அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. […]