ஐரோப்பா

புதிய டிஜிட்டல் நுழைவு-வெளியேறும் முறையை நிறுத்திவைக்குமாறு கோரிக்கை!

  • February 11, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாட்டினருக்கான புதிய டிஜிட்டல் நுழைவு-வெளியேறும் முறையை  (EES) முழுமையாக நிறுத்திவைக்குமாறு விமானத் துறைத் தலைவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த முறை இடைநீக்கம் செய்யப்படாவிட்டால் கோடை விடுமுறையில் பயணிகள்  நான்கு மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட காத்திருப்பு நேரங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய தாமதங்கள் பகுதியளவு வெளியிடப்பட்டாலும் கூட இரண்டு மணிநேரம் வரை இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் நுழைவு திட்டம் பிரித்தானிய பயணிகள் ஷெங்கன் […]

ஐரோப்பா

சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் கூர்மையான சரிவு – குடியேற்ற திட்டத்தில் பாரிய முன்னேற்றம்!

  • February 11, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் படிக்கும்  வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பிரித்தானிய   உயர்கல்வி புள்ளிவிவர நிறுவனத்தின் (HESA) புதிய தரவு காட்டுகிறது. வெளிநாடுகளில் வழங்கப்படும் பிரித்தானிய  கல்வித் திட்டங்களில் சேருபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. HESA-வின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2024/25 ஆம் ஆண்டில் பிரித்தானியா 685,565 சர்வதேச மாணவர்களை வரவேற்றது, இது 2023/24 உடன் ஒப்பிடும்போது 6 சதவீதம் சரிந்துள்ளது. சர்வதேச மாணவர் வரியை அறிமுகப்படுத்துவதற்கு பல்கலைக்கழகங்கள் தயாராகி வருவதால் மாணவர் […]

இந்தியா

கனடாவில் துப்பாக்கிச்சூடு: இந்திய பிரதமர் இரங்கல்!

  • February 11, 2026
  • 0 Comments

கனடா பாடசாலைக்குள் நடத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “கனடாவில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த ஆழ்ந்த துக்க தருணத்தில் கனடா மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது.” என பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, […]

விளையாட்டு

பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆட்டம்: போராடி தோற்றது ஆப்கானிஸ்தான்!

  • February 11, 2026
  • 0 Comments

T 20 உலகக்கிண்ண தொடர்பில் இன்று நடைபெற்ற 13 ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் Afghanistan மற்றும் தென் ஆப்பிரிக்கா South Africa அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது. அதிகபட்சமாக Quinton de Kock 59 ஓட்டங்களையும், Ryan Rickelton 61 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். […]

இலங்கை செய்தி

கஸ்ஸப தேரர் உட்பட 10 பேருக்கு நிபந்தனையுடன் பிணை!

  • February 11, 2026
  • 0 Comments

திருகோணமலை- கடற்கரையில் கடல் பாதுகாப்பு சட்டத்தை மீறி சட்டவிரோத கட்டுமானம் அமைத்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்றம் (11) பிணை வழங்கியுள்ளது. இவ்வழக்கு நீதவான் நீதிமன்றில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் தொடர்ந்து எதிராளிகளுக்கான பிணை கோரிக்கைக்கான மனு தொடர்பான விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது இதனை அடுத்து 10 எதிராளிகளையும் பிணையில் விடுப்பதற்கான உத்தரவினை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் வழங்கினார். இதன்படி மீளவும் […]

இலங்கை செய்தி

மாறியது வரலாறு: தோட்டத் தொழிலாளர்களை நேரில் சென்று சந்தித்தார் ஜனாதிபதி!

  • February 11, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மலையக பெருந்தோட்டப் பகுதிக்குச் சென்று, தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன. மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான சம்பளம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது. தமக்குரிய சம்பள உயர்வு நேற்று கிடைக்கப்பெற்றதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையிலேயே அவர்களை ஜனாதிபதி இன்று நேரில் சந்தித்தார். முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நுவரெலியா சென்றார். அங்கு செல்லும் வழியிலேயே தொழிலாளர்களைச் சந்தித்து, […]

உலகம்

மடகஸ்காரில் கரையை கடந்த கெசானி புயல் – 09 பேர் பலி!

  • February 11, 2026
  • 0 Comments

மடகஸ்காரில் கெசானி (Gezani ) புயல் நள்ளிரவில் கரையைக் கடந்துள்ள நிலையில், 09 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு துறைமுக நகரமான டோமாசினாவில் (Toamasina) உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஒன்பது பேர் இறந்ததாகவும், சுமார் 19 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 195 கிமீ (121 மைல்) வேகத்தில் காற்று வீசியதுடன், பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நாட்டின் வடகிழக்கில் உள்ள […]

ஐரோப்பா

லண்டனில் பாடசாலையொன்றில் கத்தி குத்து தாக்குதல் – இரு சிறார்கள் ஆபத்தான நிலையில்!

  • February 11, 2026
  • 0 Comments

வடமேற்கு லண்டனில் உள்ள பாடசாலையொன்றில் இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டன் நேரப்படி நேற்று மதியம் கிங்ஸ்பரி உயர்நிலைப் பாடசாலையில் குறித்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றது. இதில் 13 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் தாக்கப்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. “சுற்றுப்புற சூழ்நிலைகள்” காரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு […]

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம்: ஐரோப்பிய குழுவிடம் தமிழரசுக் கட்சி கோரிக்கை!

  • February 11, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்களுடன், ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் பல தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர். இதன் ஓர் அங்கமாகவே தமிழரசுக் கட்சியினருடன் சந்திப்பு நடைபெற்றுள்ளது. தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர். “ பயங்கரவாத தடைச் சட்டம் நீக்குதல் மற்றும் புது வரைபு, மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்ட வேறு பல விடயங்களை இதன்போது […]

விளையாட்டு

இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வைத்தியசாலையில் அனுமதி!

  • February 11, 2026
  • 0 Comments

இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா (Abhishek Sharma) வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இதனால்  நமீபியாவுக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது போட்டியில் அவர் விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது. வயிற்று தொற்று காரணமாக அபிஷேக் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பிரச்சனையைக் கண்டறிய சில சோதனைகள் செய்யப்படுகின்றன. இன்று […]