ஐரோப்பா செய்தி

பொலிஸ் நாயின் உயிரை பறித்த இளைஞர் உயிரை பறிகொடுத்த சோகம்

  • September 5, 2023
  • 0 Comments

ஜார்ஜியாவில் பொலிஸ் நாயைக் கொன்று, அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 17 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். கிளேட்டன் கவுண்டி காவல் துறை அந்த வாலிபரை ஸ்டீபன் ஃபோர்டு என அடையாளம் கண்டுள்ளது. அதிகாலை 2 மணிக்கு முன்னதாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் மூன்று பேர் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான சம்பவம் குறித்த புகாருக்கு ஜோன்ஸ்போரோ காவல் துறை உடனடியாக பதிலளித்தது, மேலும் மூவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். பின்னர், இரண்டு […]

இலங்கை செய்தி

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை ஆரம்பம்

  • September 5, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை (06.09.2023) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் […]

ஆசியா செய்தி

கணவர் கடத்தப்பட்டதாக பாகிஸ்தான் டிக்டாக் நட்சத்திரம் குற்றச்சாட்டு

  • September 5, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் டிக்டாக் நட்சத்திரம் ஹரீம் ஷா தனது கணவர் பிலால் ஷா ஏழு நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து கராச்சிக்கு வந்த பிறகு கடத்தப்பட்டதாகக் தெரிவித்துள்ளார். X இல் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், பிரபலமான TikToker தனது கணவர் “தெரியாத காரணங்களுக்காக கடத்தப்பட்டதாக” குற்றம் சாட்டியது மற்றும் இந்த விஷயத்தை விசாரிக்க பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளார். தம்பதியினர் லண்டனில் இருப்பதாகவும், ஆனால் அவரது கணவர் சில வேலைகளுக்காக பாகிஸ்தானுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் அவர் […]

பொழுதுபோக்கு

காதல் கணவரை பிரிந்தாரா சுவாதி? வாய்திறந்த நடிகை..

  • September 5, 2023
  • 0 Comments

ஜெய், சசிகுமார் நடிப்பில் 2008 -ம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சுவாதி ரெட்டி. முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தார். சுவாதி ரெட்டி கடந்த 2018 -ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விகாஸ் வாசுவை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஸ்வாதி ரெட்டி தனது காதல் கணவரை விவகாரத்து செய்ய போகிறார் என […]

இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி யாழில் பல்வேறு தரப்பினருடன் முக்கிய சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்துள்ளார். அத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை பல்வேறுபட்ட சந்திப்பில் ஈடுபட்டார். யாழ்ப்பாண மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடல் ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரனுக்கும் இடையிலான யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பான விரிவான கலந்துரையாடல் இன்றைய தினம் (05) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க […]

ஆஸ்திரேலியா செய்தி

பெண்ணின் அடிவயிற்றில் காணப்பட்ட அறுவை சிகிச்சை கருவி

  • September 5, 2023
  • 0 Comments

நியூசிலாந்தில் ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஒரு பெண்ணின் அடிவயிற்றில் திறந்த அறுவை சிகிச்சைக் காயங்களைப் பிடிக்கப் பயன்படும் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் 18 மாதங்களாக கடுமையான வலியால் அவதிப்பட்டதாகவும், இரவு உணவுத் தட்டின் அளவுள்ள ரிட்ராக்டர், CT ஸ்கேன் செய்தபோது மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. “எந்தவொரு வழக்கமான அறுவை சிகிச்சை சோதனையின்போதும் [ரிட்ராக்டர்] அடையாளம் காணப்படாததால், வழங்கப்பட்ட கவனிப்பு பொருத்தமான தரத்திற்கு கீழே குறைந்துவிட்டது என்பது சுயமாகத் தெரிகிறது, இதன் விளைவாக அது பெண்ணின் […]

இலங்கை

கண் வில்லைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்!

நாட்டில் கண் வில்லைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துப்பொருட்கள் விநியோகப் பிரிவின் களஞ்சியசாலைகளில் மாத்திரமே கண் வில்லைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் கண் வில்லை சத்திரசிகிச்சைகள் வழமை போன்றே மேற்கொள்ளப்படுவதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ தசநாயக்க தெரிவித்துள்ளார். இதனிடையே, நாட்டில் 160 வகையான மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த மருந்துகளை […]

விளையாட்டு

Asia Cup – ஆப்கான் அணிக்கு 292 ஓட்ட வெற்றியிலக்கு

  • September 5, 2023
  • 0 Comments

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் ஆட்டத்தில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு 292 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் குசல் ​மெந்திஸ் அதிகபட்சமாக 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை […]

இலங்கை

கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன்!

கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் முதலிடம் பெற்றுள்ளார். 2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியிருந்தது. அதனடிப்படையில் க.பொ.த.உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். முதலிடம் பெற்ற மாணவன் தேவகரன் அவர்கள் அடம்பன் […]

இலங்கை

ஆணைத்தீவு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் மரணம்!

  • September 5, 2023
  • 0 Comments

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஈச்சிலப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.இவ்விபத்து இன்று (05) மாலை இடம்பெற்றுள்ளது இவ்விபத்தில் ஈச்சிலப்பற்று -இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியில் வசித்து வரும் சந்திரராஜ் கஜேந்திரராஜ் (21) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. வெருகல் கோயிலில் விசேட வழிபாட்டிற்கு தனது தாய் மற்றும் தம்பி ஆகியோரை கோயிலுக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது இவ்விபத்து இடம் பெற்றதாகவும் தெரிய […]