இலங்கை

பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டம் – செல்வம் எம்பி

  • October 5, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், பௌத்த பிக்குகளால் குறி வைக்கப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில், குருந்தூர் மலை தொடர்பான தீர்ப்பை மாற்ற வேண்டும் என்று அழுத்தங்கள் , உயிர் அச்சுறுத்தல் பிரயோகிக்கப்பட்டுள்ளதால் நீதிபதி அவர்கள் நாட்டைவிட்டு சென்றிருக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பதென்பது ஒரு விடயம். ஆனால் அவர்களுடைய பதவிகளை ராஜினாமா செய்வதென்பது என்னைப்பொறுத்தமட்டிலே […]

இலங்கை

முல்லைத்தீவில் துப்பாக்கிகளுடன் சிக்கிய நபர்

  • October 5, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இடியன் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (04.10.2023) இரவு 8.30 மணியளவில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேப்பாபிலவு பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற பொலிசார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி இரண்டினை வைத்திருந்ததன் பேரிலே 34 வயதுடைய நபர் இடியன் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான […]

இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை

  • October 5, 2023
  • 0 Comments

இந்த நாட்டில் உள்ள மக்கள் அனைவரையும் ஒன்றாக பார்ப்பதாக கூறும் ஜனாதிபதி அவர் அவ்வாறு நோக்குவாரானால் தமது பிரச்சினைக்கு உடனடி தீர்வினைப்பெற்றுத்தர நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று மாலை கொட்டும் மழையிலும் கால்நடை பண்ணையாளர்கள் கைகளில் தீப்பந்தங்களை ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பில் கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 20தினங்களாக வீதியில் போராடிவருகின்றனர்.தமது கால்நடைகளையும் குடும்பங்களையும் கவனியாது 20 நாட்களாக வீதிகளில் போராடிவருகின்றனர். மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை […]

இலங்கை

பிரகீத் எக்னலிக்கொடா கடத்தப்பட்டு 5000 நாட்கள் – நீதிக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

  • October 5, 2023
  • 0 Comments

வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிக்கொடா கடத்தப்பட்டு 5000 நாட்கள் கடந்துள்ள நிலையில் அவருக்கான நீதிக்கோரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மட்டக்களப்பில் முன்னெடுத்துள்ளனர். பகல் 12 மணியளவில் காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் தூபிக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உளவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமையும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் எக்னலி கொடவிற்கான சர்வதேச விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இலங்கையில் படுகொலை […]

விளையாட்டு

உலகக் கோப்பை யாருக்கு – பிரபல ஜோதிடரின் கணிப்பு

  • October 5, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இன்று முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்துடன் போட்டியிடுகின்றது. இந்நிலையில், இந்த ஆண்டில் பிறந்த கேப்டனின் தலைமையிலான அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று பிரபல […]

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்த எல்லைகளில் கட்டுப்பாடுகள் – ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை

  • October 5, 2023
  • 0 Comments

ஒழுங்கற்ற புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆஸ்திரியா, செக்கியா மற்றும் போலந்து ஆகியவை ஸ்லோவாக்கியாவுடனான எல்லைகளில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. எல்லைப்புற சோதனைகள் இன்று நடைமுறைக்கு வந்துள்ளன, மேலும் அவை பத்து நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த முடிவை ஆஸ்திரியாவின் உள்துறை அமைச்சர் கெர்ஹார்ட் கர்னர் உறுதி செய்துள்ளார். கடத்தல்காரர்கள் தங்கள் வழிகளை மாற்றுவதற்கு முன் நாம் திறம்பட கட்டுப்படுத்த வேண்டும். மிருகத்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற கடத்தல் மாஃபியாவை எதிர்ப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால்தான் ஸ்லோவாக்கியாவுடனான எல்லைக் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பரபரப்பு – 5 மாணவர்கள் காயம்

  • October 5, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உள்ள மோர்கன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதனால் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிக்கும் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது இருதரப்பு மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வன்முறை அதிகரித்த நிலையில் மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால்சரமாரியாக சுட தொடங்கினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 மாணவர்கள் […]

பொழுதுபோக்கு

இந்த வாரம் வெளியேறப் போகும் பிக் பாஸ் போட்டியாளர்… சரியான முடிவு

  • October 5, 2023
  • 0 Comments

கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே விறுவிறுப்படைந்துள்ளது. அதுவும் இந்த முறை பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இருக்கிற18 போட்டியாளர்களையும் இரண்டு குழுக்களாக பிரித்து வைத்திருக்கின்றனர். இந்த இரண்டு வீடுகளிலும் தனித்தனியாக எவிக்சன் ப்ராசஸ் நடத்தப்பட்டு ஏழு போட்டியாளர்களை இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் தேர்வு செய்தனர். இந்த ஏழு பேருக்கும் அவர்களுடைய ரசிகர்கள் தங்களது ஓட்டுக்களை திங்கட்கிழமை முதல் கொடுக்க வருகின்றனர். முதல் வாரத்திற்கான நாமினேஷனில் […]

ஐரோப்பா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு – ஊடகவியலாளருக்கு 8 வருட சிறைத்தண்டனை

  • October 5, 2023
  • 0 Comments

ஊடகவியலாளர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த பத்திரிக்கையாளர் மெரினா ஓவ்சியானிகோவாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோ நீதிமன்றம் அவருக்கு 8 வருடங்கள் 05 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன், நான்கு வருட காலத்திற்கு இணையம் உட்பட இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கு தடையும் விதித்துள்ளது. 45 வயதுடைய பெண் ரஷ்ய ஆயுதப் படைகள் குறித்து தவறான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் காணப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. […]

இலங்கை

இலங்கை முழுவதும் 48 மணித்தியாலங்களில் 5 சிறார்கள் உட்பட 11 பேரை காணவில்லை

  • October 5, 2023
  • 0 Comments

நாட்டின் பல்வேறு பகுதிகயில் கடந்த 48 மணித்தியாலங்களில் 5 சிறார்கள் உட்பட 11 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள மெஹேனி மடத்தில் பணிபுரிந்த 14 மற்றும் 15 வயதுடைய பிக்கு சிறுவர்கள் இருவர், பிபில பிரதேசத்தில் உள்ள பெண்கள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 16 வயது சிறுமிகள் இருவர், கடந்த 3ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளனர். இந்த 2 பெண்களும் உள்ளூர் பாடசாலை ஒன்றில் […]