செய்தி

ஆஸ்திரேலியாவில் வெள்ள அச்சம் – மெல்போர்னில் நீர் அமைப்பை சீரமைக்க நடவடிக்கை

  • October 7, 2023
  • 0 Comments

விக்டோரியா மாநில அதிகாரிகள் மெல்போர்னில் ஏற்பட்ட வெள்ளத்தை கட்டுப்படுத்தும் வகையில் நீர் அமைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சுமார் 500 வீடுகள் முற்றிலும் நீரில் மூழ்கின. பேரிடர் எச்சரிக்கை சமிக்ஞைகள் வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதமே காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயேச்சைக் குழுவை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி தற்போது 15 […]

வட அமெரிக்கா

அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்த 18 பேர் பரிதாபமாக மரணம்

  • October 7, 2023
  • 0 Comments

தெற்கு மெக்சிகோவில் குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில் 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பகுதி மலைகள் வழியாக வளைந்து செல்லும் வனப்பகுதி என்று கூறப்படுகிறது. வெனிசுலா மற்றும் ஹைட்டியில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கில் சிலர் இருந்ததாகவும், அதிவேகத்தால் அது கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த 8,200க்கும் அதிகமானோர் உயிரிழந்து காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் […]

ஐரோப்பா

போரில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாயம் – வெளியான அதிர்ச்சி தகவல்

  • October 7, 2023
  • 0 Comments

போரின் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டில் ரஷ்யா படையெடுத்ததில் இருந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைனின் 5இல் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளதாலும், இரு தரப்பினருமே ராணுவ உயிரிழப்புகள் குறித்த தரவுகளை இன்னும் வெளியிடவில்லை. இதனால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது கடினமான பணியாக உள்ளது. இந்நிலையில், 11 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 26 ஆயிரம் பேர் மாயமாகியுள்ளதாக உக்ரைனின் துணை […]

இலங்கை

கொழும்பில் குண்டுத் தாக்குதல் திட்டம்! சஜித் விடுத்துள்ள கோரிக்கை

  • October 7, 2023
  • 0 Comments

கொழும்பில் உள்ள 7 இடங்கள் மீது ஐ எஸ் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம் இருப்பதாக அரசாங்கப் பத்திரிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றம், நாடு மற்றும் மக்களுக்கு இது குறித்த உண்மை தன்மையை சரியாக அறிவிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். சிறைச்சாலையில் இருக்கும் ஐ எஸ் பயங்கரவாதிகளால் இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இது பாரதூரமானதோர் விடயம் […]

செய்தி

கொழும்பில் விபத்துக்குள்ளான பேருந்து சாரதிக்கும், நடத்துனருக்கும் விடுமுறை!

  • October 7, 2023
  • 0 Comments

கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த நிலையில் குறித்த பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் வேதனத்துடன் விடுமுறை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த இருவரினதும் மன அழுத்தத்தை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த இருவரையும் நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபையின் தலைமையகத்திற்கு அழைத்து, அதன் தலைவர் அவர்களுடன் […]

செய்தி

உலக அளவில் சீனியின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு

  • October 7, 2023
  • 0 Comments

உலக அளவில் சீனியின் விலை பாரிய அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. El Nino பருவநிலை மாற்றத்தால் இந்தியா, தாய்லந்து போன்ற நாடுகளில் சீனி உற்பத்தி குறைந்துள்ளதே அதற்குக் காரணம் என்று உணவு, வேளாண்மை நிறுவனம் தெரிவித்தது. உலகில் உணவுப் பொருள்களின் விலை கடந்த மாதம் (செப்டம்பர் 2023) சீராக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டம்பரில் சீனியின் விலைக் குறியீடு 9.8 விழுக்காடு உயர்ந்ததாக நிறுவனம் […]

இலங்கை

கடந்த 10 மாதங்களில் 1500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

  • October 7, 2023
  • 0 Comments

கடந்த 10 மாதங்களில் 1,638 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி  நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்களில் 1,733 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகளவிலானோர் பாதசாரதிகள் என்றும் அவர் கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  “இறந்தவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், 1,733 பேரில் 540 பேர் பாதசாரிகள். […]

விளையாட்டு

உலகக்கோப்பை 2023: சச்சின் கணித்த 4 அணிகள்

  • October 7, 2023
  • 0 Comments

சச்சின் டெண்டுல்கர் 2023 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் குறித்து கணிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை 2023 தொடங்குவதற்கு முன்பு கோப்பையுடன் களத்திற்கு சென்றபோது ஐசிசியிடம் சச்சின் டெண்டுல்கர் பேசினார். அப்போது எந்தெந்த அணிகள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு செல்லவாய்ப்பு உள்ளது என்பதை தெரிவித்தார். அப்போது பேசிய சச்சின் டெண்டுல்கர், 2011 உலகக் கோப்பையின் போது அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் காலிறுதி போட்டியை நினைவு கூர்ந்தார். 2011 உலகக் கோப்பையின் வரலாற்றுச் சாதனையை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

iPhone 15 pro சிக்கல் – ஆப்பிள் கொடுத்த விளக்கம்

  • October 7, 2023
  • 0 Comments

பலரது அதீத எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 15 மாடல் அறிமுகமானது. இந்நிலையில் தற்போது இந்த போனை பயன்படுத்தும்போது அதிகம் சூடாவதாக இதை வாங்கியவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக iphone 15 pro சீரிஸ் அதிகம் சூடாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இப்படி ஒரு பிரச்சனை iphone 15ல் இருப்பது உண்மைதான் என ஆப்பிள் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இதற்கான காரணம் என்னவென்பதையும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் நாடு கடத்தல் நடவடிக்கையை வேகப்படுத்த திட்டம்

  • October 7, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அகதிகளுடைய எண்ணிக்கையானது கடந்த வருடங்களை விட அதிகரித்து காணப்படுகின்றது. ஜெர்மனி நாட்டில் அதிகரித்து வரும் அகதிகள் தொகையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு அதிகரித்து செல்லுகின்ற காரணத்தினால் எதிர்கட்சியானது ஆளும் கூட்டு கட்சிக்கு மிகுதியான அழுத்தத்தை தெரிவித்து வருகின்றது. மேலும் நிராகரிக்கப்பட்ட அகதிகளை வெகுவிரைவில் நாட்டை விட்டு கடத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் நாட்டுக்குள் வரும் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து தொடர்பில் புதிய தொரு கவனத்தை மேற்கொண்டு அவற்றை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட […]