தாயிடமிருந்த ஒன்றரை வயது கைக்குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்!
சென்னை அடுத்த திருவொற்றியூரில் தெருவில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று, தாயின் கையில் இருந்த ஒன்றரை வயது குழந்தையை கடித்துக்குதறி, முகத்தை சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் பெரியார் நகர், விவேகானந்தர் தெருவில் வசித்து வரும் தேவி என்பவர் தனது ஒன்றரை வயது குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தெருநாய் ஒன்று திடீரென குழந்தை மீது பாய்ந்து, குழந்தையின் முகத்தில் கடித்துக்குதறி உள்ளது. நாயிடமிருந்து குழந்தையை […]













