வாக்கு எண்ணுதலில் ஏற்பட்ட தவறு குறித்து வெளிநாட்டு விசாரணை
சுவிட்சர்லாந்தில், வாக்கு எண்ணுதல் தொடர்பில் ஏற்பட்ட தவறு குறித்து ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பினால் கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் இருந்து நிபுணர்கள் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் சுவிட்சர்லாந்து மக்கள் கட்சி வெற்றி பெற்று உள்ளது. எனினும், சுவிட்சர்லாந்து புள்ளி விபரவியல் திணைக்களம் வாக்கு எண்ணுதலில் தவறிழைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தி இரண்டு மாத கால […]













