உலகம்

புளோரிடாவில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி 18 பேர் காயம்!

  • October 29, 2023
  • 0 Comments

புளோரிடாவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இன்று (29.10) இடம்பெற்றுள்ளது. நகர வீதியொன்றில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துடன்  18 பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பல மதுக்கடைகள் மற்றும் கிளப்புகளைக் கொண்ட ஒரு பகுதியில் இந்த சண்டை நிகழ்ந்துள்ளது.  துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு முன், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏதேனும் மதுக்கடைகளுக்குள் இருந்தார்களா என்பது  குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். “இது இரு குழுக்களுக்கு இடையே […]

இலங்கை

ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளாத என்மீது பொய்யான வழக்கு தாக்கல்: கௌரி தெரிவிப்பு

”மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத எனக்கு கலந்துகொண்டதாக பொய்யான ஆதாரங்களை உருவாக்கி கொண்டு எனக்கு வழக்கு தாக்கல் செய்த பொலிசார் நீதிதுறையை தவறான பாதைக்கு கொண்டு செல்லுகின்ற படுபயங்கரமான நிலையே உள்ளது எனவே பொலிசாரின் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தவேண்டும்” என பாதிக்கப்பட்ட சமூகசெயற்பாட்டளரான கௌரி கோரிக்கை விடுத்துள்ளனார். மட்டு மாநகரசபை முன்னாள் உறுப்பினரும் சமூகசெயற்பாட்டளரான கௌரி இன்று ஞாயிற்றுக்கிழமை (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ”கடந்த 8 ம் திகதி ஜனாதிபதி செங்கலடி பாடசாலைக்கு […]

உலகம்

2,500 உழியர்களை வீட்டிற்கு அனுப்பி வைக்கவுள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம்

  • October 29, 2023
  • 0 Comments

உலகின் முன்னணி ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தனது 2,500 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்களில் லே ஆஃப் எனப்படும் பணி நீக்கம் தொடர்கிறது. பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் உலகின் முன்னணி ஆடம்பர கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் இணைந்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இங்கிலாந்தில் 42,000 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. […]

உலகம்

கஜகஸ்தான் சுரங்க தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • October 29, 2023
  • 0 Comments

கஜகஸ்தானில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (29.10) 42 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பேரைக் காணவில்லை என்று கஜகஸ்தானின் அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகத்தின் செய்தி சேவை தெரிவித்துள்ளது. அழிந்த சுரங்க உபகரணங்கள் மற்றும் சில இடங்களில் இடிபாடுகள் இருப்பதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபடுகின்றன” என்று மேலும் கூறப்பட்டுள்ளது. கஜகஸ்தானின் கரகண்டா பகுதியில் அமைந்துள்ள லக்சம்பேர்க்கைச் சேர்ந்த எஃகு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலுக்குச் சொந்தமான கோஸ்டென்கோ சுரங்கத்தில் சனிக்கிழமை தீ […]

மத்திய கிழக்கு

இஸ்ரேல் தாக்குதலில் 08 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

  • October 29, 2023
  • 0 Comments

இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 8,000ஐ தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (29.10) வரை 8,005 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அவர்களில் 3,342 குழந்தைகளும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இது தொடர்பான தாக்குதலில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

விளையாட்டு

அமெரிக்க ஐஸ் ஹாக்கி வீரர் விளையாடும் போது கழுத்து வெட்டுப்பட்டு உயிரிழப்பு

அமெரிக்க ஹாக்கி வீரர் ஆடம் ஜான்சன் இங்கிலாந்தில் சனிக்கிழமை நடந்த ஆட்டத்தின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார். எதிரணி வீரரின் ஸ்கேட் அவரது கழுத்தில் பட்டிருக்கும் என தெரிவைக்கப்படுகின்றது. இதனால், கழுத்து ஏற்பட்ட வெட்டு காயம் காரணமாக ரத்தம் வெளியேறியது. உடனடியாக ஆட்டம் நிறுத்தப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 29 வயதான அவர், மினசோட்டாவைச் சேர்ந்தவர், ஷெஃபீல்ட் ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான சேலஞ்ச் கோப்பை ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் பாந்தர்ஸ் […]

இந்தியா

இந்தியாவில் மத வழிப்பாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு : பலர் காயம்!

  • October 29, 2023
  • 0 Comments

இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலத்தில் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (29.10) காலை இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த இடத்தில் சுமார் 03 வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வெடிவிபத்து ஏற்பட்ட போது, ​​தேவாலயத்தில் சுமார் 2,000 பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உணவுப் பெட்டியில் மறைத்து வைத்து குண்டுகள் இந்த […]

இலங்கை

அனுராதபுரத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் : இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

அனுராதபுரம்-கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெப்பித்திக்கொள்ளாவ குறுலுகம கிராமத்தில் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு ஏழாம் தினமான நேற்றைய தினம் (28) வாகல்கட பிரதேசத்தில் இருந்து பௌத்தப்பிக்கு ஒருவர் குறித்த வீட்டுக்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் விகாரையின் விகாராதிபதி மற்றும் கிராம மக்கள் சிலர் குறித்த பௌத்தப்பிக்குவின் வருகைக்கு எதிர்ப்பினை […]

பொழுதுபோக்கு

ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி – அமிதாப் பச்சன்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

  • October 29, 2023
  • 0 Comments

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஜெய்பீம் இயக்கு த.செ.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சில மாதங்களுக்கு முன்பு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு ஷூட்டிங்கும் தொடங்கியது. முதல் ஷெட்யூல் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. திருவனந்தபுரம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், இந்தப் படம் கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக பிரமாண்டமாக வெளியாகும் என்று கூறியிருந்தார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா […]

இலங்கை

யாழில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்து: நால்வருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இன்று மதியம் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது. விபத்தில் நாலவர் காயமடைந்துள்ளனர். மூன்று பெண்களும் ஒரு குழந்தையுமே விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.