இலங்கை

ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளாத என்மீது பொய்யான வழக்கு தாக்கல்: கௌரி தெரிவிப்பு

”மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத எனக்கு கலந்துகொண்டதாக பொய்யான ஆதாரங்களை உருவாக்கி கொண்டு எனக்கு வழக்கு தாக்கல் செய்த பொலிசார் நீதிதுறையை தவறான பாதைக்கு கொண்டு செல்லுகின்ற படுபயங்கரமான நிலையே உள்ளது எனவே பொலிசாரின் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தவேண்டும்” என பாதிக்கப்பட்ட சமூகசெயற்பாட்டளரான கௌரி கோரிக்கை விடுத்துள்ளனார்.

மட்டு மாநகரசபை முன்னாள் உறுப்பினரும் சமூகசெயற்பாட்டளரான கௌரி இன்று ஞாயிற்றுக்கிழமை (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”கடந்த 8 ம் திகதி ஜனாதிபதி செங்கலடி பாடசாலைக்கு ஜனாதிபதி வருகையும் நடை பெற்றிருந்தது அப்போது மட்டு மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பிரச்சனை தொடர்பாக ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களின் ஆர்ப்பாட்டம் கொம்மாந்துறை பகுதியில் நடைபெற்றது.

இதனை அடிப்படையாக கொண்டு பொலிசாரினால் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட பலரது வீடுகளுக்கு சென்று வாக்கு மூலங்களை பெற்றுவருகின்றனர் இந்த நிலையில் நான் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகவும் தங்களிடம் அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் வாக்கு மூலம் ஒன்றை பெறவேண்டும் என நேற்று சனிக்கிழமை எனது வீடு தேடிவந்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

அதற்கு நான் வாக்கு மூலம் தரமுடியும் ஆனால் நான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை அன்றை தினம் நான் வீட்டில் இருந்துள்ளதற்கான ஆதாரத்தை உறுதிபடுத்தியிருந்தேன்.
அதனை வாக்கு மூலத்தில் பதிவு செய்தால் நான் அதில் கையொப்பம் வைப்பேன் அதேவேளை நீதிமன்ற பிணை முறிபத்திரத்தில் கையெழுத்து இடமாட்டேன் என தெரிவித்தபோது அதற்கு பொலிசார் உடன் பட்டநிலையில் வாக்கு மூலத்தை அளித்து அதில் என கையொப்பம் வைத்தேன் அதேவேளை நீதிமன்ற பிணை முறிபத்திரத்தில் கையெழுத்து இடவில்லை

இவ்வாறு நான் ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளாத என்னை எதற்கா பொலிசார் வாக்கு மூலம் பெறவேண்டும் எதற்காக எனது வீட்டிற்கு வரவேண்டும். இவ்வாறு பொலிசாரின் செயற்பாடு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மட்டக்களப்பில் ஒரு பயங்கரமான சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளதுடன் நீதிதுறையும் பொலிசாரும் தங்களது கடமையை சரியாக செய்ய தவறியுள்ளார்கள்.

எனவே ஒட்டுமொத்த நீதிதுறையும் தவறான ஒரு பாதையில் இல்லாத ஒரு விடையத்தை உருவாக்குகின்றது இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் எனவே இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஜனதிபதி உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.

 

(Visited 8 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content