இலங்கை

Zee Tamil சரிகமா இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடினார் கில்மிஷா!

  • December 17, 2023
  • 0 Comments

Zee Tamil சரிகமா இசை நிகழ்ச்சியில் ஈழத்து குயில் கில்மிஷா வெற்றிவாகை சூடியுள்ளார். தென்னிந்திய தொலைக்காட்சியின் ஒன்றின் ரியால்டி சோ ஒன்றில் முதன்முறையாக இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். சரிகமப இசை போட்டி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கராஜா உட்பட பல பாடகர்கள் பங்கேற்றிருந்தனர். மக்களின் வாக்களிப்பின் அடிப்படையில் கில்மிஷா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றி அறிப்பை அடுத்து இலங்கையின் பல பகுதிகளில் […]

ஐரோப்பா

அவ்திவ்காவில் தொடரும் பதற்றம் :வெளியான அதிர்ச்சி வீடியோ

கிழக்கு உக்ரைனின் அவ்திவ்காவில் ரஷ்யப் படைகள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஸ்டெபோவ் அருகே உக்ரேனிய இராணுவ ட்ரோன் பிரிவினால் படமாக்கப்பட்ட வீடியோ, சுமார் 150 வீரர்களின் உடல்கள், பெரும்பாலானவர்கள் ரஷ்ய சீருடைகளை அணிந்து, மரக் கோடுகளில் சிதறிக் கிடப்பதைக் காட்டுகிறது. அவ்திவ்கா கிராமம் எரிந்து சிதைந்த மரங்கள் மற்றும் பீரங்கி குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளால் சூழப்பட்ட வயல்களுடன் இடிந்துள்ளது.  

இலங்கை

இலங்கையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் : ஒருவர் பலி!

  • December 17, 2023
  • 0 Comments

மொரகஹகந்த நீர் திட்டத்தின் மற்றுமொரு கட்டமான வடமத்திய மாகாண பெரிய கால்வாய்த் திட்டத்தின் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதை அடுத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பலத்த காயமடைந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் இருவர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் மற்றையவர் ஹபரணை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா

ஸ்மார்ட் சிட்டி பணிகள் கருத்தரங்கம்: திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு

கோவை மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிடுவதற்காக, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், புவனேஸ்வர், பீம்பிரி சின்ஷவாட், பெங்களுர், ரூர்கேலா என பல்வேறு நகரங்களிலிருந்து துணை கமிஷனர்கள், மாநில உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கோவை வந்தனர். கோவை அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் தேசிய அளவிலான ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த கருத்தரங்கம் இன்று நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். இந்த கருத்தரங்கில் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், […]

ஆசியா

பால்ஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவிய வடகொரியா!

  • December 17, 2023
  • 0 Comments

வடகொரியா ஒரு ஏவுகணையை ஏவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி வடகொரியா  ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியிருக்கலாம் என   ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

இலங்கை

இலங்கை- நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் விசேட நடவடிக்கை – சிக்கிய 83 பேர்

  • December 17, 2023
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் விசேட நடவடிக்கைகளின் போது 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்ககை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் இன்று முதல் ஆரம்பித்துள்ளனர். அந்த நடவடிக்கையின் விளைவாக, குறித்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களில் 45 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயார் நிலையில் வைத்துள்ள ரஷ்யா!

  • December 17, 2023
  • 0 Comments

மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள கலுகா பிராந்தியத்தில் உள்ள கோசெல்ஸ்க் தளத்தில் ரஷ்ய ராக்கெட் படைகள் புதிய Yars எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 23-மீட்டர் நீளமுள்ள RS-24 (Yars) ஏவுகணையானது, பல்வேறு இலக்குகளில் பல அணு ஆயுதங்களை கொண்டு தாக்கும் திறன் கொண்டது. இந்நிலையில் “கோசெல்ஸ்கி வளாகத்தில், மூலோபாய ஏவுகணைப் படைகள் Yars கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஒரு சிலோ லாஞ்சரில் ஏற்றியது” என்று பாதுகாப்பு […]

ஆசியா

கரப்பான் பூச்சியை கொல்ல முயன்று மொத்த வீட்டையும் எரித்த ஜப்பானியர்!

  • December 17, 2023
  • 0 Comments

ஜப்பானில் உள்ள வீடு ஒன்றில் கரப்பான் பூச்சியை கொல்ல நபர் ஒருவர் அளவுக்கு அதிகமான பூச்சி கொல்லி தெளிப்பானை பயன்படுத்திய போதே வீடு தீப்பற்றியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டில் வசித்த இருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆஸ்திரேலியா

குயின்ஸ்லாந்தில் கொட்டித்தீர்த்த கனமழை;ஆயிரக்கணக்கானோரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வலியுறுத்தல்

  • December 17, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் மிக அதிகமான மழைப்பொழிவு காரணமாக பெருவெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நகரின் புறநகர் பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் கெய்ர்ன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 600 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளது, மேலும் 500 மி.மீ மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், […]

ஆசியா

காசாவில் முடங்கும் மருத்துவமனைகள் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காசாவில் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபாலில் அவசர சிகிச்சைப் பிரிவு முடங்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் மருத்துவமனை கட்டிடம் மற்றும் மைதானங்களை தங்குமிடத்திற்கு பயன்படுத்துகின்றனர் என்றும், குடிநீர் மற்றும் உணவுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துளளது. எரிபொருள், ஆக்ஸிஜன் மற்றும் பிற பொருட்கள் பற்றாக்குறையால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவுகள் செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுளளது.