இலங்கை

பல பாடசாலை மாணவிகள் மற்றும் யுவதிகளை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்த இரு மாணவர்கள் : இலங்கையில் சம்பவம்!

  • December 18, 2023
  • 0 Comments

பல பள்ளி மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பலாத்காரம் செய்து, அக்காட்சிகளை ஆபாசமான திரைப்படங்களாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பாக இரண்டு பள்ளி மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் வசிக்கும் இரண்டு பாடசாலை மாணவர்களே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர். 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரும் அவரது தாயும் கண்டி காவற்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்களும்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக […]

இந்தியா

இந்தியாவில் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கை : 09 பேர் கைது!

  • December 18, 2023
  • 0 Comments

இந்தியாவில் ISIS அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் எட்டு பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மும்பை, புனே, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் 19 இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் இந்த பயங்கரவாத குழு கைது செய்யப்பட்டுள்ளது. இந்த நபர்கள் இந்தியா முழுவதும் பல குண்டுவெடிப்புகளை நடத்த தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. சந்தேக நபர்களிடமிருந்து பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான திட்டங்கள் அடங்கிய ஆவணங்களையும் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் வசம் […]

உலகம்

ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் : நீதிமன்ற விசாரணைகள் ஒத்திவைப்பு

சிறையில் உள்ள ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவல்னிக்கு நடைபெறவிருந்த இரண்டு நீதிமன்ற விசாரணைகள் ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அலெக்ஸி நவல்னி, தலைநகர் மொஸ்கோவில் இருந்து 150 மைல் தொலைவில் உள்ள ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அந்த சிறையில் நவல்னி இல்லை என்றும் அவருக்கு என்ன நடந்தது என்று யாரும் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நபரான 47 வயதான நவல்னி […]

இலங்கை

புதையல் தோண்டிய சந்தேகத்தில் நால்வர் கைது : பொலிஸார் தீவிர விசாரணை

தொரமடலாவ புதுக்குளம் பிரதேசத்தில் தொல்பொருட்களை பெறும் நோக்கத்தில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் நால்வரை கைது செய்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொரமடலாவ புதுக்குளம் பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவருக்கு சொத்தமான காணியொன்றில் புதையல் தோண்டி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா

செங்கடல் வழியூடான எண்ணெய் ஏற்றுமதிகளை நிறுத்தும் பிரித்தானியா!

  • December 18, 2023
  • 0 Comments

“மோசமான பாதுகாப்பு நிலைமை” காரணமாக செங்கடல் வழியாக மேற்கொள்ளப்படும் அனைத்து எண்ணெய் ஏற்றுமதிகளையும் நிறுத்துவதாக பிரிட்டிஷ் ஆற்றல் BP அறிவித்தது. யேமனில் ஹவுதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து பல சரக்கு நிறுவனங்கள் தங்கள் கப்பல் சேவையை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளன. அந்த வகையில் தற்போது பிரித்தானியாவும் தற்காலிகமாக செங்கடல் ஊடான எண்ணெய் ஏற்றுமதிகளை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. எவர்கிரீன் லைன் தனது கொள்கலன் கப்பல்களுக்கு “மேலும் அறிவிப்பு வரும் வரை” பயணங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கடல் எண்ணெய் மற்றும் […]

தமிழ்நாடு

சென்னையில் பயங்கரம்!! இளம் பெண் வெட்டிக்கொலை… முகமூடி நபர்களின் வெறிச்செயல்

  • December 18, 2023
  • 0 Comments

சென்னை அம்பத்தூரில் இளம்பெண் ஒருவர் முகமூடி அணிந்த நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி நந்தினி (27). பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கில் சதீஷ் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் நந்தினியின் உறவினரான மதன் என்பவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று மாலை நந்தினி, அம்பத்தூர் தொழிற்பேட்டையை அடுத்த ஐ.சி.எப்.காலனிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல் […]

பொழுதுபோக்கு

‘லால் சலாம்’ படத்தின் தேர் திருவிழா பாடல் வெளியானது…

  • December 18, 2023
  • 0 Comments

லைக்கா நிறுவனம் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தேர் திருவிழா’ பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிக்கல் வரிகள் எழுதி உள்ளார். சங்கர் மகாதேவன், ஏ ஆர் ரைஹானா, யோகி சங்கர் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். பிரமாண்ட செட் […]

ஐரோப்பா

அதிகளவில் அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள்; போர் நிறுத்ததிற்கு இஸ்ரேலை வலியுறுத்தும் பிரான்ஸ்

  • December 18, 2023
  • 0 Comments

அதிக அளவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதால் உடனடியாக காசா பகுதியில் நீண்ட கால போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டுமென பிரான்ஸ் நாடு வலியுறுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா காசாவில் தொடர்ந்து வரும் தாக்குதல் குறித்த கவலையை இஸ்ரேலிடம் தெரிவித்தார். மேலும், ராஃபாவில் குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான காரணத்தை கேட்டறிந்தார். இஸ்ரேலின் ராஃபா தாக்குதலில் பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இஸ்ரேல் நடத்தும் […]

ஐரோப்பா

காஸாவில் மக்களை பட்டினியால் கொள்ளும் இஸ்ரேல்

உலகளாவிய உரிமைகள் குழு ஒன்று இஸ்ரேல் காஸாவில் மக்களை பட்டினியால் கொன்று போர்க்குற்றம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) இஸ்ரேலியப் படைகள் வேண்டுமென்றே தண்ணீர், உணவு மற்றும் எரிபொருளை வழங்குவதைத் தடுப்பதாகவும், விவசாயப் பகுதிகளை இடித்துத் தள்ளுவதாகவும், காஸாவின் 2.3 மில்லியன் மக்களின் உயிர்வாழ்வதற்குத் தேவையான பொருட்களைப் பறிப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் 19,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இலங்கை

வட மாகாண ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் விடுத்துள்ளஅதிரடி உத்தரவு

  • December 18, 2023
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு குறித்த வடிகான்களை சுத்தப்படுத்துவதோடு, வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார நிலையங்களை […]