இலங்கை

வெளிநாடொன்றில் சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களுக்கு மன்னிப்பு

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களுக்கு அரச ஆணை மூலம் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் 52வது தேசிய தினமான டிசம்பர் 02 ஆம் திகதியன்று அரச ஆணை மூலம் இந்த இலங்கைக் கைதிகள் மன்னிக்கப்பட்டதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் வெளிவிவகார அமைச்சு, அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளது. மன்னிக்கப்பட்ட 44 பேர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர். ஜனாதிபதி […]

ஆசியா

சீனாவில் செயல் அதிகாரி ஒருவரின் கட்டளையால் பெண் ஊழியர்கள் அதிர்ச்சி!!

  • December 31, 2023
  • 0 Comments

சீனாவில் செயல் அதிகாரி ஒருவர் நிறுவனத்தின் ஆண் ஊழியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பெண் ஊழியர்கள் நல்ல மேக்கப் போட்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார். சீனாவின் பிரபல நிறுவனம் ஒன்றின் செயல் அதிகாரியான லாவோ என்ற நபர், 5 பெண் ஊழியர்கள் வரை இருந்த நிறுவனத்தின் வீ சாட் குரூப்-ல் பேசியது வைரலாகி வருகிறது. அதில், பெண் ஊழியர்கள் நன்றாக மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டும், அப்போது தான் ஆண் ஊழியர்கள் உற்சாக செயல்படுவார்கள்.இதற்கு மாற்றாக ஆண் […]

ஆசியா

இந்தோனேசியாவில் மீண்டும் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • December 31, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாநியூகினியாவில் இன்று (31.12) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள துணை மாவட்டமான அபேபுராவிலிருந்து வடகிழக்கே 162 கிலோமீட்டர் (101 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கமானது  6.5 ரிக்டர் அளவில் பதிவாகியதாக  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்பவியல் மற்றும் புவி இயற்பியல் நிறுவனம், சுனாமி ஆபத்து இல்லை என்று கூறியது, ஆனால் நிலநடுக்கம் நிலத்தில் மையம் கொண்டிருப்பதால், பின் […]

ஐரோப்பா

பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் – 21 பேர் பலி!

  • December 31, 2023
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 676வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது இதனிடையே, உக்ரைனின் கீவ், டின்புரொ, கார்கிவ், லிவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யா தாக்குதல் நடத்தியது. போர் விமானங்கள், ஏவுகணைகள்,டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் […]

ஆசியா

காசா-எகிப்து எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்- நெதன்யாகு

காசா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையிலான எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், பாலஸ்தீனத்திலும், அந்த பிராந்தியத்திலும் தற்போது நடைபெறும் போர் பல மாதங்களுக்கு நீடிக்கலாம் என அவர் கணித்துள்ளார். அக்டோபர் 7ம் திகதி தொடங்கிய போர், நேற்றுடன் 13வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஹமாஸை ஒழித்து, காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகளை மீட்பதற்கான வாக்குறுதியை, பத்திரிக்கையாளர் சந்திப்பில் நெதன்யாகு மீண்டும் உறுதிப்படுத்தினார். “பிலடெல்பி காரிடார் […]

இலங்கை

திருகோணமலையில் புத்தாடை தகைக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி!

  • December 31, 2023
  • 0 Comments

திருகோமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஜனவரி 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் சனிக்கிழமை (30) குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கோமரங்கடவல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவதினத்தன்று குறித்த 17 வயதுடைய […]

ஆசியா

பாக்.வேட்புமனு தாக்கலிலும் விளையாடும் அரசியல்… பின்னடைவில் இம்ரான்கான்-முன்னிலையில் நவாஸ் ஷெரீப்

  • December 31, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த இரு மனுக்களையும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் அரசியல் களத்தில் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் புதிய பின்னடைவை சந்தித்துள்ளார். அடுத்தாண்டு அங்கு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறையில் இருந்தபடி அவர் தாக்கல் செய்த இரு மனுக்களையும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. 71 வயதாகும் இம்ரான்கான் 2022 ஏப்ரலில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது […]

இலங்கை

இலங்கையில் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணங்கள்!

  • December 31, 2023
  • 0 Comments

ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் VAT திருத்தத்தின் காரணமாக பஸ் கட்டணங்கள் 15% அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய உள்ளீடுகளை கருத்தில் கொண்டு கட்டணங்களை திருத்துமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பஸ் கட்டணத்தை திருத்தியமைக்காவிட்டால், நாடு முழுவதும் தொடர் பஸ் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

“தளபதி 68 ” வேற லெவல்ல இருக்கும்.. அப்டேட் சொன்னது யார் தெரியுமா?

  • December 31, 2023
  • 0 Comments

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், தாய்லாந்து ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் சூட்டிங்கிற்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சிறிது இடைவெளி விடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் சூட்டிங் மீண்டும் துவங்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. மேலும் பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட வெங்கட்பிரபுவின் கேங்கும் படத்தில் இணைந்துள்ளது. அதிகமான நட்சத்திரங்களின் கூட்டணியில் தளபதி 68 […]

உலகம்

அல்பேனியாவின் முன்னாள் பிரதமர் வீட்டுக்காவலில்

அல்பேனியா – எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு தலைமை தாங்கும் முன்னாள் பிரதமர் சாலி பெரிஷாவை வீட்டுக் காவலில் வைக்க அல்பேனிய நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. பெரிஷா அவருடன் வசிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் ஜென்க் ஜிஜோகுதாஜ் கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஜிஜோகுதாஜ் கூறியுள்ளார்.