மில்லியன் கணக்கான முட்டைகளுடன் இலங்கை வரும் கப்பல்
6 மில்லியன் இந்திய முட்டைகளை ஏற்றி வரும் கப்பல் இன்று நாட்டை வந்தடைய உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பான சுகாதார அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர், நாடு முழுவதும் உள்ள சதொச பல்பொருள் அங்காடிகளுக்கு முட்டைப் பங்குகளை எதிர்வரும் வியாழக்கிழமை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார். கடந்த சில நாட்களில், நாடு முழுவதும் உள்ள கடைகளுக்கு கிட்டத்தட்ட எட்டு மில்லியன் இந்திய முட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. […]













