பொழுதுபோக்கு

விஷாலி ரத்னம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…

  • January 25, 2024
  • 0 Comments

நடிகர் விஷால் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது. படத்தில் எஸ்ஜே சூர்யாவும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ஹரியுடன் விஷால் இணைந்துள்ள படம் ரத்னம். தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து ரத்னம் படத்தில் மூன்றாவது முறையாக விஷால் -ஹரி கூட்டணி இணைந்துள்ளது. இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இணைந்துள்ள நிலையில், படத்தில் யோகிபாபு, சமுத்திரக்கனி, கவுதம் மேனன் […]

இலங்கை

ரணில் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு விஜயம்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் குறித்து அறிந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று காலை கொழும்பில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளனர். அமைச்சரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “கட்சி செயல்பாடுகள் மற்றும் அப்பகுதியில் எந்தப் […]

இலங்கை

தமிழ்த் தேசிய அரசியலை மீளவும் கட்டியெழுப்ப வேண்டும் – லவகுசராசா அழைப்பு!

  • January 25, 2024
  • 0 Comments

தமிழ்த் தேசிய அரசியலை பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் மீளவும் கட்டியெழுப்ப வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று (25.01 ) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  அனைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்துக்கு ! தமிழ்த் தேசிய அரசியலின் வரலாற்றிலும், தமிழரசுக் கட்சியின் வரலாற்றிலும் முதன்முதல் வாக்கெடுப்பு மூலம் கட்சித் தலைமையை தெரிவுசெய்வது கடந்தவாரம் நடைபெற்றுள்ளது. இந்த ஜனநாயகப் […]

இலங்கை

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் : மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

  • January 25, 2024
  • 0 Comments

ஆட்சியாளர்களுக்கு தேவையான நேரத்தில் சரியான அறிவுறுத்தல்களை வழங்காததன் காரணமாகவே நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் கோவிட் காலத்தில் நாடு மூடப்படும் போது முதலீடுகள் வராது என்பது நமக்குத் தெரியுமா? வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருமானம் பூஜ்ஜியத்திற்கு சென்றது. கோவிட் நிலைமை இதில் பெரிய […]

ஆசியா

மூன்றாம் உலகப்போருக்கு வித்திடும் செங்கடல் தாக்குதல்…!

செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கக் கூடும் என ஐ.நா. பொதுச் சபை தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் எச்சரித்துள்ளார். செங்கடலில் ஹுதி கிளா்ச்சியாளா்கள் தொடங்கிய தாக்குதலுக்கு மூன்றாம் தரப்பினா் உதவுவதுபோல் உள்ளது. எனவே சூழல் மிகவும் மோசமாக மாறி வருகிறது. அதேபோல் காஸா பிரச்னைக்கு அமைதி வழியே தீா்வு. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என இரண்டும் தனிநாடுகளாக செயல்பட வேண்டும் என்ற இந்தியாவின் கருத்தை நான் வரவேற்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா

போதையில் 108 முறை காதலனைக் குத்திக் கொன்ற அமெரிக்க பெண்… வீட்டிற்கு அனுப்பி வைத்த நீதிமன்றம்!!

  • January 25, 2024
  • 0 Comments

கஞ்சா போதையில் 108 முறை காதலனை கத்தியால் குத்திக்கொன்ற பெண்ணுக்கு, அமெரிக்க நீதிமன்றம் சிறைக்கு அனுப்பாது விடுவித்து ஆச்சரியம் தந்திருக்கிறது. கலிபோர்னியாவை சேர்ந்த இளம்பெண் பிரைன் ஸ்பெஷர். இவர் தனது காதலன் சாட் ஓமெலியா உடன் சேர்ந்து கஞ்சா புகைத்தபோது, போதையின் உச்சத்தில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது சரமாரியாக காதலனைக் குத்திக் கொன்றார். இதில் சம்பவ இடத்திலேயே காதலன் பரிதாபமாக இறந்தார். பிரைன் ஸ்பெஷர் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட வழக்கு கலிபோர்னியா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. காதலன் […]

ஐரோப்பா

உக்ரேனிய போர்க் கைதிகளின் வாழ்க்கையுடன் விளையாடும் ரஷ்யா : ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய ராணுவ விபத்துக்கான சூழ்நிலைகள் குறித்து முழு தெளிவைக் கோரியுள்ளார். உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள பெல்கோரோட் பகுதியில் புதன்கிழமை நடந்த விபத்துக்குப் பிறகு அவர் சர்வதேச விசாரணையைக் கோரினார். மற்றும் புதன்கிழமை பிற்பகுதியில் தனது வீடியோ உரையில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, “ரஷ்யர்கள் உக்ரேனிய கைதிகளின் வாழ்க்கை, அவர்களின் உறவினர்களின் உணர்வுகள் மற்றும் நமது சமூகத்தின் உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள் என்பது வெளிப்படையானது” என்று கூறினார். வியாழக்கிழமை தனது பிறந்தநாளுடன் இணைக்கப்பட்ட திட்டமிடப்பட்ட […]

பொழுதுபோக்கு

சிங்கப்பூர் சலூன் படத்தில் ஒளிந்திருக்கும் சர்ப்ரைஸ் – அட இது தெரியாம போச்சே…

  • January 25, 2024
  • 0 Comments

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. மீனாட்சி சவுத்ரி , லால், சத்யராஜ், ரோபோ சங்கர், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோர் சிறப்பு ரோலில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இதில் ஒரு முக்கிய நடிகர் சர்ப்ரைஸ் ரோலில் நடித்துள்ளார் என தகவல் பரவி வந்த நிலையில் தற்போது […]

ஆப்பிரிக்கா

மாலியில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70இற்கும் மேற்பட்டோர் பலி!

  • January 25, 2024
  • 0 Comments

மாலியில் கடந்த வார இறுதியில் கட்டுப்பாடற்ற தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தேசிய புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரியான கரீம் பெர்தே, தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் விவரங்களை உறுதிசெய்து, இது ஒரு விபத்து என்று கூறினார். குறித்த சுரங்கத்தில் 100 பேர் பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

இலங்கை

இலங்கை : நாவலப்பிட்டியில் தாய் ஒருவர் அடித்துக் கொலை!

  • January 25, 2024
  • 0 Comments

67 வயதுடைய தாயை இருபத்தி இரண்டு விலா எலும்புகள் முறியும் வரை அடித்துக் கொன்ற 41 வயது மகனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டி பொஹில் மேல் பகுதியில் வசித்து வந்த எஸ். ஜொலிமா என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைய மகன் குறித்த தாயின் தலைப்பகுதியில் தாக்கியதாகவும், இதனால் தாயின் விலா எலும்புகள் உடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாகவே மரணம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்  இதற்கு […]