ஆசியா செய்தி

170 இடங்களில் வெற்றி பெற்ற இம்ரான் கானின் கட்சி

  • February 10, 2024
  • 0 Comments

ஒரு பெரிய அரசியல் வளர்ச்சியில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) 265 தேசிய சட்டமன்றத் தொகுதிகளில் 170 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட மஜ்லிஸ் வஹ்தத்-இ-முஸ்லிமீன் (எம்.டபிள்யூ.எம்) உடன் கூட்டணி அமைக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும், பிடிஐ ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 100 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பி.டி.ஐ.யின் தலைவர் பாரிஸ்டர் கோஹர் கான், பிடிஐ வென்ற இடங்களை தோல்வியடையச் செய்யும் முயற்சி நடந்ததாக குற்றம் சாட்டினார். தேர்தல் […]

இலங்கை

மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மற்றுமொரு சிறுவன் உயிரிழப்பு

கம்பளை பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் மரம் முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மற்றுமொரு சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கம்பளை – கஹட்டபிட்டிய பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த 5 வயதுடைய சிறுவன் ஒருவர் சம்பவ தினத்தன்று உயிரிழந்தார். அதேநேரம் இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில், குறித்த இரண்டு சிறுவர்களில், கண்டி […]

விளையாட்டு

IPLல் களமிறங்கும் ஷமர் ஜோசப்

  • February 10, 2024
  • 0 Comments

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் 2024 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது உறுதியாகிவிட்டது. அந்த வகையில், ஷமர் ஜோசப் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாட இருப்பதாக அந்த அணி அறிவித்து இருக்கிறது. இவர் இங்கிலாந்தின் மார்க் வுட்-க்கு மாற்றாக லக்னோ அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷமர் ஜோசப் தனி ஆளாக நின்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இந்த […]

ஆசியா

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பிற்கு நோர்வே நிதியுதவி

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பிற்கு நோர்வே இந்த ஆண்டு 26 மில்லியன் டாலர்களை வழங்குகிறது, தேவைப்பட்டால் அந்தத் தொகையை அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தெற்கு இஸ்ரேலில் ஹமாஸின் தாக்குதல்களில் சில பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் ஊழியர்கள் ஈடுபட்டதாக கடந்த மாதம் இஸ்ரேல் குற்றம்சாட்டியதை அடுத்து, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் உதவி நிறுவனத்திற்கு தங்கள் நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளன .

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!! 5 வயது மகளை அடித்துக் கொன்று, துண்டுகளாக நறுக்கி காணாப்பிணமாக்கிய தந்தை..

  • February 10, 2024
  • 0 Comments

5 வயது மகளை அடித்தே கொன்றதுடன், சடலத்தை மறைக்க அதனை துண்டுகளாக நறுக்கி, தான் பணிபுரியும் உணவகத்தில் மறைத்து வைத்தது உட்பட பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றிய ஒரு கொடூர தந்தையின் பின்னணியை அமெரிக்க பொலிஸார் பொதுவெளிக்கு தெரிவித்துள்ளனர். நியூ ஹாம்ப்ஷயரைச் சேர்ந்தவர் ஆடம் மான்ட்கோமெரி. உணவகம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். போதைப்பொருள் உபயோகம் காரணமாக, ஊதாரியாகவும், குடும்பத்தில் அக்கறை இல்லாதவராகவும் தொடர்ந்துள்ளார். அமெரிக்காவில் வீடற்றவர்கள் அளவில் பெரிய காரில் வசிப்பது வழக்கம். அப்படி கார் […]

பொழுதுபோக்கு

ரஜினி ஒரு சங்கின்னு பச்சையா தெரியுது.. பொளந்து எடுத்த ப்ளூ சட்டை

  • February 10, 2024
  • 0 Comments

ப்ளூ சட்டை மாறன் தற்போது லால் சலாம் படத்தை தாறுமாறாக விமர்சித்துள்ளார். அது மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் ரஜினியையும் அட்டாக் செய்திருக்கிறார். அந்த வகையில் லால் சலாம் படத்தின் தோல்விக்கு ரஜினி தான் காரணம் என்று அவர் சொல்லி இருப்பது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஆரஞ்சு பழத்துக்கு ஆரஞ்சு கலர் அடித்தால் தான் அது ஆரஞ்சு என்று தெரியுமா? என ஐஸ்வர்யாவிடம் நக்கலாக ஒரு கேள்வியையும் எழுப்பியுள்ளார். ஏனென்றால் லால் சலாம் இசை வெளியீட்டு […]

ஐரோப்பா

பிரதமர் சுனக் கடந்த ஆண்டு செலுத்திய வரி : வெடித்த சர்ச்சை

பிரித்தானிய பிரதம மந்திரி ரிஷி சுனக் கடந்த நிதியாண்டில் 508,000 பவுண்டுகள் வரியாகச் செலுத்தியதாக தகவல் வெளியாகியுளளது. 2022 இல் பிரதம மந்திரியாக பதவியேற்ற பிறகு சுனக் தனது வரி விவகாரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவது இது இரண்டாவது முறையாகும் நிதியமைச்சர் மற்றும் பிரதம மந்திரி ஆகிய பதவிகளில் இருந்து சுனக் 139,000 பவுண்டுகள் மற்றும் முதலீடுகள் மூலம் 2.1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதித்ததாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தனது கடந்தகால நிதிச் சேவைகள் மற்றும் அவரது மனைவியின் […]

இலங்கை

இலங்கையில் கலா மாஸ்டருக்கு ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சியின் சில பகுதிகளில் தென்னிந்தியாவைச் சேர்ந்த கலா மாஸ்டருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி சீரான ஒழுங்குபடுத்தல் இன்மை காரணமாக குழப்பத்தில் முடிந்த நிலையில் கலா மாஸ்டரின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் ஆங்காங்கே ஓட்டப்பட்டுள்ளன. குறித்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க குஷ்பு, கலா மாஸ்டர் ஆகியோர் யாழ்ப்பாணம் வருகை தருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஆரம்பம் முதலே எதிர்ப்பு காட்டப்பட்டு வந்தது. குஷ்பு பங்கேற்காத நிலையில் கலா மாஸ்டரே […]

இலங்கை

நீர்கொழும்பு-கல்கந்த சந்தியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி!

  • February 10, 2024
  • 0 Comments

நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உலகம்

நேரலையில் வாந்தி எடுத்த தொகுப்பாளர்.. பாதியில் நிறுத்தப்பட்ட பிரபல நிகழ்ச்சி!

  • February 10, 2024
  • 0 Comments

பிரபல ஆங்கில செய்தி சேனலான CNN சேனலின் நேரலையின் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் திடீரென வாந்தி எடுத்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பிரபல ஆங்கில செய்தி ஊடகமான CNN சேனல், 33 ஆண்டுகளாக ‘தி சிட்டியேஷன் ரூம்’ என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியை கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக உல்ஃப் பிளிட்சர் என்பவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிலையில், 75 வயதான பிளிட்சர், கடந்த வியாழனன்று நடந்த ‘தி சிட்டியேஷன் ரூம்’ நிகழ்ச்சி […]