இலங்கை செய்தி

ஜனாதிபதியின் வீட்டுக்குள் புகுந்த திருடியவர்களுக்கு தண்டனை

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தில் புகுந்து அதிலிருந்த பொருட்களை திருடிய இருவருக்கு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து போத்தலில் அடைக்கப்பட்ட பாய்மரக் கப்பலின் மாதிரி ஒன்று ஆம்பில்லவத்தை வீதியில் வசிக்கும் ஒருவரால் திருடப்பட்டதுடன், அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இன்று (01) தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி, அந்த நபரின் 6 மாத கடுங்காவல் தண்டனை 5 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அன்றைய தினம், ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்தில் மெட்டல் ஹேக் ஒன்றை திருடிய பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ஒரு வருட கடூழிய வேலையுடன் கூடிய 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1,500 அபராதமும், அதை செலுத்தாவிட்டால், ஒரு மாதம் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை