இந்தியா

மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்த பேருந்து; ஐவர் பலி… 10 பேர் படுகாயம்!

  • March 11, 2024
  • 0 Comments

உத்தரப் பிரதேச மாநிலம், காஜிப்பூரில் தனியார் பேருந்து உயரழுத்த மின் கம்பி மீது உரசி தீப்பிடித்தது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரில் இன்று, தனியார் பேருந்து ஒன்று 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மர்தா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பர்ஹி பகுதியில் வந்தபோது, மேலே இருந்த உயரழுத்த மின் கம்பி மீது உரசியதாக […]

இலங்கை

இலங்கை: விகாரையொன்றில் துப்பாக்கி பிரயோகம்: பொலிஸார் தீவிர விசாரணை

மஹியங்கனை, தம்பனை, குகுலபொல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளபப்ட்டுள்ளது. இன்று முற்பகல் இந்த சம்பவம் பதிவாகியுளளது. இந்த சம்பவத்தில் விகாரையில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். . விகாராதிபதி உறங்கிக் கொண்டிருந்த அறையை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். . துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.      

ஆசியா

ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகள்!

  • March 11, 2024
  • 0 Comments

மார்ச் 11, 2011 அன்று ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையின் சில பகுதிகளில் 9.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், சுனாமியும் ஏற்பட்டது. இந்நிலையில் இந்நிகழ்வு இடம்பெற்று இன்றுடன் (11.03) 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ஜப்பான் மக்கள் மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். குறித்த சுனாமியால் ஃபுகுஷிமா மாகாணங்களில் சுமார் 20,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நாடோரி நகரில், சுமார் 400 பேர் பிரார்த்தனை செய்து, துயரச் செய்திகளை ஏந்திய பலூன்களை […]

ஐரோப்பா

டிரம்ப்பின் வரவால் உக்ரைனுக்கு காத்திருக்கும் நெருக்கடி : ஹங்கேரிய பிரதமர் கடும் எச்சரிக்கை

டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால், உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிராக போரிடுவதற்கு உதவ மாட்டார் என்று ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கான டொனால்ட் டிரம்ப்பின் முயற்சியை ஆதரிக்கும் ஆர்பன், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தலில் முன்னணியில் இருக்கும் டிரம்பை வெள்ளிக்கிழமை புளோரிடாவில் சந்தித்து பேசிய பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார். “உக்ரைன்-ரஷ்யா போருக்கு அவர் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டார், எனவே போர் முடிவுக்கு வரும்” என்று ஹங்கேரிய பிரதமர் […]

பொழுதுபோக்கு

19 வயதில் அந்தரங்க டார்ச்சர்.. ஷாக் கொடுத்த நடிகைக்கு கொட்டு வைத்த பயில்வான்

  • March 11, 2024
  • 0 Comments

இப்போதெல்லாம் நடிகைகள் தங்களுக்கு நடக்கும் அந்தரங்க தொல்லைகள் குறித்த விஷயங்களை பகிரங்கமாக தெரியப்படுத்தி வருகின்றனர். சோசியல் மீடியாவின் புழக்கம் அதிகமாக இருப்பதால் சம்பந்தப்பட்டவர்களின் முகத்திரை இதன் மூலம் கிழிந்து வருகிறது. அப்படித்தான் தற்போது பாலிவுட் நடிகை அங்கிதாவும் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் பற்றி ஓப்பனாக தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் முன்னாள் காதலி ஆன இவர் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால் இதற்கு முன்பே அவர் சினிமா வாய்ப்புகளை தான் தேடி இருக்கிறார். அப்போது தனக்கு […]

உலகம்

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு : 50 படுகாயமடைந்துள்ளதாக தகவல்!

  • March 11, 2024
  • 0 Comments

சிட்னியில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு பயணித்த சிலி விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதில் 50 பேர் காயமடைந்துள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. LATAM ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையொன்றில், “விமானத்தின் போது ஒரு தொழில்நுட்ப நிகழ்வு வலுவான இயக்கத்தை ஏற்படுத்தியது” என்று கூறியது. குறித்த விமானம் ஆக்லாந்தில் தரையிறங்கியபோது, அவசரகால வாகனங்களில் பயணிகள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு நோயாளி ஆபத்தான நிலையில் இருப்பதாக நம்பப்படுகிறது. விமானம் திடீரென கீழே விழுந்தபோது […]

இலங்கை

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்பட்டு வருகின்றன. இதற்காக இம்மாதம் 22 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி www.onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை

இலங்கையில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

  • March 11, 2024
  • 0 Comments

இலங்கையில் 252 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சமால் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் பதவி விலகி 05 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் தற்போதைய சுகாதார அமைச்சரும் இதற்கான தீர்வை முன்வைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை பிரதேச மருத்துவ மனைகளில் மருந்து கொள்வனவிற்கு நிதி வழங்கும் திட்டமொன்று நடைமுறையில் இருப்பதாக கூறிய அவர் இந்த முறை மூலம் முறைக்கேடுகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆசியா

இஸ்ரேலின் ஜனாதிபதி கீர்ட் வைல்டர்ஸ் இடையே முக்கிய சந்திப்பு

இஸ்ரேலின் ஜனாதிபதி, ஐசக் ஹெர்சாக், நெதர்லாந்திற்கு பயணம் செய்துள்ளார். அங்கு அவர் வார இறுதியில் நாட்டில் முதல் ஹோலோகாஸ்ட் அருங்காட்சியகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இன்று காலை, இஸ்லாம்-எதிர்ப்பு சுதந்திரக் கட்சியின் தலைவரான Geert Wilders ஐ அவர் சந்தித்தார்,. சந்திப்பு தொடர்பில் வைல்டர்ஸ் தெரிவித்துள்ளதாவது”’நான் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் உடன் ஆம்ஸ்டர்டாமில் ஒரு சிறந்த சந்திப்பை நடத்தினேன். அவர் நெதர்லாந்திற்கு வருகை தந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு […]

இலங்கை

சர்வதேச ரீதியில் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்ட 43 இலங்கையர்கள்

இலங்கையில் செயற்படும் குற்றக் கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடையாளம் காணப்பட்ட மற்றும் தேடப்படும் குற்றவாளிகளுக்கு எதிராகவும் சிவப்பு நோட்டீஸ்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் தஞ்சம் புகுந்த தேடப்படும் குற்றவாளிகள் தற்போது வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, […]