இலங்கை

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச்சூடு!

  • March 11, 2024
  • 0 Comments

எல்பிட்டிய, ஹொரங்கல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

இலங்கையில் வெங்காயத்தின் விலை 1000 ரூபாவை தொடும் என எச்சரிக்கை!

  • March 11, 2024
  • 0 Comments

இலங்கையில் வெங்காயத்தின் விலை 1,000 ரூபாவை தொடும் என இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மொத்த வியாபார சந்தையில், பெரிய வெங்காயத்தின் விலை நேற்றையதினம் 580-600 ரூபா வரை அதிகரித்து, சில்லறை விலையாக 700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மாத்திரமே இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கையிருப்பில் உள்ளதாகவும், பாகிஸ்தானின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால் வெங்காய இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியா தனது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதித்து சில மாதங்கள் […]

ஐரோப்பா

இரு மடங்கு ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ள ஐரோப்பிய நாடுகள்

2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தை விட ஐரோப்பிய நாடுகள் 2019 முதல் 2023 வரை இரு மடங்கு ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2022 இல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைன் மிகப்பெரிய ஐரோப்பிய ஆயுத இறக்குமதியாளராக உருவெடுத்தது. பிப்ரவரி 2022 முதல் உக்ரைனுக்கு குறைந்தபட்சம் 30 மாநிலங்கள் இராணுவ உதவி வழங்கிய பிறகு, 2019 மற்றும் 2023 க்கு இடையில் உலகின் நான்காவது […]

இந்தியா

பல இலக்குளை துல்லியமாக தாக்கும் ஏவுகணையை பரிசோதித்த இந்தியா!

  • March 11, 2024
  • 0 Comments

பல இலக்குகளை  துல்லியமாக தாக்கக்கூடிய  உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏவுகணையின் முதல் சோதனை ஓட்டத்தை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணையானது பல இலக்குகளை தாக்கிவிட்டு  மீண்டும் வரக்கூடிய வகையில் மறு நுழைவு வாகனங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது என்று அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவுடனான அதன் மூலோபாயப் போட்டி வளர்ந்து வருவதால், இந்தியா 1990 களில் இருந்து அதன் நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை உருவாக்கி வருகிறது. 2021 ஆம் […]

இலங்கை

கொம்பனித்தெருவில் இரு அடுக்குமாடி குடுயிருப்பாளர்களிடையே சுவரால் ஏற்பட்ட அமைதியின்மை!

  • March 11, 2024
  • 0 Comments

கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இன்று மதியம் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. கொம்பனித்தெரு ரயில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும், கொம்பனித்தெரு லேக்சைட் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும் இடையில் மதில் சுவரொன்று தொடர்பில் ஏற்பட்ட தகராறினால் இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இதன்போது ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொம்பனித்தெரு லேக்சைட் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் தங்களது நுழைவு வீதிக்கு குறுக்கே சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக கூறி அதனை இடிக்க நடவடிக்கை எடுத்தனர். இதனை தொடர்ந்து கொம்பனித்தெரு ரயில் […]

இலங்கை

ரமழான் மாதத்திற்கான பிறை தென்பட்டது: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு

புனித ரமழான் நோன்பு செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஹிஜ்ரி 1445 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு திங்கட்கிழமை (11) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. நோன்பு பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப்பிறை இன்று மாலை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் புனித நோன்பு பெருநாள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

இந்தியா

காளிக்கு நடத்தப்பட்ட பூஜை… பண்ணை வீட்டில் சிக்கிய மனித மண்டை ஓடுகளால் பரபரப்பு!

  • March 11, 2024
  • 0 Comments

கர்நாடகாவில் ஒரு பண்ணை வீட்டில் 30-க்கும் மனித மண்டை ஓடுகளை வைத்து நள்ளிரவு பூஜை நடத்தியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ராமநகரா மாவட்டம், பிடாடி அருகே ஜோகனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நள்ளிரவில் பயங்கரச் சத்தம் கேட்டுள்ளது. அத்துடன் பூஜை செய்யும் சத்தமும், மந்திரங்கள் ஒலிக்கும் சத்தமும் கேட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த சத்தம் அதிகமானது. இதனால் அப்பகுதியில் குடியிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் அந்த பண்ணை வீட்டில் […]

பொழுதுபோக்கு

நடிகர் சிரஞ்சீவியுடன் இரட்டை வேடத்தில் நடிக்கும் த்ரிஷா… ரசிகர்கள் உற்சாகம்!

  • March 11, 2024
  • 0 Comments

நடிகர் சிரஞ்சீவியுடன் நடிகை த்ரிஷா தெலுங்குப் படமான ‘விஸ்வாம்பரா’ படத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்பு ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிப்பதாகக் கசிந்துள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சினிமாத் துறையில் இருபது வருடங்களைக் கடந்தும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. குறிப்பாக, தமிழில் ‘96’ படத்திற்குப் பிறகு அவருக்கான கிரேஸ் இன்னும் அதிகமாகியது. ‘பொன்னியின் செல்வன்’ பட சமயத்தில் அந்த கிரேஸ் உச்சத்தைத் தொட்டது என்றே சொல்லலாம். இப்போது அஜித், […]

இலங்கை

திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவர் உயிரிழப்பு!

  • March 11, 2024
  • 0 Comments

இல்லங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட பாடசாலை மாணவர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். திருக்கோவில் மெதடிஸ்த மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார். போட்டியின் போது திடீரென சுகவீனமடைந்த மாணவி சிகிச்சைக்காக திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இதனிடையே திருக்கோவில் வைத்தியசாலையில் மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக்கூறி பிரதேசவாசிகள் வைத்தியசாலைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. […]

உலகம்

ஸ்வீடன் பாராளுமன்ற நுழைவாயிலை முற்றுகை இட்டு போராட்டம்

கிரேட்டா துன்பெர்க் மற்றும் பிற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திங்களன்று ஸ்வீடனின் பாராளுமன்றத்தின் முக்கிய நுழைவாயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் அரசியல் செயலற்ற தன்மைக்கு எதிராக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “காலநிலை நெருக்கடி மோசமடையப் போகிறது, எனவே இது எங்கள் பொறுப்புகள், செயல்பட வாய்ப்புள்ள அனைவரும் அவ்வாறு செய்ய வேண்டும். எங்களுடன் சேரவும், காலநிலை நீதி இயக்கத்தில் சேரவும் நாங்கள் அனைவரையும் ஊக்குவிக்கிறோம்,” என்று துன்பெர்க் கூறியுள்ளார். “அரசியல்வாதிகள் செயல்படவில்லை. நாங்கள் இன்னும் […]