இலங்கை

சந்திரிக்கா எடுத்த அதிரடி முடிவு : தடுமாற்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

  • March 18, 2024
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை பெற விருப்பம் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். கடந்த சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய கூட்டணி தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டமும் அண்மையில் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இந்த நெருக்கடி நிலை குறித்தும் […]

உலகம்

அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்தை முறித்த நைஜர்

  • March 18, 2024
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும் தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் அந்த நாட்டின் ராணுவம் அவரை சிறைபிடித்து ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின்னர் நைஜரில் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. இதன்பின்னர் அங்கே அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தநிலையில் அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக நைஜர் அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் நாட்டில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ படைகளும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

இலங்கை

இலங்கை மக்களுக்கு முகக் கவசம் அணியுமாறு எச்சரிக்கை!

  • March 18, 2024
  • 0 Comments

நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும், அதனை தவிர்த்துக்கொள்ள முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர மேற்படி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,   கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள தூசியின் அதிகரிப்பு சுவாச பிரச்சினைகள் ஏற்படும். […]

இந்தியா

கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ; இருவர் பலி, 14 பேர் மீட்பு!

  • March 18, 2024
  • 0 Comments

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கட்டுமான பணியின் போது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 14 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் கார்டன் ரீச் பகுதியில் 5 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. உரிய அனுமதியின்றியும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றியும் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக கூற்பபடுகிறது. இன்று அதிகாலை இங்கு தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த போது, […]

உலகம்

காசா மோதலில் 13 ஆயிரம் குழந்தைகள் பலி!

  • March 18, 2024
  • 0 Comments

காஸா பகுதியில் நடந்து வரும் மோதல் காரணமாக 13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்த தாக்குதல்களில் காயமடைந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதிகமான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்வதாக அந்த அமைப்பு கூறுகிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரினால் காஸா பகுதியில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை

இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ADB அனுமதி..

  • March 18, 2024
  • 0 Comments

இலங்கைக்கு 100 மில்லியன் டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இது இந்நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் நலனுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி பழத்தால் 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

  • March 18, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் ஸ்ட்ராபெர்ரி பழம் அதிகமாக சாப்பிட்ட சிறுவன் மரணமடைந்த விவகாரத்தில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர். குறித்த 8 வயது சிறுவன் பாடசாலையில் நிதி திரட்டும் பொருட்டு ஸ்ட்ராபெர்ரி பழங்களை அதிகமாக சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தூக்கத்தில் இருந்த சிறுவனை எழுப்பிய பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்த அந்த பெற்றோர், சிறுவன் ஒவ்வாமை அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவனுக்கு Benadryl அளித்துள்ளதாகவும், குளிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். எந்த […]

இலங்கை

வவுனியாவில் யானை தாக்கி நபர் ஒருவர் பலி!

  • March 18, 2024
  • 0 Comments

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவரை யானை தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர். செட்டிகுளம், மருதமடுப் பகுதியில் நேற்று (17.03) மாலை வீதியால் பயணித்த முதியவர் ஒருவரை அப் பகுதிக்கு வந்த யானை தாக்கியுள்ளது. இதனால் படுகாயமடைந்த குறித்த முதியவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். செட்டிகுளம், மருதமடுப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய தனபாலகே அனுர தென்னக்கோன் என்பவரே மரணமடைந்தவராவார். இச் சம்பவம் தொடர்பில் […]

பொழுதுபோக்கு

பப்லுவுடன் பிரிவு… காரணத்தை போட்டுடைத்தார் ஷீத்தல்.. இதெல்லாம் ஒரு மேட்டராடா???

  • March 18, 2024
  • 0 Comments

நான்கு சுவர்கள் படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பப்லு பிருத்விராஜ். அந்தப் படத்துக்கு பிறகு சிறு வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அவர் குறித்து கடந்த சில மாதங்களாக சர்ச்சை ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இதுகுறித்து பப்லுவுடன் உறவில் இருந்த ஷீத்தல் தற்போது விளக்கம் அளித்திருக்கிறார் 90களில் ஃபேமஸான நடிகராக வலம் வந்த அவர் பீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பீனாவுக்கும் பப்லுவுக்கும் ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு ஆட்டிஸம் குறைபாடு இருக்கிறது. […]

இலங்கை

மருதங்கேணி- காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு !

  • March 18, 2024
  • 0 Comments

மருதங்கேணி கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் தெப்பம் மீது இனந்தெரியாத படகு மோதியதில் காணாமல் போன மீனவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை கரையொதுங்கியுள்ளது. மருதங்கேணியைச் சேர்ந்த 61 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . குறித்த நபர் சனிக்கிழமை (16) அதிகாலை 4.00 மணியளவில் தெப்பத்தில் சென்று மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது இனந்தெரியாத படகு ஒன்று தெப்பத்தை மோதியுள்ளதுடன் , இதில் தெப்பம் கரையொதுங்கியுள்ள நிலையில் மீனவர் காணாமல் போயிருந்ததாக […]