2027 ஆம் ஆண்டுவரை நீளும் அமெரிக்கா – ஈரான் போர் : பின்னணியில் இருக்கும் காரணம்
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் 2027 ஆம் ஆண்டு வரையிலும் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்தும் பணியை 2027 வரை நீட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியக் கிழக்கில் நிலவும் இந்த மோதல் போக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசியல் எதிர்காலத்தை நீட்டிக்கும் உத்தியின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஈரானுக்கு எதிரான ஒரு குறுகிய மற்றும் தீர்க்கமான இராணுவ நடவடிக்கையாக ஹெக்ஸெத் ஆரம்பத்தில் முன்வைத்த திட்டம், தற்போது கணிசமாக வளர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா தற்போது மத்திய கிழக்கில் சுமார் 50,000 துருப்புகள், 19 போர்க்கப்பல்கள், போர் விமானப் படைப்பிரிவுகள், வான் பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் பாராசூட் வீரர்களை நிலைநிறுத்தியுள்ளது.
இராணுவ வான் பாதுகாப்புப் பிரிவுகளின் நிலைநிறுத்தம் ஒன்பது மாதங்களிலிருந்து 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஐரோப்பா மற்றும் பசிபிக் பகுதிகளிலிருந்து மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்ட சில பிரிவுகள் ஒருவருட காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




