இலங்கை: கோப் குழுவிலிருந்து தயாசிறி ஜயசேகர இராஜினாமா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் (COPE) இருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள தலைவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) அரகலயவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவும், மக்களை மதிக்கவும் தவறியிருப்பது துரதிஷ்டவசமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஊழலை […]













